நம்மால் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?

நம்மால் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?

இந்த கிருபையின் உபதேசத்தை போதிக்கக்கூடியவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்னவென்றால் நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியாது அதனால் தேவனுடைய கிருபை நம்முடைய பாவங்களை மன்னிக்கும் என்று போதிப்பார்கள்

பழைய ஏற்பாட்டில் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி அறியாமையினால் செய்த பாவங்களுக்கு மாத்திரமே தேவனிடத்தில் மன்னிப்பு இருக்கிறதே தவிர துணிகரமான பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை

1) நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?
1Jo 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ,,,,,
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

நாம் பாவம் செய்யாதபடிக்கும் கிறிஸ்துவைப்போல பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் தேவன் இந்த வேத வாக்கியங்களை நமக்கு கொடுத்து இருக்கிறார்

2) பொல்லாங்கனை நம்மால் ஜெயிக்க முடியுமா?
1Jo 2:13 .... வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். ....
1Jo 2:14 .... வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

3) பாவம் செய்கிறவன் யாரால் உண்டாகி இருக்கிறான்?
1Jo 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

பாவம் செய்வதை எங்களால் நிறுத்த முடியாது என்று சொல்லுகிறவர்கள் பிசாசினால் உண்டாயிருக்கிறார்கள்

4) தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்ய மாட்டான்
1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

5) தேவனால் பிறந்தவன் எப்படி இருக்கிறான்?
1Jo 3:3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

6) நாம் ஏன் பாவம் செய்ய மாட்டோம்?
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

அவருடைய வித்து நமக்குள் தரித்து இருக்கிறபடியால் நாம் பாவம் செய்ய மாட்டோம்

7) அவருடைய வித்து என்ன?
1Pe 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

8) நம்மால் பிசாசின் கிரியைகளை அழிக்க முடியுமா?
1Jo 3:8 ,,, பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து பிசாசினுடைய கிரியைகளை அழித்து இருக்கிறார் என்றால் நம்மாலும் அழிக்க முடியும்

A) ஏனென்றால் கிறிஸ்துவும் நம்மைப்போல மாம்சத்திலும் இரத்தத்திலும் தான் இந்த பூமியில் பிறந்தார்
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; ,,,,,,,

B) எதற்காக கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து சிலுவையில் மரித்தார்?
1Pe 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்து இருக்கும் படிக்கு தான் கிறிஸ்து சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்தார்

C) எவ்விதத்திலும் தம்முடைய சகோதரர்க்குக்கு ஒப்பாக இருந்தார்
Heb 2:17 அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.

D) கிறிஸ்து சோதிக்கப்பட்டு பாடுபட்டத்தினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்
Heb 2:18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

E) நம்முடைய பிரதான ஆசாரியர் பாவம் இல்லாதவராக இருக்கிறார்
Heb 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

F) கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக இந்த பூமியில் நாம் இருந்தால் தான் நித்தியத்திலே நமக்கு நித்திய ஜீவனும் கனமும் மகிமையும் இருக்கும்
Rom 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
Rom 8:30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

அன்பு (LOVE) என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன ?

அன்பு(LOVE) என்பதற்கு தேவன் கொடுக்கும் அர்த்தம் என்ன?

அன்பு என்றால் உலகத்தார் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்கிறார்கள்
நமக்கு பிரியமானவர்களை பார்க்கும் போதும் அவர்களோடு பேசும் போதும் அவர்களுக்கு உதவி செய்யும் போதும் நம்முடைய சரீரத்திற்குள் ஏற்படக்கூடிய ஒருவித உணர்ச்சி தான் அன்பு என்று அநேகர் சொல்லுகிறார்கள்

நம்முடைய புதிய ஏற்பாட்டில் அன்பு என்றால் என்னவென்று பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவன் தெளிவாக கட்டளையிட்டு இருக்கிறார்

1) தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவது தான் அன்பு
1Jo 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

2) இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவன் எவனும் தேவனிடத்தில் அன்பு கூறுகிறான்
1Jo 5:1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

3) தேவனுடைய கட்டளையை கைக்கொள்ளும் போது தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு கூறுகிறோம்
1Jo 5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

4) பிதாவின் அன்பை நாம் அவருடைய குமாரனை நமக்கு ஒப்புக் கொடுத்ததினாலே அறிந்து இருக்கிறோம்
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

5) இயேசு கிறிஸ்து எப்படி பிதாவினிடத்தில் அன்பு செலுத்தினார்?
இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்து இருந்தார்
Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, ,,,,,
Joh 8:55 ..... அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
இயேசு கிறிஸ்து மரணபரியந்தம் பிதாவுக்கு கீழ்ப்படிந்து இருந்தார்
Phi 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

6) இயேசு கிறிஸ்துவினிடத்தில் நாம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து கீழ்ப்படியும் போது அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்
Joh 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
Joh 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
Joh 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

7) கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு ஒருவன் செவி கொடுத்து கீழ்ப்படியும் போது கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இருக்கிறான் கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இருக்கிறான் அவருக்கு அந்த வார்த்தைகளை கொடுத்த பிதாவினிடத்தில் அன்பு கூறுகிறான்
Joh 14:24 .. நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

8) அவருடைய வசனத்தை கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாய் பூரணப்பட்டு இருக்கும்
1Jo 2:5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

9) கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருக்கிறோம் என்று சொல்லுகிறன் அவன் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்
1Jo 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

10) இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பாய் இராதவன் அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள மாட்டான்
Joh 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்....
1Jo 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

அப்படியானால் அநேகர் தேவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கு விசுவாசம் வைத்தால் மாத்திரம் போதும் என்கிறார்கள். அதினால் என்ன பிரயோஜனம்?
தேவனுடைய எல்லா கட்டளைகளையும் விசுவாசித்து எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும் போது அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம் அது தான் மெய்யான அன்பாக இருக்கிறது

கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா ?

கிறிஸ்தவர்கள் திரைப்படங்களையும் நாடகங்களையும் விரும்பலாமா?

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
பிசாசானவன் இன்றைக்கு இப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் மூலமாக பெரும்பாலும் எல்லா கிறிஸ்தவர்களை அடிமையாக வைத்து இருக்கிறான்
1Pe 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

அநேகர் இந்த திரைப்படங்களினாலும் நாடகங்களினாலும் நாவல்களினாலும்(கதைகளினாலும்) பிசாசானவனால் விழுங்கப்பட்டு விட்டார்கள்
நிறைய குடும்பங்களில் சீரியல் நாடகங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
இன்னும் அநேக குடும்பங்கள் திரைப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
2Pe 2:19 தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.

இன்றைய கிறிஸ்தவ குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளோடு கூட உட்கார்ந்து சீரியல் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஒருவேளை பார்க்க முடியாவிட்டால் தங்கள் பிள்ளைகளிடம் இன்றைக்கு நாடகத்தில் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுகிறார்கள்

அப்படிப்பட்ட நாடகத்தில் வரக்கூடிய எல்லா காட்சிகளும் ஆபாசமான வசனங்களும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால கிறிஸ்தவ வாழ்க்கையை அழித்து போட்டு விடும் என்பதை இன்னும் அநேகர் உணராமல் இருக்கிறார்கள்

திரைப்படங்களையும் சீரியல் மற்றும் நாடகங்களையும் எடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
அதில் நடிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?

இந்த திரைப்படங்களையும் நாடகங்களை (சீரியல்) நாவல்களையும் கதைகளையும் குறித்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,

1) பொய்யான கதாபாத்திரங்கள்
2) பொய்யான கதைகள்
3) அந்த கதாபாத்திரத்திற்கு பொய்யான பெயர்கள்
4) பொய்யான வசனங்கள்
5) பொய்யான நடிப்பு
6) பொய்யான கோபங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், அழுகைகள்
7) பொய்யான இடங்கள்
8) பொய்யான உறவுகள்

இதில் ஏதாவது உண்மை சம்பவங்கள் இருக்கிறதா?

இதை உருவாக்கக்கூடிய அனைவரும் பொய்யர்கள் இவர்களை பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்
Rev 22:15 ..... பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

பொய்யை விரும்பு அதின்படி செய்கிற என்று தமிழில் வேதாகமத்தில் வந்து இருக்கிறது ஆனால் கிரேக்க வேதாகமத்தில் பொய்யை உருவாக்குகிற யாவரும் என்று வந்து இருக்கிறது

பொய்யை உருவாக்கி அதை திரைப்படங்களாகவும் அதை சீரியல் நாடகங்களாகவும் நாவல்களாகவும் உருவாக்கிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள் என்று தேவன் சொல்லுகிறார்

அந்த பொய்யை விரும்புகிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள் என்கிறார்கள்

பொய்யை உருவாக்குகிறவர்களும் அந்த பொய்யை விரும்புகிறவர்கள் யாவரும் புறம்பே இருப்பார்கள்
Rev 21:8 ...... பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

பாருங்கள் இந்த திரைப்படங்கள் நாடகங்கள் நாவல்கள் எல்லாம் பொய்யாய் இருக்கிறது அதை விரும்பி பார்க்கும் போது பொய்யை விரும்புகிறோம் விரும்பி படிக்கும் போது பொய்யை விரும்புகிறோம்

அப்படியானால் அதை உருவாக்குகிறவர்களும் அதை விரும்பி பார்க்கிறவர்களும் அதை படிக்கிறவர்களும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியுமா?
Rev 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

திரைப்படங்களும் நாடகங்களும்(சீரியல்) நாவல்களும்(எல்லா கதைகளும்) தேவனுடைய பார்வையில் தீட்டுள்ளது அருவருப்பானது

இன்றைய செய்திதாள்களில் சமீபத்தில் மனைவி சீரியல் நாடகம் பார்த்து கொண்டு இருந்து போது சேனலை கணவர் மாற்றி விட்டார் என்பதற்காக தன் உடம்பில் தீ வைத்து கொண்டாள், அவளை காப்பாற்ற போன கணவனும் தீயில் கருகி இருவருமே மரித்து போய் விட்டார்கள் ஒவ்வொரு இடத்திலும் இதே போல் அநேக சம்பவங்கள் நடக்கிறது

இப்படிப்பட்ட நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்து அநேக உறவுகள் முறிந்து போய் இருகிறது.
2Ti 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

நமக்கு நித்திய ஜீவன் வேண்டும் என்றால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு விலகி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்
1Ti 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1Ti 6:21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

நான் இங்கு எழுதின என்னுடைய சொந்த வாக்கியங்கள் நியாயத்தீர்ப்பு நாளிலே எரிந்து போய் விடும் ஆனால் இங்கே மேற்கோள் காண்பித்த தேவனுடைய வார்த்தை மாத்திரமே அக்கினியில் நிற்கும் அதை மாத்திரம் விசுவாசியுங்கள் அதற்கு மாத்திரமே கீழ்ப்படிந்து நடப்போம்

1Co 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
1Co 3:14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்

எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள் 

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற சிலர் பேஸ்புக்கில் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத தேவனுடைய வார்த்தைகளின் பதிவுகளில் மோசமான வார்த்தைகளினால் பேசி சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
Jam 4:1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?

1)எந்தவொரு மனுஷனையும் நாம் தூஷிக்கக்கூடாது ஏனென்றால் நாம் ஒவ்வொரு வரும் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறோம்
Gen 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

2) நாம் ஒரு மனுஷனை மோசமான வார்த்தைகளினால் சபிக்கின்றபோதும் தூஷிக்கின்ற போதும் தேவனை தான் சபித்து தூஷிக்கிறோம்
Jam 3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

3) ஏழைகளையும் உடல் பெலவீனமானவர்களையும் நிந்திக்கின்ற போது தேவனை தான் நிந்திக்கிறோம்
Pro 14:31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;....
Exo 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

நாம் தேவனை தூஷித்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள், நிச்சயம் சுதந்தரித்துக் கொள்ள முடியாது

4) பிறரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்
Pro 14:21 பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்...

5) நாம் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் தான் ஒருவருக்கொருவர் கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ள வேண்டும்
Rom 12:10 ,,,,, கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

6) நாம் சண்டையிட்டு ஏன் மனுஷனுடைய இரத்தத்தை சிந்தக்கூடாது?
ஏனென்றால் நாம் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் தான்
Gen 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

7) நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Mat 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

8) நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் தான் நாம் நீதிமானான அல்லது குற்றவாளியா என்று நியாயந்தீர்க்கும்
Mat 12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

9) பேஸ்புக்கில் இப்போதும் மோசமான வார்த்தைகளினால் தேவனுடைய சத்தியத்திற்கு விரேதமாக எழுதக்கூடிய நபர்களின் இருதயத்தில் என்ன பொக்கிஷம் இருக்கிறது?
Mat 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

10) இப்படி பட்ட நபர்கள் என்ன மரமாக என்ன கனியாக இருக்கிறார்கள்?
Mat 12:33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
Mat 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

11) ஒரு நபர் தேவனுடைய சத்தியத்தை சத்தியமாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
Gal 6:1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2Th 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
2Th 3:15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

12) தேவனுடைய சத்தியத்தை புரட்டுகிற வேத புரட்டர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
Tit 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

13) நாம் பக்திவிருத்திக் கேதுவான நல்ல வார்த்தைகளை மாத்திரமே பேச வேண்டும்
Eph 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
Eph 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
Eph 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

14) நமக்கு விரோதமாக யார் எழும்பி தூஷித்தாலும் மோசமான வார்த்தைகளினால் சபித்தாலும் நாம் செய்ய வேண்டியது இது தான்
Mat 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
Mat 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளையா அல்லது புதிய ஏற்பாட்டின் கட்டளையா?

தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளையா அல்லது புதிய ஏற்பாட்டின் கட்டளையா?

ஒரு சிலர் என்னோடு தனிப்பட்ட முறையில் தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளை இல்லை ஆபிரகாமும் யாக்கோபும் கொடுத்து இருக்கிறார்கள் என்று வாக்குவாதம் செய்கிறார்கள்
அது உண்மை தான்

1) ஆபிரகாமும் யாக்கோபும் தசமபாகம் கொடுத்தார்கள்
Gen 14:20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
Gen 28:22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

2) இந்த தசமபாக காணிக்கையை தான் தேவன் நியாயப்பிரமாணத்தில் ஒரு கட்டளையாக கொடுத்தார்
Lev 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Heb 7:5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

3) இந்த கட்டளை மாத்திரம் அல்ல முற்பிதாக்களுக்கு இரத்தத்தை புசிக்க கூடாது என்கிற கட்டளையும் கொடுத்தார்
Gen 9:4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

4) இதே கட்டளையை தேவன் நியாயப்பிரமாணத்தில் ஒரு கட்டளையாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார்
Lev 17:14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

5) இஸ்ரவேலர்கள் தசமபாகமாக என்ன கொடுத்தார்கள்?
Deu 12:17 உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
Deu 14:22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Deu 14:23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.
2Ch 31:5 இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.

6) இயேசு கிறிஸ்துவும் கூட இஸ்ரவேலர்கள் இதை தான் தசமபாகம் கொடுத்தார்கள் என்று சாட்சி கொடுக்கிறார்
Mat 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, ,,,,,,

தேவனுடைய வார்த்தையின் படி தான் தசமபாக கொடுக்க வேண்டும் வலியுறுத்துகிறவர்கள் ஏன் இதையெல்லாம் தசமபாகமாக கேட்பது இல்லை

இந்த வேத வாக்கியங்களை பாருங்கள் இஸ்ரவேலர்கள் தசமபாகம் என்று பணத்தை கொடுக்கவில்லை

7) இன்றைக்கு தசமபாகம் என்று அநேகர் எதை கேட்கிறார்கள்?
பணம்
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

8) தேவன் இன்றைக்கு புதிய உடன்படிக்கையில் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிற காணிக்கை இது தான்
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு கிறிஸ்தவர்கள் தசமபாகம் கொடுத்தார்கள் என்று ஒரு வசனத்தை எனக்கு ஆதாரமாக காண்பியுங்கள்

புதிய ஏற்பாட்டில் ஒரு கிறிஸ்தவன் தசமபாகம் கொடுத்தான் என்ற வசனம் இருந்தால் (அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்திற்கு மேல்) எனக்கு தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் இந்த தசமபாக விசயத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள்

இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

இயேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்?

கிறிஸ்து ஏன் சிலுவைக்கு போனார் என்று கிறிஸ்தவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லக்கூடிய பதில் என்னுடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பார்கள்

இந்த பதில் உண்மையாக இருந்தாலும் முழுமையான பதில் இல்லை ஏனென்றால் கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கு அநேக காரணங்கள் இருக்கிறது

அது என்ன என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

1) இயேசு கிறிஸ்து பிதாவை அன்பு கூர்ந்தபடியாலும் பிதா அவருக்கு கட்டளையிட்டபடி செய்கிறார் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்படிக்கு சிலுவையில் மரித்தார்
Joh 14:31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு கிறிஸ்து பிதாவிடம் அன்பாய் இருந்தபடியால் அவருடைய கட்டளைகளை கைகொண்டார்
Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனை சிலுவையில் கொடுத்ததின் மூலம் பிதா மேல் வைத்து அன்பை வெளிப்படுத்தினார்
Joh 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

2) இயேசு கிறிஸ்து யூதர்களை நியாயப்பிரமாண சாபத்திலிருந்து நீங்கலாக்கி மீட்கும்படி சிலுவையில் மரித்தார்
Gal 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

3) இயேசு கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை சிலுவையில் குலைத்து போடும்படிக்கு சிலுவையில் மரித்தார்
Col 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Col 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

4) இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தவர்களின் பாவங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிலுவையில் மரித்தார்
Rom 3:25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்

5) இயேசு கிறிஸ்து எல்லா மனுஷரையும் தம்மிடம் இழுந்து கொள்ளும்படி சிலுவையில் மரித்தார்
Joh 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
Joh 12:33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

6) இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும பலியாகவும் ஒப்புக் கொடுக்கும்படி சிலுவையில் மரித்தார்
Eph 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

7) இயேசு கிறிஸ்து மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் கர்த்தராக இருக்கும்படி சிலுவையில் மரித்தார்
Rom 14:9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

8) இயேசு கிறிஸ்து பிசாசை தம்முடைய மரணத்தினாலே அழிக்கும்படி சிலுவையில் மரித்தார்
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

9) இயேசு கிறிஸ்து யூதரையும் புறஜாதிகளையும் தேவனுக்கு ஒப்புரவாக்கும்படி சிலுவையில் மரித்தார்
Eph 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
Eph 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

10) இயேசு கிறிஸ்து அக்கிரமக்காரர்கள் தேவனிடத்தில் மனந்திரும்படியும் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிலுவையில் மரித்தார்
Rom 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
Rom 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

11) இயேசு கிறிஸ்து நாம் அவரைப் போல நன்மை செய்து பாடுபட வேண்டும் என்ற மாதிரியை காண்பிப்பதற்காக சிலுவையில் மரித்தார்
1Pe 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

12) இயேசு கிறிஸ்து நாம் என்றென்றும் அவரோடு ஜீவிக்க வேண்டும் என்பதற்காக சிலுவையில் மரித்தார்
1Th 5:10 நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போனதற்கு இன்னும் அநேக காரணங்கள் இருக்கிறது

நம்முடைய பாவத்திற்காக மாத்திரம் அவர் சிலுவைக்கு போனார் என்பது முழுமையான சத்தியம் இல்லை

பாஸ்டர்(pastor) என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

பாஸ்டர்(pastor) என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

Mat 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
Rev 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

இன்றைக்கு கையில் பைபிள் எடுத்தவர்கள் எல்லாம் தங்களை பாஸ்டர் என்ற அழைத்துக் கொள்ளுவதை பார்த்து இருப்பீர்கள்.அநேக ஊழியக்காரர்களும் தங்களை பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளுவதை விரும்புகிறார்கள், ஆனால் புதிய ஏற்பாட்டு வேத வாக்கியத்தில் இந்த பாஸ்டர் என்ற வார்த்தை ஒரே ஒரு முறைதான் வந்து இருக்கிறது
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
Eph 4:11 And he gave some, apostles; and some, prophets; and some, evangelists; and some, pastors and teachers;

இந்த வசனத்தில் மேய்ப்பர் என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் பாஸ்டர் என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.

இந்த மேய்ப்பன்(pastor) என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்
Act 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
Act 20:17 And from Miletus he sent to Ephesus, and called the elders of the church.
இந்த வசனத்தில் மேய்ப்பர் என்ற மூப்பர்(elder) என்று பெயர்க்கப்பட்டுள்ளது

Act 20:28 Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.
Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
பாஸ்டர்(pastor) (மூப்பர்) என்ற வார்த்தை இந்த இடத்தில் கண்காணிகள் (overseers) என்று மொழி பெயர்க்கப்பட்டள்ளது

1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:1 This is a true saying, If a man desire the office of a bishop, he desireth a good work.
அதே மேய்ப்பன்( என்ற வார்த்தை இந்த பகுதியில் கண்காணி(bishop) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாருங்கள் பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) போன்ற அனைத்து வார்த்தையும் ஒரே கர்த்தருடைய பணியைத்தான் குறிப்பிடுகிறது.

இந்த பாஸ்டருக்கான(pastor, elder, bishop, overseer) தகுதிகள் என்ன?
பரலோகத்தின் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு அதற்கான தகுதியைக் கொடுத்து இருக்கிறார்.
பாஸ்டர் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களுக்கு இந்த எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்
1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
1Ti 3:3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
1Ti 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
1Ti 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
1Ti 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
1Ti 3:7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
Tit 1:5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
Tit 1:6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
Tit 1:7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
Tit 1:8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
Tit 1:9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.

பாருங்கள் பாஸ்டருக்கான தகுதிகளில் அவர் திருமணம் ஆனவராக இருக்கவேண்டும். அவருக்கு பிள்ளைகள்(பன்மை) இருக்கவேண்டும், மேலும் மேற்சொன்ன எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்

அதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல்(திருமணம் செய்யவில்லை) தன்னை மூப்பர்(elder) என்றோ பாஸ்டர்(pastor,மேய்ப்பன்) என்றோ கண்காணி((bishop, overseer.பிஷப்) என்றோ தன்னை அழைக்காமல் தன்னை கர்த்தருடைய ஊழியக்காரன்(அடிமை) என்றும் சகோதரன் என்றே தன்னை அழைத்துக் கொண்டார்.

பாஸ்டர்(pastor) எப்படி தெரிந்து எடுக்கப்பட வேண்டும்?

பாருங்கள் பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) இந்த வார்த்தைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் ஒருமையில் பயன்படுத்தப்படவில்லை எல்லா வார்த்தைகளும் பன்மையில்(ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்) வார்த்தையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகளில் பாஸ்டர்(மூப்பர்) என்பவர் இல்லை பாஸ்டர்கள்(மூப்பர்கள்) என்று ஒன்று மேற்பட்டவர்கள் தான் இருந்து இருக்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்த சபைகளில் 1தீமோ 2;1 -7 தீத் 1:5-9 வசனங்களில் உள்ள தகுதிகள் யாருக்கு இருக்கிறதோ அவர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களை பாஸ்டர்களாக(மேய்ப்பர்கள். மூப்பர்கள். கண்காணிகள்) தெரிந்து எடுக்கலாம். இதில் ஏதாவது ஒரு தகுதி குறைந்தாலும் அவர்கள் பாஸ்டர்களாக(pastor,மேய்ப்பன்.(மூப்பர்,elder,) (கண்காணி,bishop, overseer) நியமனம் செய்யக்கூடாது.
தெரிந்து எடுக்கும் பாஸ்டர்களை சபையானது போஷிக்க வேண்டும்
1Ti 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

சபையின் ஊழியரும்,சபையின் விசுவாசிகளும் தெரிந்து எடுக்கப்படும் பாஸ்டர்களுக்கு(pastor,மேய்ப்பன்.(மூப்பர்,elder,) (கண்காணி,bishop, overseer) கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
Heb 13:17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

ஆகையால் இந்த தகுதிகள் இல்லாதவர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யக்கூடியவர்கள் தங்களை ஊழியக்காரர்கள்(அடிமைகள்) என்றும் சகோதரர்கள் அழைத்துக் கொள்ள வேண்டும்
Mat 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது

பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது

செய்தி: Ariyel Barnabas

இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக பிரசித்த பெற்ற போதகர்கள் மக்களை நோக்கி: நீங்கள் கிறிஸ்துவினிடத்தில் வந்தால் உங்களுக்கு வீடு தருவார் கார் தருவார் உங்கள் கடன்களையெல்லாம் அடைப்பார் ஐசுவர்யம் தருவார் என்று தான் போதிக்கிறார்கள்

இதற்காக அப்படிப்பட்ட அநேகரை மேடை மீது அழைத்து சாட்சி சொல்ல வைக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் என்னவென்றால் தங்களுடைய கூட்டம் நடைபெறும் இடங்களில் இப்படிப்பட்ட சாட்சிகளை ஏற்படுத்தி நீங்களும் எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் தேவன் உங்களை ஐசுவர்யவான்களாக்குவார் என்பது தான், கொடுக்கக்கூடிய ஜனங்கள் ஐசுவர்யவான்களாகுகிறார்களோ இல்லையோ அப்படி போதிக்கிற ஊழியர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரராகி விடுகிறார்கள்

நீங்கள் கர்த்தருக்கு தசமபாகம் கொடுங்கள் கர்த்தர் உங்களை 100 மடங்கு ஆசீர்வதிப்பார் என்று இப்படிப்பட்ட போதகர்கள் வாக்குத்தத்தம் செய்கிறார்கள். ஜனங்களுக்கு பண ஆசையை தூண்டி விடுகிறார்கள் ஜனங்கள் தங்களும் வீடு கட்ட வேண்டும் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று நினைத்து இப்படிப்பட்டப்பட்டவர்கள் கடன் வாங்கியாவது பணத்தை அனுப்புகிறார்கள்
Ecc 5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
Ecc 5:11 பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?

1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது....
இந்த வசனத்தில் பணம் எல்லாம் தீமைக்கும் வேராய் இருக்கிறதா? அல்லது பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராய் இருக்கிறதா?
பண ஆசை தான் எல்லாத்தீமைக்கும் வேராய் இருக்கிறது
பணம் எல்லாவற்றிற்கும் உதவும் என்ற வேத வாக்கியம் போதிக்கிறது
Ecc 10:19 ... பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

பணம் எப்படி நமக்கு எல்லாவற்றிற்கும் உதவும்?
1) நம்முடைய ஜீவனத்திற்கு தேவன் வாக்குத்தத்தம் செய்த உணவையும் உடையையும் அதில் வாங்க முடியும்
Mat 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
Mat 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

2) வாரத்தின் முதல் நாளில் தேவனுடைய கட்டளையின் படி காணிக்கை கொடுப்பதற்கு பணம் நமக்கு உதவி செய்கிறது
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

3) யாவருக்கும் விசுவாச குடும்பத்தாருக்கும் நன்மை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது
தரித்திரர்களுக்கு உதவி செய்தவற்கு பணம் தேவைப்படுகிறது
Gal 6:10 ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.

4) அரசாங்கத்திற்கு வரியையும் தீர்வையும் கொடுப்பதற்கு பணம் தேவைப்படுகிறது
Rom 13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.
Rom 13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

ஆனால் இதற்கு மேல் ஐசுவர்யவான்களாக வேண்டும் என்று விரும்பும் போது தான் நமக்கு பிரச்சனையே எழும்புகிறது
1Ti 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

ஐசுவரியவான்களாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இதில் நிச்சயம் விழுவார்கள்
1) சோதனை
2) கண்ணி
3) மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துக்கிற மதிகேடு
4) சேதம்
5) பலவித இச்சைகள்

கிறிஸ்தவர்கள் ஐசுவரியவான்களாக வேண்டும் என்று விரும்பினால்?
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது தேவனுடைய வாக்குத்தத்தம் நிச்சயம் ஒருபோதும் பெய்யாய் போகாது

இயேசு கிறிஸ்து பணப்பையை ஒரு போதும் தன்னிடத்தில் வைத்துக் கொள்ளவில்லை

அந்த பணப்பையை வைத்திருந்த யூதாஸ் காரியோத்தை குறித்து வசனம் என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்
Joh 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
Joh 13:29 யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

யூதாஸ் காரியோத் பணப்பையை வைத்து இருந்ததினாலே சோதனையில் விழுந்து இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்து அதில் வரக்கூடிய பணத்தையும் தன் பணப்பையிலே நிரப்புவதற்கு முயற்சி செய்தார்

அவருடைய முடிவை நாம் எல்லாரும் அறிந்து இருக்கிறோம்
Ecc 5:13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
Ecc 5:14 அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை.

இந்த தேவனுடைய வாக்கியத்தை நாம் உணர்ந்தால் பண ஆசை நமக்கு இருக்குமா?
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
Ecc 5:15 தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
1Ti 6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

பங்களார் திட்டம் என்று ஜனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்
1Co 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

பண ஆசையை வெறுக்கிறவர்களுக்கு தேவனுடைய கட்டளை இது தான்
பண ஆசையை விட்டு ஓடு என்று கட்டளையிடுகிறார் பாருங்கள்
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1Ti 6:12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

தேவனுடைய மனுஷன் யார் என்றால் இன்றைக்கு அநேகர் பெரிய பெரிய ஊழியர்களை கையை காண்பிக்கிறார்கள் ஆனால் வேத வசனங்கள் என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்
யார் பண ஆசையை வெறுக்கிறார்களோ அவர்களை தான் தேவனுடைய மனுஷன் என்று வேத வாக்கியம் அழைக்கிறது
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே,,,,,

உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்
Mat 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
Mat 6:20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
Mat 6:21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

கண்ணீரை காண்பவர்

கண்ணீரை காண்பவர்

Post from: விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?. (சங்கீதம் 56:8). இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. அதை வாங்கும் தாயோ, மனைவியோ, அந்த போர் வீரனிடம், ‘நீ போவது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. நீ வரும்வரை நான் உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருப்பேன். இரவெல்லாம் நான் வடிக்கும் கண்ணீரை இந்த பாட்டிலில் சேர்த்து வைத்து நீ வரும்போது, நீ எனக்கு எவ்வளவு விசேஷித்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உனக்கு பரிசளிப்பேன்’ என்று சொல்வார்களாம். கி.பி. 100 ம் வருடத்தில், எகிப்தில் உள்ள பார்வோனின் கல்லறையில் நிறைய கண்ணீர் பாட்டில்களை கண்டெடுத்தனர். அவைகள் அந்த பார்வோனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் ஒருமுறை உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அநேக போர்வீரர்கள் மரித்தனர். அவர்களுடைய விதவைகள், முதலாம் வருடத்தில் அவர்களின் இறந்த நாளில் கல்லறைகளுக்கு சென்று, அந்த கண்ணீர் பாட்டிலில் உள்ள கண்ணீரை தெளித்து, அந்த முதலாம் நினைவு நாளை கொண்டாடினார்கள். இன்று வரை துக்கத்தில் இருப்பவர்களுக்கு பரிசாக வெளிநாடுகளில் சில இடங்களில் கண்ணீர் பாட்டில்களை கொடுக்கிறார்கள். இப்படத்தில் இருப்பதைப் போன்ற கண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இந்த கண்ணீர் பாட்டில்கள் நம்வேதத்திலும் எழுதப்பட்டிருப்பது எத்தனை ஆச்சரியம்! நம் தேவன் நம் கண்ணீரை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நம்முடைய கண்ணீர்கள் ஒரு துருத்தியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கினறன. நம்முடைய வேதனைகள், பாடுகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய துருத்தியில் நம் கண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. என் கண்ணீரை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் துக்கங்களை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் தலையணையை நான் கண்ணீரால் நனைக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களை காணும் தேவன் உண்டு, உங்கள் கண்ணீரை கண்டு உங்களுக்கு விடுதலை அளிக்கும் தேவன் உண்டு. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்று சங்கீதம் 22:24 ல் வாசிக்கிறோமே! நம்முடைய உபத்திரவத்தை பார்த்து, அதை அற்பமாய் எண்ணாமல், தம்மை நோக்கி கூப்பிடும்போது, கேட்டு பதில் கொடுக்கும் உன்னத தேவன் நம் தேவனல்லவோ!. சங்.116 :8 ல் என் கண்ணை கண்ணீருக்கு விலக்கி காத்தார் என்று சங்கீத காரன் சாட்சியிடுகிறார். யோபு.16 :20 ல் நம்முடைய நண்பர்கள், நம்மை பரியாசம் பண்ணுகிறபோது கடவுள் அந்த கண்ணீரை துடைத்தார். எசேக்கியா அரசன் உண்மையும், உத்தமுமானவர், அவருக்கு நோய் ஏற்பட்ட பொது, மரணம் சம்பவிக்கும் என்று ஏசாயா கூறுகிறார். எசேக்கியா ராஜா அழுதார், இறைவனை நோக்கி கூப்பிட்டார், இறைவன் அந்த கண்ணீரை துடைத்தார், 15 ஆண்டுகள் ஜீவனை கூட்டி கொடுத்தார். பிரியமானவர்களே, இவைகள் நமக்கு சாட்சிகள், இயேசு ஆண்டவர் நமது கண்ணீர் துடைக்கவே அவர் கண்ணீர் வடித்தார், இரத்த வேர்வை சிந்தினார், மரணத்தை ஏற்றுக் கொண்டார். நமக்காக அவர் உயிர் கொடுத்து ஆசீர்வாதம் தந்தார். நமது துக்கத்தை சமாதானமாக மாற்றுவார், எனவே கலங்காதே திகையாதே, கர்த்தர் உன் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்