கிறிஸ்தவக் குடும்பம்: மனைவிக்கு தேவன் கொடுத்த கட்டளை என்ன?

செய்தி: Barnabas

கிறிஸ்தவக் குடும்பம்: மனைவிக்கு தேவன் கொடுத்த கட்டளை என்ன?

கிறிஸ்தவ குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த சத்தியத்தை வாசிக்க விரும்புகிறவர்கள் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே ஏற்றுக் கொண்டு அதற்கு மாத்திரமே கீழ்ப்படிவேன் என்று ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் மாத்திரம் வாசியுங்கள்

உலக பிரகாரமாக தங்களுடைய குடும்பங்களை வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் இதை படிக்காதீர்கள் ஏனென்றால் எவ்விதத்திலும் உங்களுக்கு இது பிரயோஜனமாக இருக்கப்போதில்லை மாறாக என் மீது அதிக கோபம் வருவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது

தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள் என்றால் கிறிஸ்து வரும் போது இரட்சிக்கப்பட்டு நித்திய பலனை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த உலகத்தார் சொல்லுகிறபடி உங்களுடைய குடும்பத்தை நடத்துவீர்கள் என்றால் கிறிஸ்து வரும் போது கைவிடப்பட்டு நித்திய ஆக்கினை தான் கிடைக்கும்
1Co 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

1) மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்
Eph 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
Col 3:18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனுக்கு மாத்திரமே கீழ்ப்படிய வேண்டும்

மனைவியானவள் எப்படி தங்கள் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்?
கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல கீழ்ப்படிய வேண்டும்

மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியை நாம் அறிந்து கொள்ளுவோம் அது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்

மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற இந்த வார்த்தைக்கு தேவன் ஒரு விசேஷித்த வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்
கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எண் 5293
G5293
ὑποτάσσω
hupotassō
hoop-ot-as'-so
From G5259 and G5021; to subordinate; reflexively to obey: - be under obedience (obedient)
ஒன்றின் கீழாக தங்களை ஆயத்தப்படுத்துதல்
மனைவியானவர்கள் தங்களுடைய புருஷர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் அல்ல
அவர்கள் புருஷர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள்

2) மனைவி தன் புருஷனுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிய வேண்டும்
Eph 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

மனைவியானவள் தன் புருஷனுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?

சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல மனைவியானவன் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்

புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துகிறான் கர்த்தருடைய கட்டளைபடியின் படி அப்படி செய்கிறான்
மனைவியானவள் தன் சொந்த புருஷனுக்கு எல்லாக் கீழ்ப்படிகிறாள் என்றால் கர்த்தருடைய கட்டளையின்படி அப்படி செய்கிறாள்

கிறிஸ்துவுக்குள் இருக்கக் கூடிய புருஷனும் மனைவியும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும் போது தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்

அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் கணவன் மனைவிக்கு பிரச்சனை வருவதற்கு காரணம் இது தான்
1) கணவன் தன் மனைவியினிடத்தில் கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் அன்பு செலுத்தாத போது
2) மனைவி தன் கணவனிடத்தில் கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படியாத போது

3) மனைவி தன் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்க வேண்டும்

Eph 5:33 ,,,, மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனிடத்தில் பயபக்தியாய் இருப்பாள் என்று சொன்னாள் அவள் கர்த்தர் கட்டளையிட்டபடி எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படிந்து நடப்பாள்

4) மனைவியானவள் ஏன் தன் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்?

1Pe 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1Pe 3:2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

கிறிஸ்தவ குடும்பம்: கணவன்

செய்தி: Barnabas

கிறிஸ்தவ குடும்பம் (கணவன்)

புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவாக இருக்கிறதா?
Pro 19:14 .... புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

புருஷனுக்கு புத்தியுள்ள மனைவி இருக்கிறாள் என்றால் அதை அவனுக்கு கொடுத்தவர் கர்த்தர் தான்.

1) ஒருவனுக்கு ஆகாபின் மனைவி யேசபேலை போல துன்மார்க்கமான மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?

தேவனின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்ய ஆகாபைப் போல தன்னை விற்றுப் போட்டு விடுவான்
1Ki 21:25 தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.

2) யேசபேலின் குமாரத்தியை விவாகம் பண்ணின நீதியுள்ள ராஜாவாகிய யோசபாத்தின் குமாரனாகிய யோராமுடைய நிலை என்ன?

இவரும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லப்பானதைச் செய்தான்
2Ki 8:18 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

3) ஒருவனக்கு யோபுவுடைய மனைவியைப் போல் மனைவி அமைந்து விட்டால் அவனுடைய நிலை என்ன?

உபத்திரவ காலகட்டத்தில் தேவனை தூஷிக்கும்படி அப்படிப்பட்ட மனைவிகள் பரியாசம் பண்ணுவார்கள்
Job 2:9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.

4) ஒருவனுக்கு மனைவி ஆமானின் மனைவியாகிய சிரேஷீவைப் போல அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?

நீதிமானை கொலை செய்யும்படி உற்சாகப்படுத்துவார்கள்
Est 5:14 அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளைய தினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

5) சண்டைகாரியுள்ள மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?
Pro 19:13 ... மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

இதற்கு தேவன் என்ன ஆலோசனை கொடுக்கிறார்?

Pro 21:9 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Pro 21:19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Pro 27:15 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Pro 27:16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

6) தேவன் சண்டைகாரியான மனைவியோடு சண்டை போடுங்கள் என்று சொல்லவில்லை அதற்கு பதிலாக புருஷன் அமைதியோடு இருந்து விடுங்கள் என்று தான் சொல்லுகிறார்
Pro 17:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

7) மனைவி எப்படிப்பட்ட குணமுடையவளாக இருந்தாலும் தேவன் புருஷர்களுக்கு கொடுத்த கட்டளை இது தான்
Eph 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; ,,,,,
Eph 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; ,,,
Pro 18:22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

8) அவிசுவாசியான மனைவி தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள்
1Co 7:14 ... அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

9) புருஷன் தன் மனைவியோடு விவேகத்தோடு வாழ்ந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்ய வேண்டும்
1Pe 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவியிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்

பகுதி:2 கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவியினிடத்தில் என்ன செலுத்த வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்?

1) புருஷன் தன் மனைவியிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். இது தேவனுடைய கட்டளை. Eph 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Eph 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.

இன்றைக்கு அநேக குடும்பங்களில் புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துவது குறைவுபடும்போது தான் அங்கே அநேக பிரச்சனைகள் எழும்புகிறது

2) கிறிஸ்து சபையிலே எப்படி அன்பு செலுத்தினார்?
கிறிஸ்து சபைக்காக தம்முடைய ஜீவனையே அதற்காக ஒப்புக் கொடுத்தார்
Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

3) புருஷன் தன் மனைவியிடத்தில் எப்படி அன்பு செலுத்த வேண்டும்?
Eph 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
சொந்த சரீரங்களாக பாவித்து அன்பு செலுத்து வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் போது தன்னில் தான் அன்பு கூருகிறான்

4) எந்தவொரு ஒரு புருஷனும் தன்னுடைய சொந்த மாம்சத்தை பகைப்பது இல்லை என்பது நமக்கு தெரியும். Eph 5:29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே...

தேவனுடைய பிரமாணத்தின்படி புருஷன் தன் மனைவியை தன் சொந்த சரீரமாக பாவித்தால் அவளுடைய எல்லா தேவைகளையும் அவன் நிறைவேற்றுவான் அவளை பகைக்க மாட்டான்

5) புருஷன் தன் மனைவியை போஷித்து காப்பற்ற வேண்டும்
Eph 5:29 ,,, கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
கர்த்தர் சபையை போஷித்து காப்பற்றுகிறது போல அவளை காப்பற்ற வேண்டும்

6) மனைவியானவள் புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிறாள் 
Eph 5:30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

7) புருஷனும் மனைவியும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள் 
Eph 5:31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியுடன் இசைந்து இருக்கும் போது தான் அவர்கள் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்

8) மனைவிக்கு எப்படி பிரியமாய் இருக்க வேண்டும் என்று புருஷன் கவலைப்பட வேண்டும்.
1Co 7:33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.

மனைவியானவள் தன் கணவனுக்கு கீழ்ப்படிந்தாலும் சரி கீழ்ப்படியாவிட்டாலும் சரி அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்
ஏனென்றால் நீங்கள் அன்பு செலுத்தும் போது கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறீர்கள்

9) அநேகர் தங்களுடைய மனைவியை திட்டிக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு தேவன் கொடுக்கக்கூடிய கட்டளை இது தான்
Col 3:19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

புருஷன் தன் மனைவியை கசந்து கொள்ளக் கூடாது

கிறிஸ்தவ புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துகிறான் என்றால் அது கிறிஸ்துவின் கட்டளையின் நிமித்தமாக அப்படி செய்கிறான்

கர்த்தருக்கு சித்தமானால் இந்த சத்தியங்களை தொடர்ந்து படிப்போம்

பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள் - Bro. Durai Daniel

பாலியல் உறவு மட்டுமல்ல. பாலியல் தூண்டுதலும் திருமண உறவுக்காகவே
படைக்கப்பட்டது.பாதுகாப்பான இன்பமும், இனவிருத்தியுமே அதன் நோக்கம்.
அதற்காகவே தேவன் அதை உண்டாக்கினார்.

ஆனால் இன்றைய வாலிபர்களும், வாலிப பெண்களும் வேறு மாதிரியான கருத்து கொண்டுள்ளனர். அதாவது பாலியல் தூண்டுதல் கொடுப்பதிலோ பெறுவதிலோ தவறில்லை. ஆனால் பாலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். நோ. இல்லை. அப்படி இல்லவே இல்லை. பாலியல் அனுபவத்தைப் பெற உடம்பை தயார் படுத்தவே இந்தப் பாலியல் தூண்டுதலை (Sexual arousal) தேவன் படைத்துள்ளார். தூண்டுதல் பெற்ற உடல் பாலியல் உறவில்தான் (Intercourse) திருப்தியடையும். அதுவரை உடல் திருப்தியடையாது. ஆகவே பாலியல் தூண்டுதலை அனுபவித்து விட்டு உடலுறவு மட்டும் செய்ய மாட்டேன். அப்படிப்பட்ட சுயகட்டுப்பாடு எனக்கு உண்டு என்பது சுத்த பைத்தியக்காரத்தனம். நெருப்போடு விளையாடிவிட்டு காயம்படாமல் தப்பிப்பது கூடாத காரியம்.

போன் பேசுவது, கடிதம் எழுதுவது, நெட் சாட்டில் உணர்ச்சி பொங்க உரையாடுவது, நேரில் சந்திப்பது, நெருங்கி அமர்ந்து பேசுவது, தொட்டு பேசுவது, இரட்டை அர்த்த வசனங்களோடு உரையாடுவது, ஆபாச உணர்வுகளைத் தூண்டும் வகையிலான சினிமா பார்ப்பது, பத்திரிக்கை படிப்பது, இணையதளங்களை பார்வையிடுவது, etc... இவை போன்ற பல காரியங்கள் பாலுணர்வைத் தூண்டிவிடும் காரணிகளாகும். இவைகளில் ஈடுபட்டுவிட்டு பாவம் செய்யாமல் தப்பிப்பது கூடாத காரியம். ஆகவே இனி யாரும் பாலியல் உறவுக்கு மட்டுமல்ல பாலியல் தூண்டுதலுக்கும் விலகியோடுங்கள். பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள். மணவாளன் வரும்போது கற்புள்ள கன்னிகையாக உங்களை ஒப்புக்கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க இயேசு நாமம்!

கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் எப்படிப்பட்ட நடக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்?

கிறிஸ்தவ குடும்பம்: புருஷன்(கணவன்) எப்படிப்பட்ட நடக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்?

புருஷன் தன் மனைவியினிடத்தில் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்றும் அவளுக்கு செய்ய வேண்டிய கடமையை எப்படி செய்ய வேண்டும் எனபதைக் குறித்துக் கற்றுக் கொண்டு இருக்கிறோம்

இப்போது புருஷன் எப்படிப்பட்ட நடக்கையுள்ளவான இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

1) புருஷன் தன் மனைவியினிடத்தில் எந்த சூழ்நிலையிலும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
யோபு தன் மனைவியினிடத்தில் உண்மையுள்ளவராக இருந்தார்
Job 31:9 என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,
Job 31:10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

2) யோபு தன் மனைவியினிடத்தில் எப்படி உண்மையுள்ளவராக இருக்க முடிந்தது?
Job 31:1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?

தன் மனைவி தவிர வேறு எந்த ஸ்திரீயையும் இச்சையோடு பார்ப்பதில்லை என்று யோபு தன் கண்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார்

நாம் நம் கண்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறோமா?

3) பிறனுடைய மனைவியினிடத்தில் பிரவேசிப்பனும் தொடுகிறவனும் ஆக்கினைக்கு தப்பான்
Pro 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிக்கவும் கூடாது அவளை தொடக்கூடாது
ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் தன் ஆத்துமாவை கொடுத்துப்போடுகிறான்
Pro 6:32 ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

4) அநேக கள்ள உறவுகளினால் இன்றைக்கு அநேக கொலைகள் நடக்கிறது.
Pro 6:34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
Pro 6:35 அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

5) புருஷன் தன் மனைவியை நேசிக்கப்படத்தக்க பெண்மானும் அழகான வரையாடுகளைப் போல நினைக்க வேண்டும்.
Pro 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

6) புருஷனுக்கு மனைவியின் ஸ்தனங்களே திருப்தி செய்ய வேண்டும், மனைவியின் நேசத்தால் மட்டும் எப்பொழுதும் மயங்கி இருக்க வேண்டும்
Pro 5:15 உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
Pro 5:16 உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.(பாயலாமா என்று தான் எபிரெய வேதாகமம் சொல்லுகிறது)
Pro 5:17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
Pro 5:18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

7) மனைவியின் நேசத்தால் மட்டும் மயங்கி இருக்கக்கூடிய புருஷன் அந்நிய ஸ்திரீயின் மேல் மயங்கி அவளுடைய மார்பை தழுவுவானா?
Pro 5:20 என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
நிச்சயம் அப்படிப்பட்ட துன்மார்க்கான காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டான்
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

8) புருஷர்களோ வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.
1Co 6:18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

9) புருஷன் சொந்த குடும்பத்தை நன்றாக நடத்தக் கூடியவனாக இருக்க வேண்டும்
1Ti 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
1Ti 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
ஒருவன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருக்கும் போது தேவனுடைய சபையையும் அவனால் வழி நடத்த முடியாது

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கிறிஸ்தவக் குடும்பம் (கணவன் மனைவி, பிள்ளைகள்) எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்

பகுதி:3 கிறிஸ்தவ குடும்பம் - புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்

1) புருஷன்(கணவன்) தன் மனைவியை மாத்திரமே உடையவானாக இருக்க வேண்டும்.
1Co 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும்..... உடையவர்களாயிருக்கவேண்டும்.
வேறொரு ஸ்திரீயை அவன் உடையவான இருப்பான் அவன் வேசித்தனம் செய்கிறான்

2) ஒரு புருஷன்(கணவன்) தன் மனைவியல்லாத ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கும் போது என்னவாகிறது?
Mat 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

3) புருஷன்(கணவன்) தன் மனைவியிடம் அன்பு செலுத்தினால் மாத்திரம் போதுமா? 
இல்லை புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும்
1Co 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; ,,,,,

புருஷன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாத போது அவள் வேசித்தனம் செய்வதற்கு காரணமாகிறான்

4) புருஷனுடைய சரீரத்திற்கு அதிகாரி யார்?
மனைவி தான் புருஷனுடய சரீரத்திற்கு அதிகாரி
1Co 7:4 ,,,, அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

5) மனைவியினுடைய சரீரத்திற்கு அதிகாரி யார்?
புருஷன் தான் மனைவியினுடைய சரீரத்திற்கு அதிகாரி
1Co 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

6) ஆகையால் கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக் கூடாது
1Co 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

உபவாசத்திற்காகவும் ஜெபத்திற்காகவும் சிலகாலம் பிரிந்து இருக்க வேண்டும் என்று இருவரும் சம்மதித்தாலன்றி ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்க வேண்டும்

7) இன்றைக்கு அநேக கிறிஸ்தவ புருஷர்கள் தங்களுடைய மனைவிகளை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்
அப்படி அவர்கள் வேலை செய்யும் போது என்னவாகிறது?
கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பதினால் சோதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது
1Co 7:5 ,,, உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

விரத்துவம்(சுயகட்டுபாடு) இல்லாமையால் சாத்தான் உங்களை தூண்டிவிட்டு கணவனையோ அல்லது மனைவியையோ பாவம் செய்ய வைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது

கணவன் எங்கே இருக்கிறாரே அங்கே மனைவியும் இருக்க வேண்டும் அப்படி இல்லாதபட்சத்தில் அது நம்மை பாவத்திற்கு நேராக வழிநடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது

8) அநேகர் புருஷர்கள் தாங்கள் மனைவியானவளை விட நாம் மேலானவர்கள் என்று நினைத்து கொள்ளுகிறார்கள்
1Co 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
1Co 11:8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
1Co 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

9) மேலே சொன்னது தேவனுடைய சத்தியம் தான் ஆனால் அதற்கு பின்வரும் வசனங்களில் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்
1Co 11:11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
1Co 11:12 ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.

10) ஏவாள் மாத்திரமே ஆதாமிடமிருந்து தோன்றியவள் ஆனால் அதற்கு பிறகு ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயினால் தான் தோன்றுகிறான்
1Co 11:11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.

புருஷனுக்கு எப்படி சரீரம் மனம் இருதயம் ஆத்துமா இருக்கிறதோ ஸ்தீரியானவளுக்கும் அப்படியே இருக்கிறது

11) ஒரு புருஷன் எப்படி இரட்சிக்கப்படுகிறானோ அதைப் போல் தான் மனைவியானவளும் இரட்சிக்கப்படுகிறாள் 
Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
Gal 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

இயேசு கிறிஸ்து சபையிலே அன்பு கூர்ந்தது போல உங்கள் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துங்கள். இயேசு கிறிஸ்து சபையை போஷித்து காப்பற்றுவது போல உங்களை மனைவியை போஷித்து காப்பற்றுங்கள்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கிறிஸ்தவ குடும்ப சத்தியங்களை படிப்போம்

மனப்பூர்வமான பாவங்களுக்கு தேவனிடத்தில் மன்னிப்பு இருக்கிறதா?

மனப்பூர்வமான பாவங்களுக்கு தேவனிடத்தில் மன்னிப்பு இருக்கிறதா?

இன்றைக்கு அநேகர் பாவம் என்று தெரிந்தே அதை செய்து விட்டு தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டால் தேவன் மன்னித்து விடுவார் என்று சொல்லுகிறார்கள்.
Jon 4:2 ,,,,,,,,,,,,,,,,, நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

தேவன் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுள்ள தேவன் என்பதால் நாம் செய்யக்கூடிய எல்லா பாவங்களையும் (துணிகரமாக செய்த பாவங்கள் கூட) நாம் தேவனிடத்தில் அறிக்கையிட்டால் அவர் நிச்சயம் மன்னிப்பார் என்று போதிக்கிறார்கள்

1) நியாயப்பிரமாணத்தில் துணிகரமான பாவங்களுக்கு மன்னிப்பும் இல்ல. 
அதற்கு பலியும் என்பதை தேவன் தெளிவாகவே கட்டளையிட்டு இருக்கிறார்
Num 15:30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
Num 15:31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

2) தேவன் துன்மார்கனை துன்மார்கன் என்றும் நீதிமானை நீதிமான் என்றுதான் நியாயந்தீர்க்கிறார்
Exo 23:7 .......... நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

3) நியாயப்பிரமாணத்தில் அறியாமையினாலே பாவம் செய்தால் அதற்கு மன்னிப்பு இருக்கிறது
Num 15:27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
Num 15:28 அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

4) புதிய ஏற்பாட்டிலும் துணிகரமான பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று பரிசுத்த ஆவியானவர் திட்டவட்டமாக போதிக்கிறார்
Heb 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
Heb 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

5) இயேசு கிறிஸ்துவை கொலை செய்த யூதர்கள் அறியாமையினாலே தான் அப்படி செய்தார்கள்
Act 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்........
Act 3:17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து தான் மேசியா(கிறிஸ்து) என்பதை அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் இரக்கம் பெற்றார்கள்

6) இயேசு கிறிஸ்து சிலுவையில் இருக்கும் போது கீழே இருந்த யூதர்கள் அவர் மேசியா என்று அறியாமல் தான் அவரை பரியாசம் பண்ணினார்கள் அதனால் தான் அவர்களை மன்னிக்கும்படி இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபித்தார்
Luk 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்......

7) அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்து தான் மேசியா(கிறிஸ்து) என்பதை அறியாமல் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தார் அவர் அறியாமையினாலே அப்படி செய்தபடியால் அவருக்கு மன்னிக்கப்பட்டது
1Ti 1:13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.

8) பழைய ஏற்பாட்டில் பாவம் என்று தெரிந்து பாவம் செய்த இஸ்ரவேலர்களுக்கு பலியும் இல்லை மன்னிப்பும் அவர்களுக்கு தண்டனை தான் இருந்தது
Num 15:30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
Num 15:31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

9) புதிய ஏற்பாட்டில் பாவம் என்று தெரிந்து பாவம் செய்கிற கிறிஸ்தவர்களுக்கு செலுத்தத்தக்க வேறொரு பலியும் இல்லை மன்னிப்பும் இல்லை விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினை தான் இருக்கிறது
Heb 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
Heb 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

10) அதனால் தான் தாவீது தேவனிடத்தில் துணிகரமான பாவங்களுக்கு அடியேனை விலக்கி காத்தருளும் என்று ஜெபிக்கிறார்
Psa 19:13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக : இது வைராக்கிய சாட்சி


வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக : இது வைராக்கிய சாட்சி

மோகன் ஷஹ்சாத் பாகிஸ்தானில் வசித்து வரும் கிறிஸ்தவர். இவர் கிறிஸ்தவ புத்தகங்களை மற்றவர்களுக்கு படிக்க கொடுப்பது வழக்கம். இதற்காக பலமுறை மிரட்டப்பட்ட இவர் தான் செய்து வந்த ஊழியத்தை நிறுத்த மறுத்துவிட்டார். இதனால் ஓர் முறை இவரை வழிமறித்து கையை வெட்டி கண் முன்னே வீசினர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியதும் உடனே தன ஊழியத்தை தொடர்ந்தார். கிறிஸ்துவின் அன்பு இவரை நெருக்கி ஏவுகிறது. இன்னொரு கையை வெட்டினாலும் தான் இயேசுவை விடபோவதில்லை என்று வைராக்கியமாய் வாழ்ந்து வரும் இவருக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

என் கைகளை இழந்தாலும் இயேசு என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க விடமாட்டேன். வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக.


கிறிஸ்தவக் குடும்பம்: ஒரு கணவனுக்கு யார் பெண் தோழியாக (Girl friend) இருக்க முடியும்?

செய்தி: Ariyel Barnabas

பாடம்:1 கிறிஸ்தவக் குடும்பம் 

ஒரு கணவனுக்கு யார் பெண் தோழியாக(Girl friend) இருக்க முடியும்?

கிறிஸ்தவக் குடும்பத்தை சேர்ந்த புருஷன் தன் மனைவியினிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தேவன் என்ன கட்டளையிட்டு இருக்கிறார் என்று பார்ப்போம்

1) இந்த பொல்லாத உலகத்தில் அநேக கிறிஸ்தவ ஆண்களுக்கு பெண் தோழிகள்(Girl friend) இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவ பெண்களுக்கு ஆண் தோழர்கள் (Boy friend) இருக்கிறார்கள். உலகத்தில் இன்றைக்கு பெண் தோழிகள் இருப்பதும் ஆண் தோழர்கள் இருப்பதும் பெருமையான விசயமாக கருதுகிறார்கள். இன்றைக்கு அநேக கள்ள உறவுகளும் அநேக விவாகரத்துகளும் அநேக கொலைகளும் இப்படிப்பட்ட உறவுகளினால் தான் ஏற்படுகிறது.

2) ஒரு கணவனுக்கு தேவனுடைய வசனத்தின்படி பெண் தோழி(Girl friend) யாராக தான் இருக்க முடியும்?

Mal 2:14 …. கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

தேவன் மனைவியைப் பற்றி இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறார்

1) மனைவி உன் தோழி
2) அவள் உன் உடன்படிக்கையின் மனைவி

இதற்கு யார் சாட்சியாக இருக்கிறார்?

Mal 2:14 ... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்;

நாம் உடன்படிக்கையின் மூலமாக தான் திருமணம் செய்கிறோம் அந்த உடன்படிக்கையை மரணபரியந்தம் சரியாக இருவரும்(கணவன் மற்றும் மனைவி) கடைபிடிக்கிறோமா என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் தேவன் தான் அதற்கு சாட்சியாக இருக்கிறார்

3) கணவனுக்கு அவளுடைய மனைவி மாத்திரமே தோழியாக (Girl friend) இருக்க முடியும். மனைவிக்கு அவளுடைய கணவன் மாத்திரமே தோழனாக (Boy friend) இருக்க முடியும்.

நம்முடைய கணவன் தவிர வேறு யாராவது நமக்கு தோழனாகவே (Boy friend) அல்லது நம்முடைய மனைவி தவிர வேறு யாராவது நமக்கு தோழியாகவே(Gril friend) இருந்தால் அது தேவனுடைய பார்வையில் வேசித்தனமாக இருக்கிறது. Jam 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

4) இந்த தேவனுடைய கட்டளையை நாம் பின்பற்றினால் நாம் பாவம் செய்வோமா?

1Ti 5:1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
1Ti 5:2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.

தேவன் ஒவ்வொரு கிறிஸ்தவ சகோதரனுக்கும் சகோதரிக்கும் கட்டளையிட்டு இருக்கிற சத்தியம் இது தான்

முதிர்வயதுள்ள ஆண்கள் - தகப்பன்
பாலிய புருஷர்கள் - சகோதரர்கள்
முதிர்வயதுள்ள ஸ்திரீகள் - தாய்கள்
பாலிய ஸ்திரீகள் - எல்லா கற்புடன் உள்ள சகோதரிகள்

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த வசனங்களுக்கு எல்லாம் செவி கொடுப்பதில்லை

5) பெண் தோழிகளை உடைய புருஷர்கள் தங்கள் மனைவியை ஏமாற்றலாம் அல்லது ஆண் தோழர்களை உடைய மனைவிகள் தங்கள் புருஷர்களை ஏமாற்றலாம் ஆனால் தேவனை அவர்களால் ஒருபோதும் ஏமாற்ற முடியாது
* Mal 2:14 ... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்
* Ecc 12:13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
* Ecc 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

கர்த்தருக்கு சித்தமானால் கிறிஸ்தவ குடும்பத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

ஜெபம் கேட்டிட நமக்கு பரம தகப்பன் உண்டு!

ஜெபம் கேட்டிட நமக்கு பரம தகப்பன் உண்டு!

ஜெபிக்கும் சிலாக்கியம் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும். பொதுவாக, ஒரு சத்தத்தை நம் காதுகளினால் கேட்பதைப் போல, தேவன் நம்மிடம் பேசுவதில்லை. ஆனால் நமக்குள்ளிருக்கும் ஆவியில், உணர்த்துதலைக் கொடுத்து தேவன் பேசுகிறார். இதுவும், நாம் காதுகளால் கேட்கும் சத்தத்தைப் போலவே உண்மையான சத்தமேயாகும். அதுபோலவே, நம் மனதின் பாரங்களை ஜெபத்தின் மூலமாய் நாம் பேசுவதையும் தேவன் கேட்கிறார்! நம்முடைய மனதில் ஏற்படும் பாரமான யாவற்றையும் தேவனிடத்தில் கூறும்படியே இயேசு நம்மை ஊக்குவிக்கிறார்!!

இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மெளனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கோ, பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் நமக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் ‘தேவையான’ யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்கவும் முடியும்!

நமக்குரிய சிக்கல்களை தேவன் மாற்றும்படி அவரிடம் நாம் கேட்பதற்கும்; அதன் மூலம் சிக்கல்கள் மாறுவதை ருசிப்பதற்கும்; ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். இது ஜெபத்தினால் விளையும் அற்புதமாகும்! நமக்கு ஏற்படும் சம்பவங்கள் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் ஊறுவிளைவிக்கும்போது, "எது நடந்தாலும் தேவ சித்தம்தான்!" என விதிப்பயனாக நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையே இல்லை! விதிப்பயனுக்கும், தேவனுடைய சித்தத்திற்கு அடங்கி இருப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. ஆம், நமக்குத் ‘தேவையான’ யாவற்றையும் கேட்பதற்கே நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.

வேதாகமத்தில் உள்ள வாக்குதத்தமும், "தேவன் உங்கள் குறைவையெல்லாம் (தேவையெல்லாம் ) நிறைவாக்குவார்" என்றே இருக்கிறது (பிலிப்பியர் 2:19).

இருப்பினும் ஞானமுள்ள எந்த ஒரு தகப்பனைப் போலவே நாம் விரும்புவதையெல்லாம் அவர் தரமாட்டார்! நமக்கு ‘தேவையானவைகள்’ எவைகளோ, நமக்கு நல்லது என அவர் காண்பவைகள் எவைகளோ, அவைகளை மாத்திரமே நமக்குத் தருவார்!

மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்!

மெய்யான மனந்திரும்புதல் வேண்டும்!

சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு மேலாக உயர்த்துவதே விக்கிரக ஆராதனையாகும். அது, பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு பதிலாய் தொழுதுகொள்ளுவதால் அதுவே விக்கிரக ஆராதனையாக மாறுகிறது. இதுவே எல்லா பாவங்களுக்கும் வேர் என்றும் கூறலாம்!

உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்க வேண்டும்!

மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!

நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம் யாதெனில், பிறரை மன்னிக்க முடியாத சுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உடையவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!

ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:15) என உறுதியாகக் கூறினார்.

உங்களுக்கு சொல்லொண்ணா தீமை செய்த ஒருவரை மன்னிப்பதற்கு அதிக கஷ்டமாயிருப்பதாக நீங்கள் உணரலாம். இத்தருணத்தில் நீங்கள் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி, அந்நபரை மன்னிப்பதற்காக உதவி செய்யும்படி அவரிடம் நீங்கள் கேளுங்கள். இவ்வாறு உதவி செய்வதற்கு சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை உங்களுக்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது!!

கண்ணீரை காண்கின்ற தேவன்

கண்ணீரை காண்கின்ற தேவன்

என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?. - (சங்கீதம் 56:8).
.
இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. அதை வாங்கும் தாயோ, மனைவியோ, அந்த போர் வீரனிடம், ‘நீ போவது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
.
நீ வரும்வரை நான் உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருப்பேன். இரவெல்லாம் நான் வடிக்கும் கண்ணீரை இந்த பாட்டிலில் சேர்த்து வைத்து நீ வரும்போது, நீ எனக்கு எவ்வளவு விசேஷித்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உனக்கு பரிசளிப்பேன்’ என்று சொல்வார்களாம்.
.
கி.பி. 100 ம் வருடத்தில், எகிப்தில் உள்ள பார்வோனின் கல்லறையில் நிறைய கண்ணீர் பாட்டில்களை கண்டெடுத்தனர். அவைகள் அந்த பார்வோனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.
.
அமெரிக்காவில் ஒருமுறை உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அநேக போர்வீரர்கள் மரித்தனர். அவர்களுடைய விதவைகள், முதலாம் வருடத்தில் அவர்களின் இறந்த நாளில் கல்லறைகளுக்கு சென்று, அந்த கண்ணீர் பாட்டிலில் உள்ள கண்ணீரை தெளித்து, அந்த முதலாம் நினைவு நாளை கொண்டாடினார்கள். இன்று வரை துக்கத்தில் இருப்பவர்களுக்கு பரிசாக வெளிநாடுகளில் சில இடங்களில் கண்ணீர் பாட்டில்களை கொடுக்கிறார்கள். இப்படத்தில் இருப்பதைப் போன்ற கண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.
.
இந்த கண்ணீர் பாட்டில்கள் நம்வேதத்திலும் எழுதப்பட்டிருப்பது எத்தனை ஆச்சரியம்! நம் தேவன் நம் கண்ணீரை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நம்முடைய கண்ணீர்கள் ஒரு துருத்தியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கினறன. நம்முடைய வேதனைகள், பாடுகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய துருத்தியில் நம் கண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. என் கண்ணீரை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் துக்கங்களை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் தலையணையை நான் கண்ணீரால் நனைக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களை காணும் தேவன் உண்டு, உங்கள் கண்ணீரை கண்டு உங்களுக்கு விடுதலை அளிக்கும் தேவன் உண்டு. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்று சங்கீதம் 22:24 ல் வாசிக்கிறோமே! நம்முடைய உபத்திரவத்தை பார்த்து, அதை அற்பமாய் எண்ணாமல், தம்மை நோக்கி கூப்பிடும்போது, கேட்டு பதில் கொடுக்கும் உன்னத தேவன் நம் தேவனல்லவோ!
.
நம் கண்ணீர் ஒரு நாளும் வீணாய்போவதில்லை. அது அவருடைய துருத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், அவளுக்கு பதிலை கொடுத்ததினால் அல்லவா, அவள் அவருக்கு எல்ரோயி என்று பேரிட்டாள்! ஏல்ரோயி என்பதற்கு ‘என்னை காண்கின்ற தேவன்’ என்று பொருள்.
.
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (1 சாமுவேல் 30:3,4). தங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்று கேள்விபட்டபோது, எந்த தகப்பனால் சும்மா இருக்க முடியும்? தாவீதும் அவனோடு இருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்களாம். அந்த அளவு இருதயபாரத்தால் அவர்கள் நிறைந்திருந்தார்கள். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி; நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அதன்படியே அவர்கள் அந்த தண்டை பின்தொடர்ந்த போது, அவர்களுடைய பகைஞர் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
.
ஒரு வேளை நீங்களும் பெலனில்லாமல் போகுமட்டும் அழுகிறீர்களோ? உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாடுகள் நிமித்தம் யார் என்னை விடுவிப்பார் என்று கதறுகிறீர்களோ? தாவீதின் தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நம் கண்ணீரை துடைக்கிற தேவன். அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு என்னை விடுவியும் என்று அவர் பாதத்தை பிடித்து கொண்டு விடாதிருங்கள். உங்கள் கண்ணீர் அவர் பாதத்தில் சிந்தப்படட்டும். அப்பொழுது ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ - (யோவன் 16:20) என்று நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து உங்கள் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவார். கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். உங்கள் துக்கம் நிச்சயமாகவே சந்தோஷமாய் மாறும். ஆமென் அல்லேலூயா!
.
ஒருநாள், நாம் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, நமது கண்ணீரால் நிறைந்த துருத்தியை நம்மிடம் கொண்டு வந்து நம் தேவன் காட்டுவார், ‘அருமை மகளே, மகனே, இதோ நீ சிந்திய கண்ணீர்! நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் பார், ஒரு சொட்டையும் விடாமல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்’ என்று காட்டுவார். மட்டுமல்ல, தமது புத்தகத்தை திறந்து, எதற்காக கண்ணீர் வடித்தோம் என்பதையும் தாம் எழுதியிருப்பதை நமக்கு காட்டுவார்! அல்லேலூயா!

உணர்வுள்ள மனசாட்சி தேவன்தந்த வரம்!

உணர்வுள்ள மனசாட்சி தேவன்தந்த வரம்!

"ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்படுகிறது" என வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27).

இந்த பூமியில் செய்யும் குற்றங்களுக்கு ‘அநேக மக்கள்’ தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால்... முடிவில் இவர்கள் நியாயாசனத்திற்கு முன்பு நிற்கும்போது தங்களுக்குரிய நீதியான தண்டனையை இவர்கள் நிச்சயமாய் அடைவார்கள்! அதேபோல், அநேக மக்கள் தாங்கள் பிறருக்குச் செய்த நன்மைக்காக இப்பூமியில் பிறரால் பிரதி உபகாரம் தரப்படாமல் இருந்திருக்கலாம்! இருப்பினும், கிறிஸ்து இப்பூமிக்கு திரும்ப வரும்போது அவர்களுக்குரிய பலன் நிச்சயம் அவர்களுக்கு கிட்டும்.

இவ்வாறு நாம் எதைச் செய்தாலும் "ஒரு நாளில்" தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியது இருக்கிறபடியால், நம் மனசாட்சியின் சத்தத்திற்கு எப்போதும் செவிகொடுக்க வேண்டியது மிக முக்கியமாயிருக்கிறது.

‘மனசாட்சி’ தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் "வலி" (Pain) என்ற வரத்திற்கு ஒப்பாகும். இன்று அநேகர் வலியை தொந்தரவுதரும் ஒன்றாக எண்ணுகிறார்கள். இந்த வலி நம் ஜீவியத்தில் எத்தனை ஆசீர்வாதமாய் இருக்கிறது என்பதை நாம் உணருவதில்லை! வலியின் மூலமாகவே நம்மில் ஏற்படும் ஏதாகிலும் ஒரு சுகவீனத்தை நம் சரீரம் எச்சரிக்கிறது. நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது. இந்த வலி இல்லாத பட்சத்தில், நமக்கு வியாதி இருந்தால்கூட அதை அறியாதவர்களாகத்தான் இருப்போம். இவ்வித நிலையில் நாம் மரணம் அடைந்திடவும் கூடும்! இவ்வாறு காலத்திற்கு முன் மரிப்பதிலிருந்து இந்த வலியே நம்மைப் பாதுகாக்கிறது. இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது.

நம் மனசாட்சி சொல்லுகிறபடியால்தான் நாம் யாவரும் நம்மை பாவிகள் என அறிந்திருக்கிறோம். எனவே நாம் உணர்ந்திடும் பாவ உணர்வை உதறிவிடுவதற்கு நாம் முயற்சிக்கவே கூடாது. ஏனென்றால் இந்த பாவ உணர்வு "வலியின் ஆசீர்வாதத்திற்கு" ஒப்பாகும். நாம் ஆவிக்குரிய நோவு கொண்டிருக்கிறோம் என்பதையும், அதிலிருந்து நாம் சுகமடைய வேண்டும் என்பதையும் இந்த பாவ உணர்வே நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே ‘மனசாட்சி’ தேவன் மனிதனுக்குத் தந்த வரங்களில் ஒன்றாகும்!

நம்முடைய பாவங்கள் தேவனால் மாத்திரமே மன்னிக்கப்பட்டு கழுவப்பட முடியும். நாம் ஏற்கனவே நம் மனசாட்சியில் சுமந்துகொண்டிருக்கும் குற்ற உணர்வை அகற்றி நல் மனசாட்சி உடையதாய் மாற்ற சிலுவை மரத்தில் இயேசு நமக்காக சிந்திய இரத்தம் ஒன்றே வழியாகும்!!

நீங்கள் தெய்வ நற்குணம் அடையவேண்டும்!

நீங்கள் தெய்வ நற்குணம் அடையவேண்டும்!

தேவன் நம்மை குணாதிசயம் கொண்டவர்களாயும் சுயாதீனமாய் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாயும் படைத்தார். ஆனால் இவ்வித சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுயாதீனத்தைவைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும்! இவ்வாறு இருந்தபோதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்க தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகிறார்!!

தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷனும் மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் “பரிசுத்தமாய்” இருப்பதற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும்! இதற்காகவே சாத்தான் அவர்களிடம்வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

களங்கமற்ற தன்மைக்கும் பரிசுத்ததிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஒரு குழந்தையிடம் நாம் காண்பதே களங்கமற்ற தன்மையாகும். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவன் எப்படி இருந்திருப்பான் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஒரு குழந்தையை சற்றே உற்று நோக்குங்கள்... நன்மை தீமை இன்னதென்று அறியாததும், களங்கமற்றதுமான தன்மையையே அக்குழந்தையிடம் நீங்கள் காண்பீர்கள். ஆனால் அக்குழந்தை பரிசுத்தமானதோ அல்லது பூரணமானதோ அல்ல! பூரணமடைய வேண்டுமென்றால், அக்குழந்தை வளர்ச்சி அடைந்து ‘தெரிந்து கொள்ளுதலை’ தன் வாழ்வில் கைக்கொண்டு... அதன்மூலம், தீமையை மறுத்து, தேவனைத் தெரிந்து கொண்டு வளர வேண்டும்!

நம்முடைய சிந்தையில் சோதனைக்கு இணங்கிட நாம் மறுக்கும்போதுதான் நம் குணாதிசயங்கள் வளர்ச்சி பெறுகின்றன! இவ்வாறு உங்கள் வாழ்வில் இதுவரை நீங்கள் தெரிந்து கொண்ட முடிவுதான், இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு நடத்தியிருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் சிறந்த தூய வாழ்க்கை வாழ்ந்தால், அதற்கு ஒரே காரணம், அவர்கள் தங்கள் வாழ்வில் உங்களைக் காட்டிலும் சிறந்த முடிவை தெரிந்து கொண்டார்கள் என்பதே ஆகும். இவ்வாறு நீங்கள் தெரிந்து கொண்ட முடிவுகளே, நீங்கள் தெய்வ நற்குணம் அடைவதை நிர்ணயம் செய்கிறது!!

சாத்தானின் தீமைகளை நன்மையாக மாற்றும் தேவன்!


சாத்தானின் தீமைகளை நன்மையாக மாற்றும் தேவன்!

"இவ்வுலகதில் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" என்ற கேள்வியை நாம் கேட்கக்கூடும்.

தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப் பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்திருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதி யாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்!

அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவுமேயாகும்! இதற்குமாறாக இப்பூமிக்குரிய வாழ்க்கை எந்த நோயும் இல்லாமலும்; துன்பம் இல்லாமலும்; தரித்திரம் இல்லாமலும்; ரொம்பவும் சொகுசான வாழ்க்கையாக இருக்குமென்றால் தேவனைக் குறித்த சிந்தை கிட்டதட்ட ஒருவருக்குமே ஏற்படாது! இதனிமித்தமே இவ்வுலகத்தில் பாதுகாப்பற்ற ஜீவியத்தையும், துன்பங்களையும் தேவன் உபயோகித்து.... ‘இதுபோன்ற தேவையான நேரத்தில்’ நாம் அவரிடத்தில் திரும்பவும், அவரைச் சிந்தித்துத் தேடவும் வைக்கிறார்!!

புற்றுநோயினாலோ அல்லது வேறு எந்த கொடிய நோயினாலோ திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லும்வரைகூட தேவனைத் தேடாத ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாத்திரமே இவர்கள் உடனே தேவனிடம் திரும்பிவந்து அவருடைய இரட்சிப்பிற்காக மன்றாட துவங்கி விடுகிறார்கள். எனவே, சுகமாக்க முடியாத வியாதிகள், சுகவீனங்கள், வறுமைகள் இன்னும் இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன் மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து மனம் திரும்பும்படிச் செய்கிறார். முடிவில், ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்! பார்த்தீர்களா, சாத்தான் நமக்கு கொண்டுவரும் எல்லாத்தீமைகளையும் தேவன் உபயோகித்து, அதன்மூலம் ஜனங்களை சாத்தானின் பிடியிலிருந்து விடுதலையாக்கி தம்முடைய நித்திய இரட்சிப்பிற்குள் அவர்களை நடத்தி விடுகிறார்!!

ஆம், இவ்விதமாகவே சாத்தானை திரும்பத் திரும்ப ஒரு ‘முட்டாளாய்’ தேவன் நிற்க வைத்து விடுகிறார்! சாத்தான் பிறருக்காக “எதையோ மனதில் வைத்து” வெட்டின குழியில், அவனே அக்குழியில் தள்ளப்பட்டு விடுகிறான்!!

தேவனுடைய விருப்பம் செய்வதே நமக்கு இளைப்பாறுதல் !

தேவனுடைய விருப்பம் செய்வதே நமக்கு இளைப்பாறுதல் !

தேவன் விரும்புவதெதுவோ அதுவே உங்கள் விருப்பமாயும் இருக்குமென்றால், எந்நிலையிலும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது. நீங்கள் வைத்துக்கொள்ளும்படி தேவன் விரும்பாத எதையும் நீங்கள் வாங்குவதற்கோ, உரிமை கொள்வதற்கோ ஆர்வம் கொள்ளவில்லையென்றால், நீங்கள் எப்போதும் இளைப்பறுதலில் இருக்கலாம்! ஏனெனில், உங்களுக்குத் தேவையாயிருந்தால் அதை அற்புதமாய் தேவன் வழங்கிடுவாரே! ஆனால் உலகப்பொருளின் மீது கொண்ட இச்சையை திருப்தி செய்வதற்காக ‘இதையும் அதையும்’ வாங்குவதற்கு விரும்புவீர்களென்றால், நீங்கள் எப்போதும் பிரச்சனைக்குள்தான் ஓடி நிற்பீர்கள்!!

இதே விசுவாசத்தின் அடிப்படைதான் நமக்குரிய வாழ்க்கைத் துணையைக் கண்டுகொள்ளும் விஷயத்திலும் பொருந்தும். "வீடும் ஆஸ்தியும் மாத்திரமே ஓர் தகப்பன் தன் மகனுக்கு தரமுடியும். ஆனால் புத்தியுள்ள மனைவியையோ கர்த்தர் மாத்திரமே அருள முடியும்" (நீதி .11:14-Living Bible) என்றே வாசிக்கிறோம்.

உங்கள் வாழ்க்கை துணையாய் இருக்கும்படி தேவன் யாரையேனும் முன்குறித்திருக்கும்போது "அந்த நபரை" வேறு யாரும் அபகரித்துச் சென்றுவிடுவார்கள் என்ற அபாயம் ஏற்படுமோ? நிச்சயம் இல்லை! நீங்கள் சர்வவல்ல தேவனின் ஆளுகையை விசுவாசிக்கும் வரை அந்த அபாயம் நிச்சயம் இல்லை!!

நீங்கள் பொருமையிழந்து "பாய்ந்து சென்று" பற்றிக்கொள்ளும் அவசியமும் இல்லை. தேவன் அந்த நபரை உங்களுக்காகவே வைத்து வைப்பதற்கு வல்லவர்! நீங்கள் இளைப்பாறுதலிலேயே இருக்கலாம்!! ஆம், தேவன் ஆதாமை நித்திரைக்குள்ளாக்கினார்! இவ்வாறு ஆதாம் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போதுதான் (துணையைத் தேடி அவன் தோட்டத்தைச் சுற்றி அவசர அவசரமாய் பதறி ஓடிக்கொண்டிருக்க வில்லை), தேவன் அவனுக்கென்று ஓர் மனைவியை ஆயத்தப்படுத்தினார். அதற்குப் பிறகு, அவர் அவனை எழுப்பி ஏவாளை அவனுக்கு கொடுத்தார். ஆதாமை தேவன் எவ்வளவு நேசித்தாரோ அதே அளவு உங்களையும் நேசிக்கிறபடியால் அவர் உங்களுக்கும் அப்படியே செய்வார்!

தேவனுடைய சித்தத்தின் எல்லைக்கு வெளியே உங்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல், தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டு ‘நீங்கள் தனித்திருக்கவும்’ ஆயத்தமென்றால், இப்போது நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமேயில்லை. தங்களுக்குரிய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புவித்தவர்களுக்காக கிரியை செய்யும்படி தேவனுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது (2நாளாகமம் 16:9). ஓ, நமக்குத்தான் எவ்வளவு அருமையான தேவன் இருக்கிறார்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

பணத்தைவிட தேவனே நமக்கு மேலானவர் !

பணத்தைவிட தேவனே நமக்கு மேலானவர் !

இந்த உலகில் பணம் மிகவும் வலிமை நிறைந்ததாய் இருக்கிறது! எனவேதான், நாம் சேவிக்கும்படி இரண்டே எஜமான்கள்தான் இருக்கின்றனர் என தேவனையும், உலகப்பொருளையும் தனித்தனி எஜமானாக இயேசு குறிப்பிட்டு கூறினார் (லூக்கா 16:13). இந்த உலகம் பணத்தின் வலிமையை நம்புகிறபடியால் "பணத்தினால் எல்லாம் கூடும்" என்கிறார்கள். விசுவாசிகளாகிய நாமோ "தேவனால் எல்லாம் கூடும்" என்கிறோம். ஆனால் அதிகபட்சமாய், அவிசுவாசிகள் தங்கள் தேவன் (பணத்தின்) மேல் வைத்துள்ள விசுவாசமானது, ‘ஜீவனுள்ள மெய் தேவனின் விசுவாசிகள்’ என தங்களைக் கூறிக் கொள்பவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைவிட அதிகமாய் உள்ளதே!?

இவ்வுலகில் நாம் அனுதினமும் பணவிஷயத்தில் ஈடுபாடு கொள்வதால், இப்பகுதியிலும் நாம் ஜெயம்பெற வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது! நீங்கள் விண்ணப்பம் செய்யும் பெர்மிட்டோ அல்லது லைசென்ஸோ அல்லது இதுபோன்ற வேறெதுவோ "பாஸாகுவதற்கு" உங்களிடம் லஞ்சம் கேட்கும் கறைபடிந்த அதிகாரிகளை காணும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த உலகமோ லஞ்சத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்று நம்புகிறது! நம்மைக்குறித்து என்ன? பணம் சாதிப்பதைவிட நம் தேவன் பெரிய அற்புதங்களை செய்ய முடியாதா? ஆனால் இதற்கென நமக்கு விசுவாசம் இல்லாதிருக்கும்போது, தேவன் நம் பட்சத்திலிருந்து ஒருக்காலும் கிரியை செய்யவே முடியாது. இவ்வுலகில் "கூடாதது ஒன்றுமில்லை" என்பதற்கு இரண்டு நபர்களே இருக்கிறார்கள் என இயேசு கூறினார். ஒன்று தேவன்! இரண்டாவது "மெய்யாய் விசுவாசிக்கும்" ஓர் விசுவாசி!! (மாற்கு 10:27 ; 9:23).

1) தேவனாலும் 2) விசுவாசிக்கிறவனாலும், கூடாதது ஒன்றுமில்லை! இது கிட்டதட்ட நம்பமுடியாததொரு அற்புதமேயாகும். ஆனால் உண்மையாகவே இந்த விசுவாசத்திற்கு, சர்வவல்ல தேவனின் வல்லமையோடு நம்மை இணைப்பதற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தாலேயே, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்திற்கு, "தேவன் பணத்தைவிட மேலானவர்" என்று நாம் நிரூபித்துக் காட்டவேண்டும்! நாம் லஞ்சம் கொடுப்பதே இல்லை! மெய் விசுவாசத்துடன் சர்வவல்ல நம் தேவனிடம் ஜெபிக்க மத்திரமே செய்கிறோம்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

இயேசுவின் ராஜகெம்பீரம் நமக்கும் வேண்டும் !

இயேசுவின் ராஜகெம்பீரம் நமக்கும் வேண்டும் !

யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்தான்! பேதுரு அவரை மறுதலித்தான்! அவருடைய சீடர்களும் அவரை கைவிட்டுச் சென்றனர்! திரளான ஜனங்கள் அவருக்குப் பின்முதுகு காட்டி பிரிந்து சென்றனர்! அவர் அநீதியாய் துன்புறுத்தப்பட்டும்! பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டும்! சிலுவையில் அறையப்படும்படி அழைத்துச் செல்லப்பட்டார்!!... இருப்பினும் அவர் கல்வாரிப் பாதையில் செல்லும்போது, திரளானோரைத் திரும்பிப் பார்த்து, "எனக்காக அழாதீர்கள் நான் நன்றாகவே இருக்கிறேன்" என்று அவரால் சொல்ல முடிந்தது!! (லூக்கா 23:28). ஆம், அவரிடம் சுய அனுதாபத்தின் சிறிய தடயம்கூட காணப்படவில்லை! பரிசுத்தாவியின் வல்லமையினால் அன்றி, இந்தப் பொன்னான வாழ்வை யார் வாழ்ந்திட முடியும்!!

தான் பானம் பண்ணிக்கொண்டிருந்த பாத்திரம் பிதாவினாலேயே அனுப்பப்பட்டது என்று அவர் நன்றாய் அறிந்திருந்தார்! யூதாஸ்காரியோத்து, அந்தப் பாத்திரத்தைக் கொண்டுவந்த பணிவிடையாள் மாத்திரமே! எனவேதான் அவர் யூதாஸை அன்போடு பார்த்து "சிநேகிதனே" என்று அழைக்கமுடிந்தது. தேவனுடைய பரிபூரண ஆளுகையில் விசுவாசம் இல்லாமல் நீங்கள் இவ்விதமாய் சொல்லிவிட ஒருக்காலும் முடியாது! அடுத்தபடியாக, இயேசு பிலாத்துவிடம் "என் பிதா அதிகாரம் கொடுக்காமல், உமக்கு என்மேல் ஒரு அதிகாரமும் இல்லை" என்றார் (யோவான் 19:11). இந்த உறுதியான நம்பிக்கையே, இயேசுவை இந்த உலகில் கனம் பொருந்திய ஒரு ராஜாவைப்போல் நடக்கச் செய்தது! அவர் ஆவிக்குரிய கனத்தோடு ஜீவித்து அதே ஆவிக்குரிய கனத்தோடு மரித்தார்!!

இப்போது நாமும் "இயேசு நடந்தபடியே நடப்பதற்கு" அழைக்கப்படுகிறோம். அவர் பிலாத்துவுக்கு முன்பாக "நல்ல அறிக்கையை சாட்சியாக விளங்கப் பண்ணியது" போல நாமும் இந்த அவிசுவாசமுள்ள சந்ததி முன்பாக நல்ல அறிக்கை செய்து (2தீமோத்தேயு 6:12-14) கெம்பீரமாய் நடந்திடக்கடவோம்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

சதிமேஜையை "சாத்தானுக்கே திருப்பி" ஜெயம் தரும் தேவன் !

சதிமேஜையை "சாத்தானுக்கே திருப்பி" ஜெயம் தரும் தேவன் !

சாத்தான்தேவ ஜனங்களைத் தாக்கும்போது, அவனுக்கு எதிராகவே அத்தாக்குதலின் மேஜையை தேவன் எவ்வாறு திசை திருப்புகிறார் என்பதைக் காண அநேகர் தவறுகிறார்கள்.

உதாரணமாய், யோசேப்பின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தியானித்துப் பாருங்கள்! இந்த "தேவ அற்புதம்" அவன் வாழ்வில் பளிச்சிடுவதை நீங்கள் காண்பீர்கள்!! அவன் 30-வயதாகும்போது, அவனை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக்கும்படி தேவன் ஓர் திட்டம் வைத்திருந்தார். யோசேப்பு கர்த்தருக்குப் பயந்த மனுஷனாயிருந்ததினிமித்தம், சாத்தானால் அவன் மிகவும் வெறுக்கப்பட்டான்!

எப்படியாகிலும் யோசேப்பை ஒழிக்கும்படி அவனுடைய மூத்த சகோதரர்களை சாத்தான் தூண்டிவிட்டான்! தன் ஆசைக்கு இணங்காத யோசேப்பை பொய்யாய் குற்றம்சாட்டி போத்திபாரின் மனைவி அவனை சிறையில் அடைக்கும்படி செய்தான்!!

யோசேப்பைக் குறித்ததான தேவனுடைய கால அட்டவணைப்படி சிறையிலிருந்த யோசேப்பிற்கு 30 வயதானவுடன், பார்வோனுக்கு ஓர் சொப்பனம் உண்டாகி... "யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவன்" என்பதை ‘பானபாத்திரக்காரன்’ நினைவுகூர்ந்தான். இப்படித்தான் யோசேப்பு பார்வோனுக்கு முன்பாய் வரவழைக்கப்பட்டு, எகிப்தின் இரண்டாவது அதிபதியாக மாறினான்!

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படி, சாத்தானின் சதி மேஜையை அவனுக்கு விரோதமாகவே திருப்புவது தேவனின் பெருமகிழ்ச்சியாகும்!

இந்நிகழ்ச்சிகளை, நம் வாழ்வின் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். "பொறாமையினால்" நம்மை வெளியே தள்ள முயற்சிக்கும் தீய சகோதரர்களிடம் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? பொய்யாய் குற்றம் சுமத்திய அந்தப் பொல்லாத பெண்ணிடம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அநீதியாய் சிறையில் அடைக்கப்பட்டதின் நிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? உதவி செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்து போகும் நண்பர்களினிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் வேண்டுமென்றோ-தற்செயலாகவோ செய்யும் எல்லா கிரியைகளையும், நம்முடைய வாழ்க்கையில் அவரது தீர்மானம் நிறைவேறும்படி தேவன் உபயோகிக்க முடியும் என்று நாம் விசுவாசிக்க முடிகிறதா? யோசேப்புக்கு அவ்வாறு நிறைவேற்றியிருந்தால், நமக்கும் அவ்வாறே நிறைவேற்றிட அவரால் முடியாதா? நிச்சயம் அவரால் முடியும்! அப்படியே நமக்கும் அவர் செய்திடுவார்!!

யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தை யார் குலைத்திருக்க முடியும் என்பதையும் சொல்லுகிறேன். ஒரே மனிதனால் அது கூடும்... அது யோசேப்பே தான்! அவன் தன்னைப் பகைத்த சகோதரர்களிடம் கசப்பு கொண்டிருந்தால், போத்திபார் மனைவியின் சூழ்ச்சி வலைக்கு இணங்கியிருந்தால்... தேவனால் அவன் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பானே!!

ஆம், உங்கள் வாழ்க்கையில் தேவன் குறித்ததான திட்டத்தை சீர்குலைப்பதற்கு இப்பூவுலகில் ஒருவர் இருக்கக்கூடுமென்றால், அது நீங்கள் ஒருவர்தான்! மற்றபடி, ஒருவரும் சீர்குலைத்திட முடியாது. உங்கள் சிநேகிதரானாலும் முடியாது! உங்கள் சத்துருவானாலும் முடியாது! தூதர்களானாலும் முடியாது! பிசாசுகளானாலும் முடியாது!! ஆம், நீங்கள் மாத்திரமே!! இவ்வுண்மையை நாம் கண்டுகொண்டால், நமக்குத் தீமைசெய்ய விரும்புவோரினிமித்தம் ஏற்படும் எல்லாப் பயங்களுக்கும், தவறான மனோபாவத்திற்கும் நாம் நீங்கி விடுதலையாகியிருப்போம்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

அப்பழுக்கற்ற தேவ ஞானம் !

அப்பழுக்கற்ற தேவ ஞானம் !

தேவன் பரலோகில் இருக்கிறபடியால், பூமியில் உள்ள நம்மைக் காட்டிலும் அதிக ஞானம் நிறைந்தவர்! எனவேதான், அவருடைய பரிபூரண ஞானத்தால் நம்முடைய வாழ்வின் வழிகளை ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறார்: "தேவனுடைய வழி உத்தமமானது, ஏனெனில் அவர் ஞானத்தில் பரிபூரணமானவர்... என் வழியைச் செம்மைப்படுத்தி என் சூழ்நிலைகளை ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறவர் தேவனே!" என சங்கீதம் 18:20, 32-ல் வாசிக்கிறோம்.

அவரது பரிபூரண ஞானத்தில் நம்பிக்கையாய் இருந்து, நம் ஆள்த்துவம் முழுவதையும் அவரில் சார்ந்திருக்கச் செய்வதே விசுவாசமாகும்!!

பூமியைக் காட்டிலும் பரலோகம் உயர்ந்திருக்கிறபடியால், தேவஞானம் நம்மைக் காட்டிலும் மேலானது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நம்மில் யாருக்கும் பிரச்சனை இருக்காது என்றே எண்ணுகிறேன். தேவனுடைய வழிகளை, நாம் அநேக சமயங்களில் புரிந்துகொள்ள முடியாததற்கு இதுவே முக்கிய காரணம்! இது எப்படியெனில், ஓர் நாய் எவ்வாறு மனுஷர்களுடைய வழியைப் புரிந்து கொள்ள முடியாதோ அதைப்போல! நாம் விசுவாசத்தில் வளர்ச்சியடைந்து, அவருடைய திவ்விய சுபாவத்தில் அதிகமதிகமாய் பங்குபெறும்போது மாத்திரமே, தேவனுடைய வழிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அறிய ஆரம்பிப்போம்!!

"எல்லா சூழ்நிலைகளையும் - ஜனங்களையும்" தேவனே தன் அப்பழுக்கற்ற ஞானத்தால் அரசாளுகிறார் என்ற சத்தியத்தை அநேக விசுவாசிகள் சந்தேகித்து, தயங்கித்... தேங்கி நின்றுவிட்டனர்! தங்கள் உதடுகளால் ஒருவேளை இச்சத்தியத்தை அங்கீகரித்து ஏற்கலாம், ஆனால் இவர்களோ தங்களின் அன்றாட ஜீவிய சூழ்நிலைகளில் இதைக் "கிரியையில்" விசுவாசித்ததே இல்லை! இன்றிலிருந்து, பிழையற்ற அவரது அனந்த ஞானத்தை நம் ஜீவியத்தின் ஒவ்வோரு சம்பவத்திலும் மெய்யாய் விசுவாசிக்கக்கடவோம்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

"தெய்வ கிருபை" தேவனுடைய உதவிகரம் !

"தெய்வ கிருபை" தேவனுடைய உதவிகரம் !

சோதனையின் வலிமை தேவனுடைய கிருபையின் வலிமையினால் மாத்திரமே வெல்ல முடியும்!

நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் வந்தது. ஆனால், கிருபையோ இயேசுகிருஸ்துவின் மூலமாய் வந்தது (யோவான் 1:17). நியாயப்பிரமாணத்தின் கீழ் (பழைய உடன்படிக்கையில்) ஜனங்கள் தங்கள் இருதயத்தில் சோதனையோடு கடுமையாக போராடினாலும், எப்போதும் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். தர்சுப் பட்டணத்தானாகிய சவுல், தேவனுடைய பிரமாணத்தின் வெளியரங்கமான (External) தரத்தில் பூரணமாய் ஜீவித்தாலும் (பிலிப்பியர் 3:6), "இதயத்திலிருந்து உண்டாகும் இச்சைக்கு முன்பாக வலிமையற்றவனாகவே இருந்தான் (ரோமர் 7:7-11). ஆம், நியாயப்பிரமாணம் இதயத்திலிருந்து பிறக்கும் இச்சையிலிருந்து ஜனங்க்ளை விடுவிக்க முடியவில்லை. இந்த நியாயப்பிரமாணம் அதற்காக நியமிக்கப்பட்டதும் அல்ல. ஆம், மனுஷனுடைய உள்ளான பாவத்தையும், அவனுடைய இதயத்திலிருந்து உண்டாகும் இச்சையிலிருந்து விடுதலையாக முடியாத அவனுடைய நிர்பந்த நிலையை உணர்த்தவே நியாயப்பிரமாணம் தரப்பட்டது!!

ஆனால் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டான புதிய உடன்படிக்கையின் நற்செய்தி என்னவெனில், நியாயப்பிரமாணத்தினால் கூடாதது கிருபையினால் கூடும் என்பதுதான்! "கொஞ்சமும் அருகதையற்றவர்களாகிய நம்முடைய பாவங்களை மன்னிக்கும் தயவு" என்பது மாத்திரம் தேவனுடைய கிருபை அல்ல. அவர் கிருபை இதைவிட மேலானதாகும்! கிருபையானது தேவனுடைய பெலன்!! ஆம், 2 கொரிந்தியர் 12:9-ல் கிருபையானது பெலனுக்கு சமமாய் சொல்லப்படுவதைக் கவனியுங்கள்! இந்த பெலன் அல்லது இந்த வல்லமையே நம்முடைய சோதனையின் இக்கட்டான நேரத்தில் நமக்கு சகாயம் செய்ய அல்லது உதவி செய்ய கரம் கொடுக்கிறது!! (எபிரெயர் 4:16).

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

வாழ்வின் சுமை அகற்றும் தாழ்மையின் வழி!

வாழ்வின் சுமை அகற்றும் தாழ்மையின் வழி!

"வாழ்க்கையின் சுமையானது" அதைத் தாங்கவொண்ணாததாயிருக்கிறது என்று நாம் எண்ணிக்கொள்ளுகிறோம்! ஆனால் உண்மையென்னவென்றால், நம்மைக்குறித்து வைத்துள்ள மேட்டிமை எண்ணங்களான பெருமைதான் இதற்கெல்லாம் காரணம்! இதைகுறித்து ரிசர்வ் செய்யாத நெரிசலான புகைவண்டியில் பயணம் செய்யும் சமயங்களில் நான் தியானித் திருக்கிறேன். உட்காருவதற்கு இடமில்லாமல், தரையின் ஓர் மூலையில் உட்காரவோ அல்லது சில சமயங்களில் நின்றுகொண்டு வரவோ வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. புகைவண்டிப் பெட்டியோ, ஸ்டேஷன் ஆரம்பத்திலிருந்தே ஜனங்களாலும், சாமான்களாலும் நிறைந்திருக்கும். அடுத்து ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும்போதும், மேலும் அதிக ஜனங்களும் சாமான்களும் ஏறுவதால் நிலமை மிக மோசமாகிவிடும்! தொடர்ந்து நெருக்கடி அதிகமாகிக் கொண்டேதான் போகும்!! இச்சமயங்களில், "நான் இப்போது ஒரு எறும்பின் அளவாய் (size) மாறமுடியுமென்றால் எனக்கு இந்த நெரிசல் இருக்காதே!" என எனக்குள் சிந்திப்பதுண்டு. ஆம், ‘அளவினிமித்தமே’ நெருக்கடி அதிகமாயிருப்பதை உணர்கிறேன். என்னைவிடப் பருமனான அளவு கொண்ட ஓர் மனிதனின் கதி இன்னமும் மோசமானதுதான்! நெருக்கடியெல்லாம் "அளவைப்" பொருத்தே இருக்கிறது. ஆனால் ஒரு சிறிய எறும்போ, நெரிசலான ரயில் பெட்டியையும் விசாலமான இடமாய் கருதி, அங்குள்ள நெரிசலைக்குறித்து கொஞ்சமும் குறை கூறாது!

இதுவே ஆவிக்குரிய விடையையும் நமக்கு அளிக்கிறது. நெருக்கத்தின் சுமை என்னைச் சுற்றிலும் அதிகரிக்கும்போது, நான் மாத்திரம் என் கண்களுக்கு சிறியதாய்…… சிறியதாய், மாற முடியுமென்றால், நெருக்கடியானது குறைந்து சீக்கிரமே ஒன்றுமில்லாமல் மறைந்தும்விடும்!! தேவன் "நம்மைக் குறைத்து" சிறியதாய் மாற்றவே விரும்புகிறார். அவர் தன் நோக்கத்தை நம் மூலமாய் நிறைவேற்றுவதற்கு முன்பாக நம்மைக் குறைத்து, குறைத்து, நம்முடைய சுய எண்ணத்தில் "பூஜ்ய நிலைக்கு” நம்மை கொண்டுவர வேண்டியதாயிருக்கிறது. பரிபூரண ஜீவனுக்குள் நடத்த "நம்மை நாமே தாழ்த்தும்" இயேசு முன்நடந்த இந்த "இடுக்கமான வழியை" கண்டுகொண்டவர்கள் வெகு சிலராகவே இருக்கிறார்கள்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

திராணிக்குமேல் நாம் சோதிக்கப்படுவதில்லை!

திராணிக்குமேல் நாம் சோதிக்கப்படுவதில்லை!

நாம் ஆவிக்குரிய வளர்ச்சியற்று, பெலவீனமாய் இருக்கும்போது, மனுஷர் மூலமாகவோ பிசாசின் மூலமாகவோ கொடூரமாய்த் தாக்கப்பட தேவன் அனுமதிக்கவே மாட்டார்!! நம் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தின்மேல் நமக்கு விருப்பம் இல்லையென்பதைத் தேவன் காணும்போது, நம் ஜீவியத்தில் நாம் மிக எளிதான பாதை செல்லவும் அனுமதித்து விட்டுவிடுவார்! இதன் விளைவாய் நாம்தான் நித்தியத்தில் பேரிழப்பைத் தழுவி நிற்போம்!!

ஏனெனில், "தாங்கிக்கொள்ள முடியும்" என்ற பக்குவநிலை அடைந்தவர்கள் மிகவும் சிலரே! இவ்வித ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதற்கு மிகச்சிலர்தான் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

நாம் சந்திக்கக்கூடிய எல்லா சோதனைகள் வழியாகவும், பிதாவினால் இயேசுவானவர் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படித்தான் அவர் பூரணரானார்! (எபிரெயர் 4:5, 5:7-9) நாமும் பூரணராவதற்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை!

"நாம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படவோ அல்லது பரீட்சிக்கப்படவோ தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்" என்ற சத்தியம்தான் நம் வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நாம் ஜெயஜீவியம் செய்திட முடியும் என்ற நம்பிக்கைக்குக் காரணமாயிருக்கிறது!!

இவ்விதமாய் 1கொரிந்தியர் 10:12 மூலம் தேவனுடைய உத்திரவாதம் நமக்கு கொடுக்கப்படவில்லையென்றால், நாம் இப்படிப்பட்ட நம்பிக்கை கொள்ளவே முடியாது!!

ஆம், நம் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு சோதனையும் பரீட்சையும் ஜெயிக்கப்படத்தக்கதே என தேவன் உத்திரவாதம் அளித்திருக்கிறார். இவ்வாறிருக்க நாம் ஏன் வீழ்ச்சியடையவேண்டும்?

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

தம்முடையவர்களை ‘மதிலாய்’ நின்று காக்கும் தேவன் !

தம்முடையவர்களை ‘மதிலாய்’ நின்று காக்கும் தேவன் !

சாத்தானோ அல்லது நம்மை வெறுப்பவர்களோ நம்மைப் பலவிதத்தில் துன்புறுத்துவதற்கு விரும்பலாம்! "ஆனால்" தேவனுடைய அனுமதியில்லாமல் அவர்கள் நம்மை நெருங்கவே முடியாது!! பழைய ஏற்பாட்டில், யோபுவை எந்தத் தீங்கும் தொடமுடியாதபடி தேவன் அவனைச் சுற்றி வேலியிட்டுக் காத்ததை சாத்தான் உணர்ந்திருந்தான் (யோபு 1:10). இருப்பினும், யோபுவை பரிசுத்தப்படுத்தும்படிக்கு, தேவன் அந்த வேலியை "கொஞ்சம்" திறக்கும்படி செய்து, அவனைத் தாக்குவதற்கு சாத்தானை அனுமதித்தார். வேலியை எவ்வளவு திறக்க வேன்டும்? என்பதை ‘தேவனன்றோ’ தீர்மானித்து நியமனம் செய்தார்! ஆரம்பதில் ‘கொஞ்சம்’ திறக்கப்பட்டது! (யோபு 1). அதற்குப் பிறகு ‘சற்றே அதிகமாய்’ திறக்கப்பட்டது! (யோபு 2). இவ்வாறு தேவன் திறந்த அந்த வேலியின் வழியாக சபேயர்களும், கல்தேயர்களும் நுழைந்து யோபுவின் சம்பத்துகளைக் கொள்ளையடித்தார்கள் (யோபு 1:15,17). யோபுவின் பிள்ளைகள்மேல் வீடு தகர்ந்து விழும்படியாக வீசிய பெறுங்காற்றும், இவ்வாறு தேவன் திறந்த வேலியின் வழியாகத்தான் பிரவேசித்தது. இருப்பினும், யோபுவின் சரீரத்தை நோய் தாக்கும் அளவிற்கு ‘இன்னும் கொஞ்சம் அதிகமாய்’ திறந்தபின்புதான் "நோயும்" உள்ளே பிரவேசித்து, யோபுவை வாதிக்க முடிந்தது!

தனக்கு நிகழ்பவைகளையெல்லாம் தேவன் "கண்ட்ரோல்" (control) செய்து கொன்டிருக்கிறார் என்பதை யோபு முதலில் அறிந்து கொள்ளவில்லை. எல்லாம் நிறைவேறி முடித்த பின்புதான் அதை அறிந்துணர்ந்தான். அவனுக்கு நம்மைப்போல் எழுதிவைக்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாதபடியால், நாம் யோபுவை குறைசொல்லவே முடியாது! ஆனால் இப்போதோ, தேவனுடைய பிள்ளைகளைச் சுற்றியுள்ள வேலியை ஆளுகை செய்பவர் இன்னார் என்பதை அறிவிக்கும் வேதவசனம் நம்மிடம் இருக்கிறது! நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலாக தேவனே அந்த வேலியாய் இருக்கிறார் என்று சகரியா 2:5 பறைசாற்றுவதையும் நாம் அறிந்திருக்கிறோம்! ஆனால் பரிதாபம்.... எலிசாவின் வேலையாளைப்போலவே, இப்பரலோக உண்மையை காணமுடியாதபடி நம் கண்கள் அடிக்கடி குருடாய் போய்விடுகிறது. நம்மைச் சுற்றி உள்ள அக்கினி மதிலை நம் கண்கள் காண்பதே இல்லை!! எலிசாவினால் இதைக் காண முடிந்ததால் அவன் கொஞ்சமும் பயம் அற்று இருந்தான் (2 இராஜாக்கள் 6:15-17). நம்முடைய கண்களும் இவ்விதம் திறக்கப்படவேண்டியது மிகவும் அவசியமன்றோ!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

செய்தி: முழு அர்ப்பணத்தில் தேவனின் பூரண பாதுகாப்பு

முழு அர்ப்பணத்தில் தேவனின் பூரண பாதுகாப்பு! - சகரியா பூணன்

"யோவான் ௧௭:௨௩-ல் இயேசு இவ்வுலகத்திற்க்காகவோ அல்லது மனுஷீகக் கிறிஸ்துவர்களுக்காவோ ஜெபிக்கவில்லை. மாறாக, "எல்லாவற்றையும்" வெறுத்துவிட்டு அவரைப் பின்பற்றிய ௧௧- சீஷ்ர்களுக்காகவே ஜெபித்தார்! இவர்களே, இம்மண்ணுலக மக்களும்- மாம்ஷீகக் கிறிஸ்தவர்களும் கண்டுகொள்ள முடியாத "பிதாவின் அன்பின் பாதுகாப்பைத்" தங்கள் வாழ்வில் மெய்யாய் கண்டவர்கள்!

இன்று ஏன் அநேக கிறிஸ்தவர்கள் "மாம்ஶீகக் கிறிஸ்தவர்களாய்" இருக்கின்றனர்? ஏனெனில் பிசாசானவன், இவர்கள் தங்களைத் தேவனுக்குப் பூரணமாய் ஒப்புக்கொடாமல் "இம்மண்ணுக்குரியதையும்,விண்ணுக்குரியதையும் சேர்த்துப் பெற்றுக்கொண்டு" அதிக சந்தோஷமாய் இருக்கலாம் என அவர்களை சிந்திக்க வைத்து ஏமாற்றியிருப்பதால்தான்! ஆனால், இது ஓர் கொடிய வஞ்சகம்!! நாம் தேவனுடைய பரிபூரண அன்பை விசுவாசித்திருப்போமென்றால் "கொஞ்சம்கூட" நமக்கென்று ஏதும் "பதுக்கிக்கொள்ளாமல்" எல்லாவற்றையும் மனப்பூர்வமாய் அவருக்கு ஒப்புக் கொடுத்திருப்போம்! அப்படிச் செய்திருந்தால் பிலிப்பியர் 4:6,7-ல் வேதம் சொல்கிறது போல "எல்லா" பதட்டமான கவலைகளிலிருந்தும் நாம் "பரி பூரணமாய்" விடுதலையாகியிருப்போம்! ஆனால், மாம்ஷீகக் கிறிஸ்தவர்களோ, "எங்கே இந்தப் படகு நடுவில் புயலினிமித்தம் கவிழ்ந்துவிடுமோ" என்று எப்போதும் சந்தேகித்து சஞ்சலத்துடன் இருப்பார்கள்!பிதாவின் பூரண அன்பில் பாதுகாப்பாயிருந்த இயேசுவால், புயலினூடேயும் ‘ஆழ்ந்த நித்திரையாய் இளைப்பாற முடிந்தது. ஏனெனில் "இவ்விதமாகப்" பிசாசு தன்னை மூழ்கடிக்க ஒருக்காலும் முடியாது என இயேசு நன்றாய் அறிந்திருந்தார். ஏனெனில், அந்தப் பிதா இயேசுவை எப்போதும் கண்ணுறங்காமல் காவல் புரிகிறாரே! இவ்விதமாக, இயேசுவை நேசித்துக் காத்துக்கொண்டது போல பிதா நம்மையும் நேசித்துக் காக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோமென்றால் இவ்வாழ்க்கையின் மகத்துவம்தான் என்னே!!

தேவன் உங்கள் வாழ்வில் இடை பட அனுமதியுங்கள்! - செய்தி

தேவன் உங்கள் வாழ்வில் இடை பட அனுமதியுங்கள்! - சகரியா பூணன்

"நீங்கள் கிறிஸ்துவைப்போல் மாறும் ஜீவியத்தில் முழுவிருப்பமுள்ளவராயிருந்தால், தேவன் உங்களை உலகப்பொருளின் ஆசை, மனுஷீக கனத்தை தேடுதல், சுய அனுதாபம் போன்ற அநேக கிறிஸ்துவற்ற மனோபாவத்திலிருந்து விடுதலையாக்குவதற்கு ஏதுவாய் எண்ணற்ற நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்வதற்கு அனுமதிப்பார். ஆனால் ‘உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால்’ இவ்வித வழி செல்வதற்கு அவர் ஒரு போதும் வற்புறுத்தமாட்டார்! உங்களைச்சுற்றியுள்ள அநேக விசுவாசிகளின் தரம் குறைந்த தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையில் நீங்களும் திருப்தியுற்றிருந்தால் உங்களை அப்படியே தனியே ஒதுக்கிவைத்துவிடுவார். ஆனால் தேவனுக்குரிய மேன்மையான காரியத்தில் நீங்கள் தாகம் உள்ளவராயிருந்தால், உங்களிடம் அவர் செயல்பட்டு உங்களை அழித்துக் கொண்டிருக்கும் "புற்றுநோயை" வெட்டி எறிவார்! உங்களைக் கறைப்படுத்தும் "விக்கிரகங்களை" அழித்து ஒழிப்பார்! நீங்கள் துயரமடையவும், ஏமாற்றம் அடையவும், நஷ்டமடையவும், நமபிக்கை குலையவும், இழிவுபடுத்தப்படவும், அநீதியாய் புறங்கூறப்படவும் அவர் அனுமதிப்பார்! எதற்கு? நீங்கள் இனி ஒருபோதும் அசைக்கப்பட முடியாத ஸ்தானத்திற்கு அவர் உங்களைக் கொண்டுவரும்படிக்குத் தான்!! அதற்குப் பிறகு, நீங்கள் பணக்காரராய் இருந்தாலோ, ஏழையாய் இருந்தாலோ, அவமதிக்கப்பட்டாலோ, இவையொன்றும் உங்களில் எந்த வித்தியாசத்தையும் கொண்டுவர முடியாது!! இம் மண்ணுலகின் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் மரணத்தை அடைவதால், இயேசுவின் வாழ்க்கையில் பங்குள்ளவர்களாய் மாறி, இவ்வுலகில் நீங்கள் ஒரு ராஜாவைப்போல நடக்க ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்! (2 கொரி. 4:௧0).

சுயத்திற்கு மரிப்பதின் "விலைக்கிரயத்தை" மிகக் கொஞ்சம் பேர்களே செலுத்த விரும்புகிறபடியால், கிறிஸ்துவின் பரிபூரண ஜீவியத்தை அடையும் வழியைக் கண்டுகொள்பவர்களும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். உங்கள் ‘சுயம் உடைவதற்கு’ உங்களை தேவனுக்கு விட்டுக்கொடுங்கள்! நாம் சுயத்திற்கு மரிக்கவில்லையென்றால், விசுவாசத்தினால் ஜீவிப்பதென்பதும் ஒருபோதும் முடியாது!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

செய்தி: எந்நிலையிலும் மகிழ்ச்சி இழக்காத ஜீவியம்!

எந்நிலையிலும் மகிழ்ச்சி இழக்காத ஜீவியம்! - சகரியா பூணன்

"சில சமயங்களில், நாம் திடீரென்று பணத்தை இழக்கவோ அல்லது மனசாட்சியற்ற மக்களால் ஏமாற்றப்படவோ" தேவன் ஏன் அனுமதிக்கிறார்? நம்மில் அநேகர் நெரிசலான புகைவண்டியில் அல்லது பஸ்களில், நம் பணம் "பிக்பாக்கெட்" அடிக்கப்படும் அனுபவத்தையும் அடைந்திருக்கிறோம். நானோ, இவ்விதமான நேரங்களை இந்தத் திருடர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்களுக்காய் ஜெபிக்கும் நல்ல தருணமாகவே எடுத்துக்கொள்கிறேன். இவையெல்லாவற்றிற்கும் மேலாக தேவன் அதிகமாய் விரும்புவதெல்லாம், பணத்தோடும் - உலகப்பொருட்களோடும் உள்ள நம்முடைய அசாதாரணமான பிடிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதேயாகும்! நாம் இழந்த ஒவ்வொரு ரூபாயையும் விரல்விட்டு எண்ணி ஏங்கிக் கவலைகொள்ளவோ நாம் லாபமடையும் ஒவ்வொரு பணத்திற்காகவும் மகிழ்ச்சியடையவோ தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை! ஆம், நாம் "அவரில்" களிகூர்ந்து மகிழ்ந்திருக்கவே அவர் விரும்புகிறார். இந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது? உலக லாபம் கிடைத்துவிட்டதால் கூடவோ, அல்லது உலக நஶ்டத்தால் சற்றும் குறையவோ முடியாத மாறாத மகிழ்ச்சி!


இப்பூமியில் இயேசு இவ்விதமாய்த்தான் நடந்துகொண்டார். இப்போது "நாமும் அவர் நடந்தபடியே நடப்பதற்கு அழைக்கப்படுகிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலிப்பியர் 2:5) என்றல்லவா வேதம் கூறுகிறது. இயேசுவுக்கு யாராவது, அவருடைய ஊழியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதினிமித்தம் நன்றியுணர்வோடு "பத்தாயிரம் ரூபாய்" கொடுத்திருப்பார்களென்றால், இச்செயல் அவருடைய சந்தோஶத்தை இம்மி அளவுகூட அதிகரிக்க முடிந்திருக்காது! ஏனெனில் அவர் பிதாவின்மேல் வைத்த சந்தோஶம் "ஏற்கனவே" நிறைந்ததாகவும், வழிந்தோடுவதாகவும் இருந்தது!! அதுப்போலவே, உலகப்பொருட்களின் நஶ்டத்தாலும் அவருடைய சந்தோஶம் குறைந்திட முடியாததாய் இருந்தது! இயேசுவுக்கு அன்பளிப்பாய் வந்த அதிகமான பணத்தை யூதாஸ்காரியோத்து சுரண்டி சுரண்டி திருடிக் கொண்டிருந்தான். இயேசுவும் இதை நன்கு அறிந்திருந்தார். அவர் யூதாஸ்காரியேத்துக்காக மனம் வருந்தினாலும், தான் இழந்த பணத்திற்காக ஒருபோதும் ‘மனக்கிலேசம்’ அடையவேயில்லை!

உங்களைக் குறித்து என்ன? உலகப் பொருட்களினிமித்தம் உங்கள் சந்தோஶம் கூடவோ குறையவோ முடிகிறதா? அப்படியென்றால், நீங்கள் உங்களை நீங்களே நியாயந்தீர்த்து, இப்படிப்பட்ட மனோபாவத்திலிருந்து இரட்சிப்படையும்படி பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்பட வேண்டியது மிகவும் நிர்ப்பந்தமான அவசியமாகும்!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

ஒவ்வொரு பாடுகளிலும் ஓர் தேவ நோக்கம் உண்டு - செய்தி

ஒவ்வொரு பாடுகளிலும் ஓர் தேவ நோக்கம் உண்டு! - சகரியா பூணன்

"நம் வாழ்க்கையில் குறிக்கிட தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவருடைய "மகிமையான நோக்கம்" ஒன்று உண்டு என நாம் கண்டுகொள்வோமென்றால், அது எத்தனை பெரிய மகிழ்ச்சியான அற்புத வாழ்க்கை! அவர் நம்முடைய ஜெபங்களுக்கு "இல்லை" என்று பதிலுரைத்தாலும், அதுவும் அவரது பூரண அன்பின் இருதயத்திலிருந்தன்றோ பிரவாகிக்கிறது!!

வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களைக் கடிக்கும்படி தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினாரே, அதுவும் அவரது அன்பின் கிரியை தானோ?(எண். ௨௧:6). நிச்சயமாக அப்படித்தான்! ஏனெனில், இதன் மூலம்தான் தேவன் அவர்களை மனந்திரும்பும்படிச் செய்து, தான் அவர்களை ஆசிர்வதிக்கும்படி அவரிடம் அவர்களைத் திரும்பக் கொண்டுவர முடிந்தது! அவரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார்... ஆனால், அவர்கள் மனந்திரும்பும்வரையில் அது அவரால் கூடாத காரியமாய் இருந்தது!!

" நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற திட்டங்களை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக் கேதுவான நினைவுகளே. அது உங்களுக்கு எதிர்கால முடிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும்" என்றே கர்த்தர் உரைக்கிறார்! (எரேமியா ௨௯:௧௧).

இவ்வுலகமானது, நோய் நொடிகளாலும், விஶப்பாம்புகளாலும் நிறைந்த பாதுகாப்பற்ற இடமாய் தேவன் அனுமதித்ததற்கு ஓர் காரணம் உண்டு! அதென்னவெனில், ஜனங்கள் தங்கள் துன்பத்தில் தன்னிடம் திரும்பவும், அவர் அவர்களை ஆசிர்வதிக்கவுமே ஆகும்!! எனவே, சாத்தான் கொண்டுவரும் எல்லாத் தீமையானவைகளையும் தேவன் எவ்வாறு தன் நோக்கம் நிறைவேறும்படி கிரியை செய்ய உபயோகிக்கிறார் என்பதை இப்போது நாம் காணமுடிகிறது! நித்தியத்திற்குள் பிரவேசித்தவர்களை நாம் கண்டு, பாம்புக் கடியையும்; பொருளாதார நெருக்கடியையும்; புற்றுநோய் போன்றவற்றையும் தேவன் எவ்வாறு உபயோகித்து அவர்களைப் பாவத்திலிருந்து விலக்கி அவருடைய பிள்ளையாய் மாறும்படிச் செய்தார் என்று கேட்கும்போது, நாம் இச்சத்தியத்தைப் பூரணமாய் அறிந்து கொள்ளுவோம்! மேலும், தேவன் எவ்வாறு பாடுகளை உபயோகித்துத் தன் பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்தவும், அவருடைய சுபாவத்தை அடையவும் செய்தார் என்றும் அன்று கேட்டறிவோம்!!

இன்று, நாம் பூமியில் அறிந்துகொள்ள முடியாதவைகளை அந்நாளில் அறிந்து கர்த்தரை ஸ்தோத்தரிக்கப் போகிறோம்! இருப்பினும், விசுவாசிக்கும் ஓர் தேவ மனிதன் அந்நாளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவன், தேவனுடைய ஞானத்தையும்; அன்பையும் இப்போதே விசுவாசித்து, எல்லாவற்றிற்காகவும் இப்போதே ஸ்தோத்தரிக்க ஆரம்பிப்பான்!

செய்தி: மனச்சோர்விலிருந்து விடுதலை

மனச்சோர்விலிருந்து விடுதலை!! - சகரியா பூணன்

என் கிறிஸ்தவ வாழ்க்கையை புரட்சியான மாற்றம் செய்த ஓர் சத்தியம் உண்டு. அதென்னவெனில், பிதா, இயேசுவை சித்ததுபோலவே நம்மையும் நேசிக்கிறார் (யோவான் 17:23) என்று இயேசு நமக்கு அருளிய உன்னத வெளிப்பாடேயாகும். மேலும், இவ்விதமாய் பிதா ‘நம்மை நேசிக்கும் ஆச்சரியமான நேசத்தை இவ்வுலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்றும் இயேசு ஜெபித்தார் . ஆனால் இவ்வுலகம் அவ்வாறு அறிந்துகொள்ளுமுன், இச்சத்தியம் "முதலாவது" நம் ஜீவியத்தில் நிஜமாய் மாறவேண்டுமே!

பொதுவாய் எல்லா கிறிஸ்தவர்களுமே, பரலோகத்தில் அன்புள்ள பிதா ஒருவர் இருக்கிறார் என்பதை எழுத்தளவில் விசுவாசிக்கின்றனர். ஆனால் இவர்கள் அடிக்கடி கவலையுற்று, பதட்டம் அடைந்து, ஓர் பாதுகாப்பற்ற பயத்துடன் வாழும் வாழ்க்கை, இவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து இச்சத்தியத்தை விசுவாசிக்கவில்லை என்பதயே நிரூபிக்கிறது. இருப்பினும், இயேசுவை தேவன் எவ்வளவு ‘நேசித்தாரோ அதே அளவு ‘நம்மையும் நேசிக்கிறார் என்ற துணிவான விசுவாசம் கொள்ள கொஞ்சம் பேர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இவ்வுண்மையை இயேசு வெளிப்படுத்தியிராவிட்டால், நம்மில் ஒருவரும் இவ்வித துணிவான விசுவாசத்திற்குரிய பாக்கியத்தை அடைந்திருக்க முடியாது!!

இம்மாபெரும் சத்தியத்தைக் காணும்படி உங்கள் கண்கள் மாத்திரம் திறக்கப்பட்டுவிட்டால் உங்கள் வாழ்க்கையின் முழு அணுகுமுறையையும் இச்சத்தியம் மாற்றிவிடும்! மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா முறுமுறுப்பும் மனச்சோர்வும், நம்பிக்கையின்மையும் அழிந்து ஒழிந்துபோகும்! இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமென்று நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில், இவையாவும் என் வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறதே!!

அநேக ஆண்டுகள் நான் மனச்சோர்விற்கு அடிமையாக வாழ்ந்து தோற்கடிக்கப்பட்டவன். இவ்வாறு நான் இருந்தது பிதாவின் சித்தம் இல்லைதான், இருந்தாலும் நானோ அதிலிருந்து விடுதலையாக முடியாமல் தவித்தேன். என்ன விந்தை! "பிதா இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியத்தைக் காண என் கண்கள் திறக்கப்பட்ட 'அந்த நாளிலிருந்து' எல்லாம் அடியோடு மாறிவிட்டது!! என் வாழ்வின் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொன்றும், என் அன்பின் பிதாவின் கையிலிருந்தே வருகின்றன என்பதை இப்போது தெளிவாய் காண்கிறேன். அவர் என்னைக் கண்ணின் மணிபோல் காக்கிறதைக் கண்டுகொண்டபடியால், இப்போது என் வாழ்வின் எந்த சூழ்நிலையும், என்னை முறுமுறுக்கவோ, மனச்சோர்வடையவோ செய்திட முடிவதில்லை!! பவுல் கூறிய "போதுமென்ற மனதுடனே இருக்கும்" இரகசியத்தையும் கற்றுக்கொண்டு என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலேயும் தேவனைத் துதிக்கிறேன் ( பிலிப்பியர் 4:4, 11; 1 தெச. 5:18). ஆ! இப்போழுது, "தேவன் இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியம் என் வாழ்வில் அசைக்க முடியாத அஸ்திவாரமாய் ஆகிவிட்டது!!

Content From Christian Fellowship Church , Bangalore. (INDIA)

சுய - அனுதாபத்திலிசுந்து விடுதலை!! - சகரியா பூணன்

சுய - அனுதாபத்திலிசுந்து விடுதலை!! - சகரியா பூணன்

"என்னை யாரேனும் நேசிக்கமாட்டார்களா?" என்று ஏங்கி நிற்கும் ஜனங்களால் இவ்வுலகம் நிறைந்த்திருக்கிறது. அநேக கிறிஸ்தவர்களும், தாங்கள் நேசிக்கப்படும்படியாக சபைவிட்டு சபை செல்லுகிறார்கள்! சிலர் நண்பரிகளிடமும், சிலர் திருமண உறவிலும் அவ்வன்பைத் தேடுகிறார்கள். ஆனால் பரிதாபம்! இவ்விதமாய்த் தேடுவதின் பிரதிபலன் ஏமாற்றத்திலேயே முடிவடைகிறது!! அனாதைகளைப் போல, இவ் ஆதாமின் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாய் மீண்டும் மீண்டும் "சுய-அனுதாப நோயினால்" பீடிக்கப்படுகிறார்கள். இதில் தேவனை பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர்! இவ்வாறு இருக்க வேண்டியது நிச்சயமாய் அவசியமேயில்லை!!

இப்பிரச்சனைகளுக்கு சுவிசேஷம் அளிக்கும் விடை யாது? தேவனுடைய அன்பில் பாதுகாப்பைக் கண்டுகொள்வதுதான் இதற்கு நிரந்தரமான விடை! மறுபடியும், இயேசு தன் சீஷர்களுக்கு, அவர்களுடைய தலையின் மயிரெல்லாம் எண்ணப்படிருக்கிறதென்றும், கோடிக்கணக்கான் பறவைகளைப் போஷிக்கிறவர், கோடிக்கணக்கான மலர்களை உடுத்துவிக்கிறவர் நிச்சயமாய் உங்களையும் பராமரித்துக் காப்பார் என்றும் உறுதிபட கூறினார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, "தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று ரொமர் 8:32-ம் வசனம் அறைகூவி முழங்குகிறது.

இதைத்தான், "இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல்" என புதிய ஏற்பாடு விளம்புகிறது. "(நம்மீது தேவன் கொண்ட பூரண அன்பை) விசுவாசித்தவர்களாகி நாமோ, அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்" (எபிரெயர் 4:3) என்றே வாசிக்கிறோம். மேலும், இந்த இளைப்பாறுதலுக்குள், நம் முழு இருதயத்தோடும் நாம் பலவந்தம் செய்து பிரவேசிக்க வேண்டும் எனவும் வேதம் வலியுறுத்திக் கூறுகிறது (எபிரெயர் 4:11). இந்த இளைப்பாறுதலைக் கண்டடையாதவர்களே மிக எளிதில் அலைக்கழிக்கப்பட்டு வீழ்ச்சியடைவார்கள்!

Content from Christian Fellowship Church , Bangalore. (INDIA)

துன்பத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி!! - செய்தி : சகரியா பூணன்

துன்பத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி!! - சகரியா பூணன்

நாம் துன்பங்கள் அடைவதைக் குறித்து பார்ப்போம். நாஸ்திகன் நம்மைப் பார்த்து, "ஓர் அன்புள்ள தெய்வம், உங்களை எப்படி இவ்வளவு துன்பங்களைக் கடந்து வர அனுமதிப்பார்?" என்று கேட்கலாம். ஆவிக்குரிய கல்வித் திட்டத்தில் துன்பமும் ஒரு பகுதி என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆம்! துன்பத்தின் மூலமாகவே தேவன் தன்னுடைய பிள்ளைகளை முதிர்ச்சி பெற நடத்துகிறார். நீங்கள் துன்பம் அடைவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இல்லாதிருந்தால், நீங்கள் வளர்ச்சியும் அடையமாட்டீர்கள் என்பதுதான் பொருள்!

ஒருவேளை, கடந்தமுறை கொஞ்ச துன்பத்திலேயே நீங்கள் முறுமுறுத்து குறை கூறியதால், உங்கள் சொந்த வழியிலேயே செல்வதற்கு தேவன் அனுமதித்திருப்பார். "இப்படி" தேவன் உங்களை ஓர் அறையில் ஒதுக்கி வைப்பது, மிகவும் துக்கம் நிறைந்ததாகும். இவ்வாறு ஒர் அறையில் தேவனால் ஒதுக்கப்படுவதைவிட என் வாழ்கையின் ஒவ்வொரு நாளும் நான் பாடுகளுக்குள் பிரவேசிப்பதே பாக்கியம்!

தேவன் நம்மைத் துன்பத்தின் பாதையில் நடத்தும்போது, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது மதியீனமாகும். எப்படியென்றால், உங்கள் பிள்ளைகள், "தாங்கள் மாத்திரம் பள்ளிக்குச் செல்லும்போது, சேரியில் உள்ள பிள்ளைகள் நாள் முழுவதும் மண்மேட்டில் விளையாடுகிறார்களே!" என வியப்பதற்கு ஒப்பாகும். தேவன் நம்மோடு இடைபடும் கிரியை யாவும் அவர் நம்மீது வைத்த பூரண அன்பினாலேயே கிரியை நடப்பிக்கிறார். நாம் சந்தோஷமாய் இருக்கவே தேவன் விரும்புகிறார்... ஆனால் நுரைபோன்ற மேற்பூச்சான இவ்வுலக சந்தோஷம் அல்ல... மாறாக, பரிசுத்த ஜீவியத்தின் மூலமாய் வரும் உண்மையாய் நிலைத்து நிற்கும் சந்தோஷம்! நாம் பரிசுத்தம் அடைவதற்குத் துன்பத்தைக் கடந்து வருவதல்லாமல் வேறு வழியே இல்லை என வேதம் திட்டமாய் கூறுகிறது (எபிரேயர் 12:10).

இப்பூமியில் நடந்த எல்லோரைக் காட்டிலும் மகிழ்ச்சி நிறைந்த மனிதர் இயேசு ஒருவரே! இருப்பினும் எல்லோரைக் காட்டிலும், அதிகமாய் துன்பம் அடைந்ததும் அவர் ஒருவரே! மேலும் அந்த மகிழ்ச்சி, பிதாவின் சித்தம் செய்ததால் வந்ததே அல்லாமல், மிக எளிதானதொரு ஜீவியத்தால் வந்ததல்ல. தன் பிதா பூரண அன்புள்ளவர் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், பிதா அனுப்பிய எல்லா வழிகளுக்கும் தன்னைப் பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுத்தார்! அவரது முழுமையான வெற்றி வாழ்க்கையின் இரகசியமும் இதுதான்!!

பாவத்தின்மேல் வெற்றி நிச்சயம்! - செய்தி: சகரியா பூணன்

பாவத்தின்மேல் வெற்றி நிச்சயம்! - சகரியா பூணன்

விசுவாசமில்லாமல் தேவனிடமிருந்து ஒன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை சாத்தான் நன்கு அறிவான். அப்படியானால் உங்கள் இருதயத்தை எவ்வளவாய் அவிசுவாசத்தால் நிறைப்பதற்கு அவன் முயற்சி செய்வான் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! அவிசுவாசமானது, பொய் சொல்லுதல் விபச்சாரம் செய்தலைவிட பயங்கர அபாயம் நிறைந்தது. ஏனெனில் பிறவற்றை நாம் பாவங்கள் என்று எளிதில் கண்டுகொள்ள முடியும். ஆனால் அவிசுவாசம் அப்படியல்லவே! அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம், ஜீவனுள்ள தேவனைவிட்டே விலகுவதற்குக் காரணமாகிவிட முடியும் என்று எபிரேயர் 3:12-ம் வசனம் நம்மை எச்சரிக்கிறது. ஆம், அவிசுவாசமே எல்லாப் பாவங்களுக்கும் வேர்!!


"நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால் பாவம் நம்மை ஆளுகை செய்யவே முடியாது" என்று ரோமர் 6:14-ம் வசனம் திட்டமாய் கூறுகிறது. மிக வெளிப்படையான இவ்வசனத்தை ஒரு சிறுபிள்ளை கூட புரிந்துகொள்ள முடியும்! இவ்வாறெல்லாம் இருந்தும், அநேக விசுவாசிகள் பாவத்தின்மேல் பூரண வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் என்ற சத்தியத்தை விசுவாசிக்கவில்லையே!!

நீங்கள் வெற்றி வாழ்க்கை வாழவே தேவன் விரும்புகின்றார்! உங்கள் சிந்தனை ஜீவியம் எவ்வளவு அருவருப்பாய் இருந்தால் என்ன? எவ்வளவோ காலம் நீங்கள் கோபத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் என்ன? இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல! தேவன் உங்களை நுற்றுக்கு நுறு விடுதலை செய்து சுத்த இருதயத்தை உங்களுக்கு கொடுத்திட முடியும்! ஆனால் இவையெல்லாவற்றையும், உங்களிடம் விசுவாசம் இல்லையென்றால், அவரால் ஒன்றும் செய்யவே முடியாது!

நாம் இருதயத்தில் விசுவாசிப்பதை, வாயினால் அறிக்கை செய்ய வேண்டும் என்றல்லவா வேதம் கூறுகிறது (ரோமர் 10:10). இது ஓர் மிக முக்கியமான கோட்பாடாகும்! ஏனெனில், வாயினால் அறிக்கை செய்வதின் மூலமாகவே நம் இருதயத்தின் விசுவாசத்தை நாம் பிரதிபலித்திட முடியும். இதன் விளைவுதான், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகும் இரட்சிப்பிற்குள் நம்மை நடத்துகிறது. எனவே, இப்போது சாத்தானை நோக்கி நம் சாட்சியின் வார்த்தைகளை அறிக்கை செய்து முழங்குவோமா? "சாத்தானே! தேவன் என்னைப் பாவத்தின்மேல் பூரண வெற்றியுள்ள வாழ்விற்குள் நடத்தப் போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்!!" ஆம், இவ்வாறுதான் நாம் சாத்தானை ஜெயித்திட முடியும் (வெளி 12:11). வெற்றி உங்கள் வாழ்வில் நிஜமாய் வந்துவிடும்வரை, நீங்கள் வீழ்ச்சியடையும் நேரமெல்லாம், இந்த அறிக்கையை செய்துகொண்டே இருங்கள். ஜெயம் சொற்ப நாட்களில் வந்துவிடாது! எனவே கொஞ்சமும் அதைரியம் அடைந்துவிடாதீர்கள்...


தேவன் உங்கள் வாயின் அறிக்கையை நிச்சயம் கனப்படுத்துவார்!!

Post From Christian Fellowship Church , Bangalore. (INDIA)