வேத வசனங்கள் உயிருள்ளவை என்று நிருபிக்கும் சரித்திர பதிவுகள்

வேத வசனங்கள் உயிருள்ளவை என்று நிருபிக்கும் சரித்திர பதிவுகள்.



பரிசுத்த வேதாகமம் ஓர் மிகபெரிய பொக்கிஷம் என்பதை மீண்டும் மீண்டும் பல ஆராய்சிகள் நிருபித்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் இந்த பதிவு வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது. வேதாகமத்தில் உள்ள பெயர்கள் பலவற்றை நாம் படித்திருந்தாலும் பலரையும் நாம் பெரியதாக கருதுவதில்லை. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலரது வாழ்க்கை சரித்திரம் தேவனுக்கு முக்கியமாகபட்டது. இந்த சரித்திர சுவடுகளின் உண்மையை இங்கே உங்களுக்காக......

மார்ச்/ ஏப்ரல் 2014 ங்கில் புதைபொருள் ஆராய்ச்சியை சேர்ந்தவர்கள் ஓர் அறிய புத்தகத்தை வெளியிட்டனர். அதில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பல சரித்திர ஆதாரங்களை வைத்து முதல் 50 நபர்களை பெயர்களை உறுதிபடுத்தி உள்ளனர். இதில் பாரசீகர்கள், ஆசிரியர்கள், ராஜாக்கள், எகிப்த்தை ஆண்ட பாரோக்கள், ஆசாரியர்கள், ராஜக்க்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று வேதாகம பெயர்கள் நீண்டு கொண்டே போகிறது. இந்த குறிப்பு உங்களுக்காக......

எகிப்த்தை ஆண்ட பாரோக்கள் (Pharaoh - Ruler in ancient Egypt)

1) Shishak (= Shoshenq I) 945–924 1 ராஜாக்கள் 11:40, இதர வசனங்கள்
2) So (= Osorkon IV) 730–715 2 ராஜாக்கள் 17:4
3) Tirhakah (= Taharqa) 690–664 2 ராஜாக்கள் 19:9 இதர வசனங்கள்
4) Necho II (= Neco II) 610–595 2 நாளாகமம் 35:20, இதர வசனங்கள்
5) Hophra (= Apries) 589–570 எரேமியா 44:30.

Moab அரசர்
6) Mesha - 9ம் நூற்றாண்டு - 2 ராஜாக்கள் 3:4–27

Aram-Damascus - தமஸ்கு ராஜாக்கள்
7) Hadadezer - 9ம் நூற்றாண்டு 844/842 1 ராஜாக்கள் 11:23, இதர வசனங்கள்
8) Ben-hadad,(Hadadezer (7) என்ற அரசரின் மகன்) 844/842 2 ராஜாக்கள் 6:24, இதர வசனங்கள்
9) Hazael - 844/842–c. 800 1 ராஜாக்கள் 19:15, இதர வசனங்கள்
10) Ben-hadad, (Hazael (9) என்ற அரசரின் மகன்) 9ம் நூற்றாண்டு - 2 ராஜாக்கள் 13:3, இதர வசனங்கள்
11) Rezin - 8ம் நூற்றாண்டு முதல் 732 வரை - 2 ராஜாக்கள் 15:37, இதர வசனங்கள்

இஸ்ரவேல் வட ராஜ்யத்தை சேர்ந்த அரசர்களின் பெயர்கள்
Northern Kingdom of Israel
12) Omri - 884–873 1 ராஜாக்கள் 16:16, இதர வசனங்கள்
13) Ahab - 873–852 1 ராஜாக்கள் 16:28, இதர வசனங்கள்
14) ஜெஹு 842/841–815/814 1 ராஜாக்கள் 19:16, இதர வசனங்கள்
15) Joash (= Jehoash) 805–790 2 ராஜாக்கள் 13:9, இதர வசனங்கள்.
16) Jeroboam ஈ 790–750/749 2 ராஜாக்கள் 13:13, இதர வசனங்கள்
17) மேனஹெம் 749–738 2 ராஜாக்கள் 15:14, இதர வசனங்கள்.
18) Pekah 750(?)–732/731 2 ராஜாக்கள் 15:25, இதர வசனங்கள்
19) Hoshea 732/731–722 2 ராஜாக்கள் 15:30, இதர வசனங்கள்
20) Sanballat “I” சமாரியா ஆளுநர் - governor of Samaria under Persian rule - c. mid-fifth century - நெஹேமியா 2:10, இதர வசனங்கள்

யூதாவின் தென் ராஜ்ஜியம் - Southern Kingdom of Judah
21) David - அரசர் - c. 1010–970 1 சாமுவேல் 16:13, இதர வசனங்கள்
22) Uzziah (= Azariah) - அரசர் 788/787–736/735 - 2 ராஜாக்கள் 14:21, இதர வசனங்கள்
23) Ahaz (= Jehoahaz) - அரசர் - 742/741–726 - 2 ராஜாக்கள் 15:38, இதர வசனங்கள்
24) Hezekiah - அரசர் 726–697/696 - 2 ராஜாக்கள் 16:20, இதர வசனங்கள்
25) Manasseh - அரசர் - 697/696–642/641 - 2 ராஜாக்கள் 20:21, இதர வசனங்கள்
26) Hilkiah - பிரதான ஆசாரியர் - high priest during Josiah’s reign - 640/639–609
2 ராஜாக்கள் 22:4, இதர வசனங்கள்
27) Shaphan - எழுத்தர் - scribe during Josiah’s reign - 640/639–609 2 ராஜாக்கள் 22:3, இதர வசனங்கள்
28) Azariah - பிரதான ஆசாரியர் - high priest during Josiah’s reign - 640/639–609 1 நாளாகமம் 5:39, இதர வசனங்கள்
29) Gemariah - அரசாங்க அதிகாரி - official during Jehoiakim’s reign - 609–598 எரேமியா 36:10, இதர வசனங்கள்
30) Jehoiachin (= Jeconiah = Coniah) - அரசர் - 598–597 2 ராஜாக்கள் 24:6, இதர வசனங்கள்
31) Shelemiah - father of Jehucal the royal official - 7ம் நூற்றாண்டு - எரேமியா 37:3, இதர வசனங்கள்
32) Jehucal (= Jucal) உயர் அதிகாரி - official during Zedekiah’s reign - 597–586
எரேமியா 37:3, இதர வசனங்கள்
33) Pashhur - உயர் அதிகாரியின் தந்தை - father of Gedaliah the royal official - 7ம் நூற்றாண்டு எரேமியா 38:1
34) Gedaliah - உயர் அதிகாரி - official during Zedekiah’s reign - 597–586 எரேமியா 38:1

அசிரியா - Assyria
35) Tiglath-pileser III (= Pul) - அரசர் 744–727 2 ராஜாக்கள் 15:19, இதர வசனங்கள்
36) Shalmaneser V - அரசர் 726–722 2 ராஜாக்கள் 17:3, இதர வசனங்கள்
37) Sargon II - அரசர் - 721–705 ஏசாயா 20:1
38) Sennacherib - அரசர் - 704–681 2 ராஜாக்கள் 18:13, இதர வசனங்கள்.
39) Adrammelech (= Ardamullissu = Arad-mullissu) Sennacherib என்பவற்றின் மகன் மற்றும் ரகசிய கொலை பாதகன் - 7ம் நூற்றாண்டு ஆரம்பம் - 2 ராஜாக்கள் 19:37, இதர வசனங்கள்.
40) Esarhaddon - அரசர் 680–669 2 ராஜாக்கள் 19:37, இதர வசனங்கள்.

பாபிலோன் தேசத்தை சேர்ந்தவர்கள் - Babylonia
41) Merodach-baladan II அரசர் 721–710 and 703 2 ராஜாக்கள் 20:12, இதர வசனங்கள்.
42) Nebuchadnezzar II அரசர் 604–562 2 ராஜாக்கள் 24:1, இதர வசனங்கள்.
43) Nebo-sarsekim - Nebuchadnezzar II அரசவையை சார்ந்த உயர் அதிகாரி 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் - எரேமியா 39:3
44) Evil-merodach (= Awel Marduk = Amel Marduk) அரசர் 561–560 2 ராஜாக்கள் 25:27, இதர வசனங்கள்.
45) Belshazzar - son and co-regent of Nabonidus c. 543?–540 தானியேல் 5:1, இதர வசனங்கள்.

பெர்சியாவை சேர்ந்தவர்கள் - Persia
46) Cyrus II (= Cyrus the Great) அரசர் 559–530 2 நாளாகமம் 36:22, இதர வசனங்கள்.
47) Darius I (= Darius the Great) அரசர் 520–486 எஸ்ரா 4:5, இதர வசனங்கள்.
48) Xerxes I (= Ahasuerus) அரசர் 486–465 எஸ்தர் 1:1, இதர வசனங்கள்.
49) Artaxerxes I Longimanus - அரசர் 465-425/424 எஸ்ரா 4:7, இதர வசனங்கள்.
50) Darius II Nothus - அரசர் - 425/424-405/404 நெஹேமியா 12:22

இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள
http://www.biblicalarchaeology.org/daily/people-cultures-in-the-bible/people-in-the-bible/50-people-in-the-bible-confirmed-archaeologically/
http://www.thegospeltruthnewspaper.tk/
http://www.patheos.com/blogs/danpeterson/2014/03/50-people-in-the-bible-confirmed-archaeologically.html
http://amazingbibletimeline.com/blog/50-biblical-people-confirmed-by-archaeologists/
http://article.wn.com/view/2014/03/16/50_people_in_the_Bible_confirmed_archaeologically/

இயேசு கிறிஸ்து மெய்யான தெய்வம் என்பதை பல விதங்களில் நாம் கண்டு வருகிறோம். பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவத்தையும் நாம் ருசித்து இருக்கிறோம். ஆனாலும் கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் பரிசுத்தர் இயேசுவை விசுவாசிப்பவன் அதிக மேன்மையுள்ளவன்.

இன்னமும் பல ஆராய்ச்சி புதையல்கள் நம்மிடையே உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதனால் வேறு மொழி பேசுபவர்களுக்கு எட்டா கனியாகி விடுகிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட உண்மை பதிவுகளை வேறு இந்திய மொழிகளில் எழுத முடியும் என்றால் நீங்கள் ஓர் முகப்பத்தாக பக்கத்தை ஆரம்பித்து அதில் இப்படிப்பட்ட சரித்திர நிகழ்வுகளை பகிரலாமே?

ஏசுவே மெய்யான தெய்வம். இதில் மாற்று கருத்து நமக்கில்லை. இன்று மக்களை பல விதங்களில் குழப்பி கொண்டிருக்கும் பிசாசானவன் கிறிஸ்தவர்களோடு போராடி வருகிறான். ஆனாலும் விசுவாசிக்கிறவன் பதறான். இயேசு தெய்வம் என்பதற்கு நாம் சாட்சிகளாய் இருக்கிறோம். நிச்சயம் இந்த இனிய பயணம் தொடரும்.

Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

விசுவாசத்தினால் நல்ல போராட்டத்தை போராடு



விசுவாசத்தினால் நல்ல போராட்டத்தை போராடு. மேகம் போன்ற இயேசுவின் மகிமை உன்னோடு கூட வரும்.

லாசரு இறந்து போய்விட்டதாக அறிந்த இயேசு அவனை உயிரோடு கொண்டு வந்தார். அப்போது இயேசு நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய் என்று கூறினார். இந்த வசனம் பல் வேறு நிலைகளில் அறியப்பட்டிருந்தாலும், இது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான வசனமாகும்.

ஏசுவால் கூடாதது ஒன்றும் இல்லை. அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும். வெளியே வா என்று கூப்பிட்ட தேவனின் குரலுக்கு ஓர் பிணம் உயிரோடு வந்தது. இது தேவனின் மகிமை.

நாமும் தேவனின் மகிமையை காண வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதற்காக பலரும் பிரயாசப்பட்டு ஜெபித்து வருகிறோம். ஆனால் இந்த மகிமையை கண்டடைவதற்கு நாம் தகுதியுடையவர்கள் தானா என்று சோதித்தறிவது நலம்.

முதலில் இங்கு லாசருவை பிணமாக காண்கிறோம். பின் இயேசு லாசரு வாழ்க்கையில் அற்ப்புதம் செய்தவுடன் அவன் தேவ மகிமையை கண்டது மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரும் கண்டனர். இன்று பல கிறிஸ்தவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே பாவத்திற்குள் மறித்து பிணமாக வாழ்கின்றனர். உலகமும் பாவத்திற்க்குள் மறித்திருப்பதனால் பிண (பாவ) நாற்றம் மற்றவர்களுக்கு தெரிவதில்லை. இந்த பாவ நாற்றத்திர்க்குள் மூழ்கி மூழ்கி பின் அங்கிருந்தவாறே இயேசு கிறிஸ்து என்ற முத்தை அணிந்து கொள்ள துடிக்கிறோம். ஒரு பக்கம் பாவம், இன்னொரு பக்கம் தேவ பக்தி என்று நடிக்கும் பல கிறிஸ்தவர்கள் "இவை இல்லாமல் மனிதன் வாழ முடியாது" என்று போதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

பாவத்தோடு வாழ்ந்து தேவனை தரிசிக்க முடியாது. ஏன் என்றால் தேவன் எல்லா பாவத்திற்கும் அப்பாற்ப்பட்டவர். பாவத்தை வெறுப்பவர். மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரித்ததே பாவம் தான். இந்த பாவத்தோடு (சிறு பாவம் தானே என்ற நினைப்புடன்) தேவனை ஆராதித்து ஜெபித்து அதை எதிர்பார்த்து வாழும் கிறிஸ்தவ கூட்டம் ஏராளம்.

அன்பானவர்களே... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொண்ட பாவ மன்னிப்பை விளையாட்டாய் எண்ணி விடாதீர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கும். பின் நியாயத்தீர்ப்பின் காலத்தில் அழுது பிரயோஜனமில்லை. விசுவாசியுங்கள். நம்பிக்கையுடன் ஜெபியுங்கள். உங்கள் இயலாமையை தேவனிடத்தில் அறிக்கையிடுங்கள். தேவ பலத்தை நாடுங்கள். பரிசுத்தமானதை நாய்க்கு கொடாதேயுங்கள், தேவனோடு விளையாடாதீர்கள், பாவத்தோடு விளையாடாதீர்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், பின் தேவனிடத்தில் மகிமையை எதிர்பாருங்கள்.

பாவத்தில் செத்திருப்பவர்கள் தேவனின் மகிமையை காணமுடியாது. பாவத்தோடு வாழும் பொது கிடைக்கும் உயர்வு, பணம், வாழ்க்கை அனைத்தும் பிசாசினால் அசீர்வதிக்கப்பட்டிருக்கும். அதன் பலனை நிச்சயம் மரணத்திலும், மரணத்தின் பின்பும் அனுபவிக்க நேரிடும்.

எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. தேவனோடு உண்மையாய் வாழுங்கள். தேவனோடு வாழ்வது போல நடிக்க வேண்டாம்.

தேவன் உங்களின் விசுவாசத்தை பெலப்படுத்துவாராக. ஆமென்.

Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

உலகத்தில் இருப்பவனை காட்டிலும் என் தேவன் பெரியவரே.


பயப்படாதே. தேவன் உன்னுடன் இருக்கிறார் 

தேவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை. அவர் பெரியவர். அவர் உங்களோடு இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார். உலகத்தில் உள்ளவைகள் தங்களுக்காக கவலைப்படும். நமக்காக பரிந்து பேசுபவர் நம் இயேசு ஒருவரே. 

மகா பெரிய தெய்வத்தை சொந்தமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது. இந்த தெய்வத்திற்கு நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறோம். இவர் நம் மூலமாக செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும். அவர் சொல்ல ஆகும், கட்டகளையிட நிற்கும். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றுரைத்தவர் இயேசு ஒருவரே. 

இந்த தெய்வத்தை சொந்தமாக கொண்டிருக்கிற நம்மை அவரை அப்பா என்று அழைக்க அனுமதித்திருக்கிறார். நாம் அவரால் உண்டானவர்கள். மனிதனை படைத்தது தெய்வம் என்றால் அவரை அப்பா என்று அழைப்பதில் தவறில்லையே. உங்களை மார்போடு அணைக்கும் இந்த மாகா பெரிய உன்னதமான தெய்வம் உங்களை நிச்சயம் கைவிடமாட்டார். தம்மோடு சேர்த்துகொள்வார். 

உலகத்தில் இருப்பவனை காட்டிலும் என் தேவன் பெரியவரே. 

ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை
II சாமுவேல் 7:22 

Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

இந்தியாவில் தோன்றிய முதல் ஆலயம்


முதல் ஆலயம் தோன்றிய வருடம் 52ம் வருடம்.
இடம்.... பழையூர், கேரளா. திருச்சூர் பகுதியில் உள்ளது

இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீஷர் பரிசுத்த தோமா அவர்கள் இந்தியாவிற்கு வந்தார். கேர்ளா பகுதிக்கு வந்த இவர் அங்குள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி உரைத்து பின் சபையை நிறுவினார். இது 52ம் வருடம் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

இது இன்று வரை கத்தோலிக்க தேவாலையமாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை சுமந்து வந்த முதல் ஆலயம். கால் மிதிக்கும் தேசம் எல்லாம் நமக்கு சொந்தமாகும். நிச்சயம் இந்தியா இயேசு அண்டை வந்தே தீரும்.

உங்கள் ஆலயங்களை நினைத்து கொள்ளுங்கள். இன்று ஒரு ஆலயமாக நிறுக்கும் உங்கள் ஆலயம் நிச்சயம் பல ஆயிரமாக பெருகும் நாள் வரும். அப்போது தேவனின் மகிமையை மீண்டும் உணர்வீர்கள்.

பரிசுத்த தோமாவால் கட்டப்பட்ட முதல் இந்திய ஆலயத்திற்கு நன்றி செலுத்துவோம். அன்று தோமா போன்ற பாரம் மிகுந்த ஊழியர்கள் வராமல் இருந்திருந்தால் இன்று நாம் வேதாகமத்தை ஏந்தியிருக்க முடியாது. இன்று நீங்கள் தேவனுக்காக எழாவிட்டால் உங்கள் சந்ததி அழிவதை தடுக்கமுடியாது.

தேவனுக்காக வைராக்கியமாய் எழுந்து நிற்போம்.

தேவன் உங்கள் மூலமாக செயல்படுவாராக. ஆமென்.

Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

மத்தேயு 1-ம் அதிகாரம் - கவிதை வடிவில் - Bro. Durai Daniel

மத்தேயு 1-ம் அதிகாரம் - கவிதை வடிவில் - Bro. Durai Daniel

மானுடம் ஒரு முத்தை ஈன்றது
மரியாள் என்ற பெயரில்
அந்த முத்து
ஒரு சொத்தை ஈன்றது
இயேசு என்ற பெயரில்

இயேசுவின் வரலாறு

கன்னி மரியாள்
கர்ப்பந்தரித்தாள்
பரலோக சொத்து
பரிசுத்த ஆவியால்
அவள் வயிற்றில்
வரவு வைக்கப்பட்டது

அண்டசாராசரம் செய்த
ஆண்டவர்
அடைக்கலமானார்
அன்னை மரியின்
கருவறையில்

பரிசுத்த ஆவி தந்தை
பரிசுத்த வித்து குமாரன்
கருவாகி உருவானார்

நிச்சயப்பூ
திருமண மாலையாகுமுன்னே
பழம் பழத்ததேவென எண்ணி
மனம் கலங்கிய
யோசேப்பு

அவமான அம்பெய்தால்
மலரினும் மெல்லிய
மரிமுகம் வதங்கிவிடுமென எண்ணி
இரகசிய திட்டமாய்
அப்புறப்படுத்தும் நாடகத்தை
அரங்கேற்ற எண்ணினான்

தலை நிறைய சந்தேகங்களுடனும்
மனம் நிறைய மயக்கங்களுடனும்
கண்ணீர்த் தலையணையில்
முகம் பதித்து முடங்கியவனை
ஆயிரம் வாட்ஸ் ஒளியொன்று
அதிரடியாய் எழுப்பியது

சந்தேகப்படாதே யோசேப்பே
சத்தியவதியுன் துணைவி
அவள் வயிற்றில் வந்தது
வையகத்தின் சொத்து
பரிசுத்த ஆவி வித்து

தேவதூத சத்தம் கேட்டு
பதறி எழுந்தான்
யேசேப்பு

தேவதூத வாய்
திரும்பவும் மொழிந்தது
பிறக்கும் பிள்ளைக்கு
இயேசென்று பெயரிடு

ஏனெனில் மானுட பாவமெல்லாம்
மறையச் செய்து இரட்சிப்பார்
என்று சொல்லி மறைந்தான்

முன்னமொரு காலத்தில்
மொழிந்தனரே தீர்க்கதரிசிகள்
உரைத்தபடி நடந்ததிதெல்லாம்

கன்னிகைக்கு பிறக்கும்
இம்மானுவேல் குழந்தை
தேவன் நம்மோடிருப்பாரென்பதே
இம்மானுவேலின் பொருளாகும்

தூதகட்டளை சிரமேற்கொண்டு
மனைவியெனும் மல்லிகையை
வாழ்வென்னும் மாலையில் பொதிந்தான்

குழந்தைப் பேறு கிட்டும்வரை
ரோஜாவாசம் அறியாதிருந்தான்

உலகமுண்டாக்கிய முதல்வர்
முண்னணையில் மலர்ந்தார் 

பகுதி:3 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

பகுதி:3 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்கிறாரா? - Bro. Barnabas

இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக போதகர்கள் தங்கள் கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் உங்கள் குடும்பத்திற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறார் என்று வாக்குத்தத்தம் செய்கிறார்கள்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்கிறாரா?
எத்தனை போதகர்கள் கீழே இந்த வேத வாக்கியத்தை பயன்படுத்தி போதிக்கிறார்கள்
2Ti 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
1Th 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

இந்த வேத வாக்கியங்களை பாருங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாய் இருந்தாலே போதும் நமக்கு துன்பம் வரும் என்கிறார்
அப்படி துன்பம் வரும் போது நாம் எப்படி சமாதானமாக இருக்க முடியும்?

இயேசு கிறிஸ்து எதற்கு வந்து இருக்கிறார்?
Mat 10:34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

இயேசு கிறிஸ்து குடும்பத்தில் பிரிவிணையுண்டாக்க வந்தார்
Mat 10:35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

குடும்பத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது அங்கே பிரிவிணை வருகிறது
மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது தகப்பன் அவனுக்கு
எதிர்த்து நிற்கிறான்
மகள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது தாய் அவளுக்கு எதிர்த்து நிற்கிறாள்
மருமகள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது மாமி அவளுக்கு எதிர்த்து நிற்கிறாள்

குடும்பத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொள்ளும் போது என்னவாகிறது?
குடும்பமே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபருக்கு சத்துருவாகிறது
Mat 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

இயேசு கிறிஸ்துவை இந்த பூமியில் இருந்த போது அவருடைய குடும்பத்தார்களோ அவர்களுடைய சகோதரர்களோ அவரை ஏற்றுக் கொள்ள வில்லை
Joh 7:3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
Joh 7:4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
Joh 7:5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
Joh 1:11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை போல அநேக உபாவத்திரவங்களை சகித்தார்கள்
Mat 10:17 மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்
Mat 10:21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Mat 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

உலகத்திலே நமக்கும் உபத்திரவங்கள் தான் இருக்கிறது
Joh 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இயேசு கிறிஸ்துவினிமித்தம் நமக்கு பாடுபடுகிறதற்கும் அருளப்பட்டு இருக்கிறது
Phi 1:29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
Phi 1:30 நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

நமக்கு மரணபரியந்தம் சோதனைகளுக்கும் போராட்டங்களும் உண்டு
நாம் பாடுகள் மூலமாக தான் நாம் பூரணப்பட முடியும்
Heb 2:10 .... அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

இயேசு கிறிஸ்து நமக்கு கொடுப்பது இந்த பூமிக்குரிய சமாதானம் அல்ல அவர் நமக்கு கொடுப்பது ஆவிக்குரிய சமாதானம்
Joh 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

சமாதானம் சமாதானம் என்று போதிக்கக்கூடிய கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்
Eze 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?