வாலிப ஊழிய மோகம் எங்கே செல்லுகிறது

வாலிப ஊழிய மோகம் எங்கே செல்லுகிறது!

இன்றைய ஊழியங்களில் எதில் சீக்கிரம் முன்னேறலாம் என்று பார்த்து அதில் வாலிபர்கள் தள்ளப்படுகிறார்கள்!

அதில் சில!

1. தீர்க்கதரிசனம் சொல்வது.
2.  எளிதில் பிசாசின் மோதிரத்தினால் அற்புதம் செய்வது.
3. ஆராதனை வீரர்கள் போன்ற ஊழியங்களில் சீக்கிரம் பிரபலமடைந்துவிடலாம்.

அதோடு பணம்,புகழ்,செல்வாக்குகள் ஒங்கும்! ஒரு ஆல்பம் போட்டுவிட்டால் அப்புறம் 10 சபைகளில் கூப்பிட்டு பிரபலமடைய செய்துவிடுவார்கள் போன்ற நோக்கமே காரணம்.

இதை நோக்கியே இன்றைய
இளைஞர்கள் கூட்டங்கள் படையெடுக்கிறது.

இதை அறிந்துக்கொண்ட சில  வியாபார நோக்கமுள்ள ஊழிய முதலைகள் இதை விற்ப்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்க்காக தீர்க்கதரிசன வகுப்புகள்,
அற்புதங்கள் செய்யும் வகுப்புகள்.
போன்ற மாய்மாலத்தை ஏற்ப்படுத்தி
ரூபாய் 30,000,50,000, 100,000 கொடுத்து
பட்டத்தையும் வாங்கி வைத்துவிட்டு சபை சபையாய் வாய்ப்பு தேடுகிறார்கள்.

அதற்க்கு தகுந்தார்போல் இன்றைய உள்நாட்டு ,வெளிநாட்டு சபைகளும் அற்புதம்,தீர்க்கதரிசனம், ஆராதனை மோகங்களிலும், கூத்துகளிலேயும்
நாட்டம் கொண்டு சத்தியத்தை விலக்கி வைத்து மக்களை பிரியப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐயோ! என் தேசம் பெரிய அழிவை நோக்கி ஒடுகிறதே! கண்டுக்கொள்ள ஒருவனுமில்லையே!!!

இப்படிப்பட்டவர்கள் குருகிய காலங்களில் அதிகபணம் சம்பாதித்து வரும்பொழுது
சத்தியம் டான்ஸ் ஆடுகிறது.  குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் ஊழியத்தை பிச்சி எடுத்து சின்னா பின்னமாய் மாற்றிவிடுகிறார்கள்.

இரவா,பகலா தெரியாத ஆராதனை கூட்டங்கள், கலர் கலர் டிஸ்கோ டான்சர்கள்,
கலர் கலர் பல்புகள்,புகை போட்டு, மக்களை ஆராதனை பெயரில் ஏமாற்றுகிறார்கள்.

பார்த்தால் சினிமாக்காரன் தோற்க்கும் அளவிற்க்கு
இன்றைய கிறிஸ்தவ ஊழியர்கள்,ஆராதனை வீரர்கள் கும்மியடிப்பதை பார்த்தால்!!

இயேசப்பா நீங்க சீக்கிரம் வந்துடுங்க!
தாங்க முடியல இந்த தேசத்தின் கொடுமைகளை என மனது சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

நாம் வேதத்தின்படி யோசித்தால்?
இது யாருக்கு செய்யும் ஆராதனைகள்?
யாரை மேன்மைப்படுத்தும் ஆராதனைகள்?
சிலுவை சுமந்த கிறிஸ்துவுக்கா?
என்பது சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது!

இதற்காக நீங்கள் காட்டும்  வேத மாதிரி ஒன்றே, ஆனால் அவனை இப்படி செய்ய சொன்னதாக வேதம் கூறவில்லை!ஆராதனை என்றாலே   தாவிது கூத்தாடினான்,தாவிது ஆராதனை வீரர்கள்  ஏற்ப்படுத்தினான். நான் சொல்றேன் விழுந்துபோனதும் தாவிதுதான்.

இயேசு இந்த ஆராதனை  செய்தாரா?
இயேசு இதை கேட்டாரா?
பவுல் இப்படி செய்தாரா? கேட்டாரா?
யோவான் செய்தாரா?கேட்டாரா?
அல்லது இயேசுவின் காரியங்களை கண்டும்,கேட்டும், அறிந்து எழுதின,
அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர் லூக்கா கேட்டாரா?
இயேசுவின் தாயாகிய மரியாள் கேட்டார்களா?

அல்லது இயேசுவின் சகோதரர்கள் கேட்டார்களா?

யாருமே கேட்க்காமல் யாரை பிரியப்படுத்தப்பா செய்றிங்க!

பழையக்கால பரிசுத்தவான்கள் இன்று இருந்தால் உங்களாலே ,உங்களுக்காகவே இரத்த சாட்சியாய் மரித்திருப்பார்கள்?

எல்லாவற்றிற்க்கும் காரணம் ஒன்றே பணம்! பணம் ! பணம்!

தேசமே மனந்திரும்பு! இனி காலம் செல்லாது! இதுவே கடைசிகாலத்தின் அடையாளம்!

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்