இயேசுவின் இரத்தம் ஜெயமா ?

இயேசுவின் இரத்தம் ஜெயமா?

செய்தி: Bro. Barnabas

அநேக கிறிஸ்தவ வீடுகளில் இந்த வார்த்தையை வசன அட்டையாக இருப்பதை பார்த்து இருப்பீர்கள்

உண்மையில் இப்படிப்பட்ட வசனம் வேதாகமத்தில் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அப்படி நேரடியான எந்தவொரு ஒரு வசனத்தையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது

இன்னும் சில போதகர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஜெபித்து சிலருடைய வீடுகளில் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி வீடு முழுவதும் தெளித்துக் கொண்டு இருக்கிறார்கள்
ஏனென்றால் அப்போது தான் பிசாசு ஒடி, வீடு பரிசுத்தமாகுமாம் இப்படி சொல்லி கிறிஸ்தவ ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்

உலகத்தை ஜெயிப்பது நம்முடைய விசுவாசமா அல்லது இயேசுவின் இரத்தமா?

A) நம்முடைய விசுவாமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது
1Jo 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

நாம் உலகத்தை ஜெயிக்க வேண்டுமானால் யாரை விசுவாசிக்க வேண்டும்?
1Jo 5:5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
நாம் தேவனால் உண்டாயிருந்தோமானல் உலகத்தை ஜெயிப்போம்
1Jo 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; …

B) இயேசு உலகத்தை எப்படி ஜெயித்தார்?
Joh 16:33 ... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்து இருக்கிறார் என்றால் எந்த இரத்தத்தை கொண்டு ஜெயித்து இருக்கிறார்

இயேசு கிறிஸ்து தேவனுடைய கட்டளைகளை விசுவாசித்து முழுவதும் அதற்கு கீழ்ப்படிந்தபடியினால் தான் உலகத்தை அவர் ஜெயித்தார்

C) பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை உலகத்தை எப்படி ஜெயித்தார்கள்?
Heb 11:33 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,

அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்ன செய்கிறது?
1) கிறிஸ்துவின் இரத்ததினால் நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இருக்கிறது
Eph 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
Col 1:14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
1Pe 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1Jo 1:7 ,,, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

2) கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டு பண்ணி இருக்கிறார்
Col 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

3) கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே நித்திய மீட்பை உண்டு பண்ணியிருக்கிறார்
Heb 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

4) கிறிஸ்துவின் இரத்தம் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நம்முடைய மனச்சாட்சியை சுத்திகரிக்கிறது
Heb 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

5) கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது
Heb 10:20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

6) கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்
Rev 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

இப்படி அநேக வேத வாக்கியங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது

ஆனால் வேத வசனத்தின்படி நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது
1Jo 5:4 ... நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

வேத வாக்கியம் அல்லாத எந்த ஒரு வசனத்தையும் அங்கிகரிக்காதீர்கள்

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்