பகுதி 2: தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

பகுதி 2: தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

Bro. Barnabas

இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுதலையா?

இன்றைக்கு அநேக சுவிசேஷ கைப்பிரதிகளில் கடன் தொல்லையிலிருந்து கிறிஸ்து உங்களை விடுவிக்கிறார் என்று அழைப்பு விடுகிறார்

நீங்கள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்து போகும் கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் என்கிறார்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

எந்தவொரு வேத வாக்கியமாவது இயேசு கிறிஸ்து கடன் பிரச்சனையை தீர்ப்பார் என்று போதிக்கிறதா?
1) மனிதர்கள் ஏன் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்?
அதற்கு காரணம் அவர்கள் அவர்களுடைய சுய இச்சைகள் தான்
Jam 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

2) ஏன் கடன் வாங்குகிறார்கள்?
1Ti 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
இருக்கிறவைகள் போதும் என்கிற மனம் இவர்களுக்கு இல்லாது இருப்பத்தினால் அநேகர் கடன் படுகிறார்கள்
1Ti 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

3) கடன் வாங்கி செலுத்தாமல் போகிறவன் யார்?
Psa 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்...

கடன் வாங்கி செலுத்தாமற் போகிறவன் துன்மார்க்கன் என்று தேவன் தாவீது சொல்லி இருக்கிறார்

4) அப்படிப்பட்ட துன்மார்க்கனுக்கு தேவன் உதவி செய்வாரா?
Pro 15:29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்...
கடன் வாங்கி செலுத்தாமற்போகிற துன்மார்களுக்கு தேவன் தூரமாயிருக்கிறார்

5) நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அவருக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்
Pro 22:7 ,,, கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

நாம் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் தான் அடிமையாக இருக்க வேண்டும்
1Pe 2:16 ,,,,, தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
1Co 7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.

நீங்கள் கடன்பட்டு மனுஷருக்கு அடிமையாக இருக்கும் போது தேவனுக்கு எப்படி நீங்கள் அடிமையாக இருக்க முடியும்?
Rom 6:16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

எந்த வகையிலும் மனுஷருக்கு அடிமைகளாகதிருங்கள்
1Co 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

6) அன்பு செலுத்துகிற கடனேயல்லாமல் வேறொன்றிலும் கடன்படாதிருங்கள்
Rom 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்,,,

அப்படியென்றால் நம்முடைய கடன் பிரச்சனையை இயேசு கிறிஸ்து தீர்ப்பாரா?
ஒரு போதும் கடன்பிரச்சனைக்கு அவர் உதவி செய்ய மாட்டார்

கடனை அடைக்க நாம் பிரயாசப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
1) கடனை அடைப்பதற்கு வேலை வாய்ப்புக்காக ஜெபிக்கலாம்
2) கடனை அடைப்பதற்கு ஆயுசு நாட்களுக்காக ஜெபிக்கலாம்

இயேசு உங்கள் கடனை அடைப்பார் என்று சொல்லக்கூடிய எந்த கள்ளப் போதகர்களையும் நம்பாதிருங்கள்

தலையணை உபதேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தலையணை உபதேசங்கள் - Bro. Barnabas

தலையணை உபதேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தலையணை உபதேசங்கள் என்றால் என்ன?
தலையணை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு நன்றாக தெரியும்
நாம் இரவு நேரத்தில் இந்த தலையணை மீது தலை வைத்துப்படுத்தல் சுகமான தூக்கம் வரும்

இந்த தலையணையில் தூங்கி பழகியவர்களுக்கு அது இல்லாமல் அவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது

அதே போல் தான் பழையை ஏற்பாட்டில் இருந்த கள்ள தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு தலையணை போதனைகளை போதித்து அவர்களை தேவனைப் பற்றிய அறிவே இல்லாமல் செய்து விட்டார்கள்
Eze 13:16 எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

இந்த தீர்க்கதரிசிகள் போதித்து எல்லாம் என்ன உபதேசம் என்றால் உங்களுக்கு சமாதானம் சமாதானம் என்று தான் போதித்தார்கள்
Eze 13:10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

இன்றைக்கும் அநேக கள்ள போதகர்கள் ஜனங்களிடத்திலே சமாதானம் சமாதானம் என்று தான் பிரசங்கமே செய்கிறார்கள்

சமாதானம் என்ற தலையணைகளை தான் அவர்கள் தைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்து இருந்தார்கள். அந்த ஜனங்கள் அந்த தலையணைகளை நம்பி மோசம் போனார்கள்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

இன்றைக்கு நம்முடைய தேசங்கள் முழுவதும் இப்படிப்பட்ட அநேக கள்ளதீர்க்கதரிசிகள் இப்படிப்பட்ட அநேக தலையணைகளை தைத்து ஜனங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்
அவர்களுடைய தலையணைகளை பாருங்கள்

1) இயேசுவிடம் வாருங்கள் உங்கள் கடன் தொல்லையிலிருந்து விடுதலை
2) நோயிலிருந்து விடுதலை, பிசாசின் கட்டிலிருந்து விடுதலை
3) பில்லிய சூன்ய கட்டிலிருந்து விடுதலை
4) பூமிக்குரிய சகல ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்
5) நீங்கள் வீடு கட்டலாம். கார் வாங்கலாம்
6) ஐசுவர்யவான்களாகலாம்
7) தேவன் உங்களை 100 மடங்கு ஆசீர்வதிப்பார்
8) சகலமும் சம்பூரணமாய் புரண்டு வரும்
9) நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்
10) திருமணம் கைக்கூடும்
11) குழந்தை பாக்கியம் கிடைக்கும்
12) உங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும் பேர் பெற்று விளங்குவார்கள்
13) குடும்ப பிரச்சனையிலிருந்து விடுதலை
14) குடியிலிருந்து விடுதலை
15) கெட்ட பழக்க வழக்கத்திலிருந்து விடுதலை

இன்றைக்கு இப்படிப்படிப்பட்ட தலையணைகளை உபதேசங்களினால் ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்

இப்படிப்படி போதிக்கிறவர்கள் தங்களுடைய இருதயத்தில் இருப்பதையும் தங்களுடைய ஆவியின் ஏவுதலினாலே போதிக்கிறார்கள்
Eze 13:2 ....தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Eze 13:3 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

இப்படிப்பட்டவர்கள் வனாந்திர நரிகளுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்
Eze 13:4 இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

இவர்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறார்கள்
Eze 13:6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?

அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறார்கள்
1) பிறந்த குழந்தைக்கு பங்காளர் திட்டம்
2) வளரக்கூடிய குழந்தைகளுக்கு பங்காளர் திட்டம்
3) வாலிபர்களுக்கு பங்காளர் திட்டம்
4) குடும்ப பங்காளர் திட்டம்
இன்னும் வகைவகையான பங்காளர் திட்டங்கள் எல்லாம் இருக்கிறது

இந்த திட்டங்களில் சேர்ந்து தங்களுடைய ஆத்துமாக்களை இந்த பொய் தீர்க்கதரிசிகள் வேட்டையாடுவது கூட தெரியாமல் காணிக்கை அனுப்பிக் கொண்டு இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை

இவர்கள் என்ன போதிக்கிறார்கள் என்று பாருங்கள்
Eze 13:19 சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

இவர்களுடைய வேலை என்னவென்று பாருங்கள்
Eze 13:22 நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,

இப்படிப்பட்ட கள்ள போதகர்கள் நீதிமானின் இருதயத்தை முறியப்பண்ணி, துன்மார்க்கரின் கைகளை பலப்படுத்துகிறார்கள்

தேவன் இவர்களுடைய உபதேசங்களை பொய்யாக்குவேன் என்று வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்
Eze 13:20 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,
Eze 13:21 உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

இந்த தலையணை உபதேசங்கள் புதிய ஏற்பாட்டுக்கு உபதேசத்துக்கு பொருந்தி வருமா என்று கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக் கொள்ளுவோம்

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள்

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Bro. Barnabas

நம்முடைய புதிய ஏற்பாட்டில் ஏழு ஞானஸ்நானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன என்பதையும் எந்த ஞானஸ்நானம் நமக்கு இன்றைக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்பதையும் வேத வாக்கியத்தைக் கொண்டு அறிந்து கொள்வோம்

1. நோவா தன் குடும்பத்தோடு பேழைக்குள்ளாக பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம்

நோவாவின் காலத்தில் தேவன் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி உலகத்தை தேவன் அழித்தார், பேழை முழுவதும் ஜலத்தினால் மூடப்பட்டு இருந்தது. அதைக் குறித்து தேவன் சொல்லும் போது அவர்கள் பேழைக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள் என்கிறார்
1Pe 3:20 ..... அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
இந்த ஞானஸ்நானத்தை இன்றைக்கு நாம் பெற முடியுமா என்றால் நாம் பெற முடியாது

2. இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்குள்ளாக ஜலத்தினாலும் மேகத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து மோசேயின் மூலமாக விடுதலையாகி வரும் போது செங்கடலை கடந்த போது இரண்டு பக்கமும் தண்ணீர் மதிலாக நின்றது மேலே அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் மூடி இருந்தது, அதற்குள்ளாக அவர்கள் கடந்து போனார்கள். இதைக் குறித்து தேவன் சொல்லும் போது அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்கிறார்
1Co 10:1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
1Co 10:2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
இந்த ஞானஸ்நானத்தை நாம் இன்றைக்கு பெற முடியாது

3. யோவான் ஸ்நானகனும் இயேசுகிறிஸ்துவும் கொடுத்த மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்

இந்த ஞானஸ்நானம் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானமாக இருந்தது.
Mar 1:4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
Mar 1:5 அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இந்த ஞானஸ்நானம் தேவனுடைய ஆலோசனையாக இருந்தது
Luk 7:30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

Joh 3:22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
கிறிஸ்துவின் சிலுவைக்கு பின்பு இந்த ஞானஸ்நானம் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு இந்த ஞானஸ்நானத்தினால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை
Act 19:4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இந்த ஞானஸ்நானத்தையும் இன்றைக்கும் நாம் பெற முடியாது

4. இயேசு கிறிஸ்து மூழ்கின பாடுகளின் ஞானஸ்நானம்

இது கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் மூலம் இந்த ஞானஸ்நானத்தை பெற்றார், இந்த பாடுகளின் மூலம் முழ்குவதை கிறிஸ்து ஸ்நானத்தோடு ஒப்பிட்டு பேசினார். இதை அவருடைய அப்போஸ்தலர்களும் பெறுவார்கள் என்று சொன்னார்
Mat 20:22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
இன்றைக்கு இந்த ஞானஸ்நானத்தையும் நாம் பெற முடியாது

5. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்

இந்த ஞானஸ்நானம் விசேஷமாக அவருடைய அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே வாக்குத்தத்தம் செய்யப்பட்டது, பாருங்கள் இந்த ஞானஸ்நானம் கட்டளை அல்ல. பிதாவின் வாக்குத்தத்தம் இது அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நிறைவேறியது

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பிதாவின் வாக்குத்தத்தம் 

Luk 24:49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
Act 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
Act 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
பிதாவின் வாக்குத்தத்தம் சில நாளைக்குள்ளே நிறைவேறும் என்று அப்போஸ்தலர்களுக்குத் தான் கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிற்பாடு அப்போஸ்தலர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கிறிஸ்து அவர்களுக்கு கட்டளையிட்டார்
Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
இந்த ஞானஸ்நானத்தையும் இன்றைக்கு நாம் பெற முடியாது

6. அக்கினி ஞானஸ்நானம்

இந்த அக்கினி ஞானஸ்நானம் என்பது பதரை(கீழ்ப்படியாத, கனிகொடாதா மரம்) அக்கினியால் சுட்டொரிப்பதாகும். இதை நியாயத்தீர்ப்பு நாளிலே கிறிஸ்து தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு செய்வார்

Luk 3:16 ..... அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
Luk 3:17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
Mat 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆனால் இன்றைக்கு அநேகர் இந்த சத்தியங்களை உணராமல் அக்கினி ஞானஸ்நானம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

7. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்

கிறிஸ்து உயிர்த்தெழுந்து நாற்பது நாள் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகி பரமேறி போகும் போது உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் கட்டளையிட்டது இந்த ஒரே ஞானஸ்நானம் தான் பாவமன்னிப்புக்கென்றும் கிறிஸ்துவின் மரணத்தின் சாயலுக்கு ஒப்பாய் இணைக்கிறது
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இந்த ஞானஸ்நானம் கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துவின் நாமம் என்று பார்க்கும் போது அவருடைய அதிகாரத்தை குறிக்கிறது. அவருடைய அதிகாரம் தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகும்
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

இன்றைக்கு இந்த ஒரே ஞானஸ்நானம் தான் உலகமெங்கும் கிறிஸ்துவினால் கட்டளையிடப்பட்டு இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் சுமார் கி.பி 60-65ல் எழுதும் போது இந்த ஒரே ஞானஸ்நானம் மாத்திரம் இருக்கிறது என்று எழுதுகிறார்
Eph 4:5 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒரே ஞானஸ்நானமும்,
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் கிறிஸ்து கட்டளையிட்ட ஞானஸ்நானத்தை எடுத்து வீட்டீர்களா?

ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா ?

ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா ? - Bro. Barnabas

இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள்

அநேக சபைகளில் ரெவரெண்ட்(REVEREND) என்று பட்டம் கொடுக்கிறார்கள்
வேத வாக்கியத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று யார் அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் பார்ப்போம்

வேத வாக்கியத்தில் ஒரே ஒருவர் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார் அவர் யார் என்றால் நம்முடைய பரலோத்தின் தேவன் மாத்திரமே

தேவன் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று வேத வாக்கியத்தில் ஒரே ஒரு முறை அழைக்கப்பட்டு இருக்கிறார்

Psa 111:9 (KJV) He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend is his name.

Psa 111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

இந்த வேத வாக்கியத்தில் பயங்கரமுமானவர் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆங்கில வேதாகமத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்

ரெவரெண்ட்(REVEREND) என்பதற்கு எபிரெய வார்த்தைக்கான எண் 3372 அதற்கான அர்த்தத்தை பாருங்கள்
இதற்கான அர்த்தம் என்னவென்றால் பயப்படத்தக்கவர் உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்

உயர்வாய் மதிக்கப்படத்தக்கவரும் பயப்படத்தக்கவரும் தேவன் ஒருவர் மாத்திரமே
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் எந்தவொரு பரிசுத்த மனுஷருக்கும் ரெவரெண்ட்(REVEREND) என்று வார்த்தையை பயன்படுத்தவில்லை பிதாவாகிய தேவன் ஒருவருக்கு மாத்திரமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது

அப்படியென்றால் மனிதர்கள் தங்களை ரெவரெண்ட்(REVEREND) என்று அழைத்துக் கொள்ளும் போது அவர்கள் தங்களை தேவனுக்கு சமமாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்

ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் தன்னை போப் ஆண்டவர் (பிதாவாகிய கர்த்தர் என்று அர்த்தம்) என்று அழைத்துக் கொள்ளும் போது தன்னை பிதாவும் கர்த்தரும் என்று தான் சொல்லிக் கொள்ளுகிறார்

தங்களை ரெவரெண்ட்(REVEREND) (பயப்படத்தக்கவர், உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்) என்று அழைத்துக் கொள்ளுகிறவர்களும் போப் ஆண்டவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளக் கூடிய ரோம கத்தோலிக்க சபையின் தலைவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
எந்தவொரு வித்தியாசமும் இல்லை

இந்த பட்டங்களை மனிதர்கள் ஏன் தரித்துக் கொள்ளுகிறார்கள்?
Mat 23:5 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
Mat 23:6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
Mat 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.

மனுஷருக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது
Luk 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

போதகர், ரபீ, குரு (வழிநடத்துனர்) என்றோ பிதா என்றோ ஒருவரையும் அழைக்க வேண்டாம் என்று கிறிஸ்து கட்டளையிட்டு இருக்கிறார்
Mat 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
Mat 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
Mat 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
Mat 23:11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
Mat 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

நாம் எல்லாரும் சகோதரராயிருக்கிறோம்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங் கொள்ள வேண்டியது அவசியமா?

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் ஜெயங் கொள்ள வேண்டியது அவசியமா? - Bro.Barnabas

அநேக கிறிஸ்தவர்கள் கீழே உள்ள காரியங்களை செய்தாலே பரலோகம் போய் விடலாம் என்று நினைக்கிறார்கள்

1) வேதாகமம் வாசித்தால் போதும்
2) இயேசுவை விசுவாசித்தால் போதும்
3) தேவனை விசுவாசித்தால் போதும்
4) பரிசுத்த ஆவியானரை விசுவாசித்தல் போதும்
5) ஆராதனைக்கு கலந்து கொண்டால் போதும்
6) காணிக்கை கொடுத்தால் போதும்
7) கைகளை உயர்த்தி ஜெபித்தால் போதும்
8) கைகளை தட்டிக் கொண்டு சத்தமாக இசையோடு பாடினால் போதும்
9) ஸ்தோத்திர பலிகளை சொல்லிக் கொண்டு இருந்தால் போதும்
10) இயேசுவை பற்றி பிரசங்கம் பண்ணினால் போதும்
11) ஞானஸ்நானம் எடுத்தால் போதும்
12) மனிதன் ஏற்படுத்தின கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடினால் போதும்
13) பொய்யான அற்புதங்களை செய்தாலோ அல்லது பார்த்தாலே போதும்
14) பிசாசுகளை விரட்டினால் போதும்
15) சுவிசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டாலே போதும்
16) விசுவாசம் மட்டும் போதும்

இப்படி பலவகையான உபதேசங்களை பின்பற்றுகிறார்கள்

ஆனால் இந்த பூமிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையில் உலகத்தின் மீதும் பாவத்தின் மீதும் சோதனைகளின் மீதும் ஜெயங்கொள்ளாத பட்சத்தில் நமக்கு பரலோகமும் இல்லை பரலோகத்தில் பலனும் இல்லை

கிருபையினால் தேவன் நமக்கு ஆசீர்வாதங்களை தந்து விடுவார் என்று உங்களை ஏமாற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்

தேவனுடைய சகல கட்டளைகளையும் கைக் கொண்டு கிறிஸ்துவைப் போல பூரண புருஷராகும் போதுதான் தேவன் நமக்கு பரலோகத்தையும் அதற்கான பலன்களையும் நமக்கு கொடுப்பார்

பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தேவனுடைய கிருபை நம்மை காப்பற்றும் என்று கனவு கண்டு இருப்போம் என்றால் கிறிஸ்து வரும் போது நாம் ஏமாந்து தான் போவோம்

தேவனுடைய கிருபை வேண்டுமென்றால் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது அதை அவர் கொடுக்கிறார்

யாருக்கும் தேவன் கிருபையை இலவசமாக கொடுப்பதில்லை

ஜெயங் கொள்ளும் போது தான் தேவன் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை நமக்கு கொடுக்கிறார்

கீழே உள்ள வசனங்களை தயவு செய்து வாசித்து பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்
1) Rev 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

2) Rev 2:10 .... ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
Rev 2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

3) Rev 2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

4) Rev 2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
Rev 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
Rev 2:27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
Rev 2:28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Rev 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

5) Rev 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

6) Rev 3:12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

7) Rev 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

1Co 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1Co 15:58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

கிறிஸ்தவம் என்பது மார்க்கமா அல்லது மதமா ?

கிறிஸ்தவம் என்பது மார்க்கமா அல்லது மதமா? - Bro. Barnabas

அநேகர் தங்களை கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். நம்முடைய வேதாகமத்தில் தேவன் கிறிஸ்தவத்தை என்னவென்று அழைக்கிறார் என்று பார்ப்போம்

கிறிஸ்வத்தை மதம் என்று தேவன் ஒருபோதும் அழைக்கவில்லை அதை அவர் மார்க்கம் என்று தான் அடையாளப்படுத்துகிறார்
மார்க்கம் என்றால் வழி(பாதை) என்று அர்த்தம்

அந்த வழி யார்?

Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

1) கிறிஸ்தவம் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Act 19:9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, ,,,
Act 22:4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி,,
Act 24:22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் ....
Act 25:19 தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், ....

2) கிறிஸ்தவம் தேவனுடைய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Luk 20:21 ,,,தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
Act 18:26 ,,,, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.

3) கிறிஸ்தவம் ஜீவ மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Act 2:28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; ,,,

4) கிறிஸ்தவம் கர்த்தருடைய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Act 18:25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, ,,,,

5) கிறிஸ்தவம் சத்திய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
2Pe 2:2 ,,, அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

6) கிறிஸ்தவம் நீதியின் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
2Pe 2:21 அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு ,,,,

7) கிறிஸ்தவம் புதிதும் ஜீவனுமான மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Heb 10:19 ,,,,புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

இந்த மார்க்கத்தில் நாம் எப்படி சேர வேண்டும்?
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Heb 10:19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
Heb 10:20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
Heb 10:21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
Heb 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

ஆகையால் கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல அது தேவனுடைய மார்க்கமாக(வழி) இருக்கிறது

நாம் கிறிஸ்தவ மார்க்கத்தை சார்ந்தவர்கள்

தீவிரவாத இயக்க தலைவன் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுகொண்ட அற்புத சாட்சி

தீவிரவாத  இயக்க தலைவன் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுகொண்ட அற்புத சாட்சி


Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

தற்போது தீவிவாத இயக்கங்களில் மிக கொடூரமாக கருத்தப்படுவது ஆப்ரிக்க தேசத்தை ரத்தால் உறைய வைத்து கொண்டிருக்கும் போகோ ஹராம் என்ற தீவிரவாத இயக்கம் தான். சமீபத்தில் 400 பேர்களை கழுத்தை அறுத்து கொன்றதையும், சுமார் 187 பள்ளி பெண் குழந்தைகளை கடத்தி கற்பழித்து விற்க முயற்சித்து வருவதையும் அனைவரும் அறிந்ததே. இவர்கள் கிறிஸ்தவர்களை கொன்று அவர்களின் ரத்தத்தை குடிப்பார்களாம். அந்த அளவிற்கு கொடூரமாக மாறி உள்ளது இன்றைய மனிதனின் நிலைமை.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கண்ணீரோடு ஆப்ரிக்க தேசத்திற்காக ஜெபித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இயக்கத்தை வழிநடத்தி வந்த ஷேய்க் ஹளிறு என்பவர் சில வருடங்களுக்கு முன் விலகினார். இது சிலருக்கு மர்மமாக இருந்தாலும் தற்போது இவர் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு கண்ணீரோடு ஜெபித்து வருகிறார். தன்னுடைய பாவத்தை மன்னித்த தேவனுக்காக உண்மையாக வாழ்ந்து வருகிறார். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை koduththulladhu.

இவர் தன்னுடைய சாட்சியை இங்கே கொடுத்துள்ளார்.
https://groups.google.com/forum/#!topic/lambas/j3PyobxKH_A
http://www.mjemagazine.com/ex-boko-haram-leader-now-converted-to-the-christian/
http://www.nairaland.com/861890/ex-boko-haram-leader-now

இதில் தான் இஸ்லாமிய மரபுப்படி வளர்க்கப்பட்டதாகவும், pin தீவிரவாத இயக்கத்தில் இனைந்து பலரை கொன்று குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மட்டும் அல்லாது தன்னுடைய ஆசான் ஒசாமா பின் லேடன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று தான் ஓர் புதிய மனிதனாக கிறிஸ்துவுக்குள் பிறந்திருப்பதாக சந்தோசமாக கூறுகிறார். இப்படிப்பட்ட மனிதர்கள் தேவனுக்காக வைராக்கியமாய் எழும்ப நாம் தொடர்ந்து ஜெபிப்போம். 

பகுதி:4 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

பகுதி:4 தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இயேசு கிறிஸ்து வீடுவாசலை ஏற்படுத்தி தருகிறாரா? - Bro. Barnabas

இன்றைக்கு அநேக கள்ளபோதகர்கள் நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு உதவி செய்கிறார் என்று இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை பண்ணுகிறார்கள்

பின்பு ஒரு சிலரை மேடையேற்றி நான் இவ்வளவு காணிக்கை கொடுத்தேன் இயேசு கிறிஸ்து நான் சொந்தமாக வீட்டை கட்டுவதற்கு பண உதவி செய்தார் சாட்சி வேறு சொல்ல வைக்கிறார்கள்

இந்த பூமிக்குரிய வாழ்க்கைக்கு தேவன் நமக்கு என்ன வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார் என்று வேத வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம்

இயேசு கிறிஸ்துவுக்கு இந்த பூமியிலே சொந்த வீடு இருந்ததா?

இயேசு கிறிஸ்துவுக்கு இந்த பூமியிலே தலை சாய்க்க கூட இட மில்லை
அவரைப்பின்பற்றிப்போனால் என்ன கிடைக்கும்?
Luk 9:57 அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Luk 9:58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
2Ti 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட போது அங்கே இருந்த கிறிஸ்தவ விசுவாசிகள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
Act 2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
Act 2:45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
Act 4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
Act 4:35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

தங்களுடைய சொந்த நிலங்களை விற்று அவைகளை கொண்டு பகிர்ந்து கொடுத்து அதன் மூலமாக தேவனுடைய சத்தியத்தை அறிவித்தார்கள்

அப்போஸ்தலர்களுக்கு சொந்தமாக வீடுகள் இருந்ததா?
அவர்கள் தங்குவதற்கு இடங்கள் கூட இல்லை என்று தான் சொல்லுகிறார்கள்
1Co 4:11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
1Co 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
1Co 4:13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

தேவனுடைய உண்மையுள்ள பிள்ளைகள் இந்த பூமிக்குரியவைகளுக்காக ஒரு போதும் கவலைப்படமாட்டார்கள்

தேவனுக்கும் உலக பொருளுக்கும் நம்மால் ஊழியம் செய்ய முடியமா?
Luk 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக போதகர்கள் தங்களுடைய கூட்டங்களில் சொல்லக்கூடிய வாக்குத்தத்தங்களை பாருங்கள்
1) வீடு வாசலை ஏற்படுத்தி தருகிறார்
2) கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை
3) சொத்து பிரச்சனையிலிருந்து விடுதலை

இப்படி அநேக பூமிக்குரிய காரியங்களை போதித்து ஜனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் என்ன வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார் என்று பாருங்கள்

நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும் போது அவர் நமக்கு செய்யக்கூடிய வாக்குத்தத்தம் இது தான்
1) உணவு
2) உடை

இது மாத்திரமே கிறிஸ்தவர்களுக்கு பூமிக்குரிய வகையில் அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்
Mat 6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
Mat 6:29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mat 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
Mat 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
Mat 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
Mat 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
Mat 6:34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் என்ன கட்டளை கொடுக்கிறார் என்று பாருங்கள்
1Ti 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1Ti 6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.

எங்களுக்கு காணிக்கை கொடுத்தால் தேவன் உங்களுக்கு வீடு கட்ட உதவி செய்வார் என்று சொல்லக்கூடிய கள்ளபோதகர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்
Phi 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
Phi 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
Phi 3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Rom 16:18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

இயேசுவின் இரத்தம் ஜெயமா ?

இயேசுவின் இரத்தம் ஜெயமா?

செய்தி: Bro. Barnabas

அநேக கிறிஸ்தவ வீடுகளில் இந்த வார்த்தையை வசன அட்டையாக இருப்பதை பார்த்து இருப்பீர்கள்

உண்மையில் இப்படிப்பட்ட வசனம் வேதாகமத்தில் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். அப்படி நேரடியான எந்தவொரு ஒரு வசனத்தையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது

இன்னும் சில போதகர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஜெபித்து சிலருடைய வீடுகளில் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி வீடு முழுவதும் தெளித்துக் கொண்டு இருக்கிறார்கள்
ஏனென்றால் அப்போது தான் பிசாசு ஒடி, வீடு பரிசுத்தமாகுமாம் இப்படி சொல்லி கிறிஸ்தவ ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்

உலகத்தை ஜெயிப்பது நம்முடைய விசுவாசமா அல்லது இயேசுவின் இரத்தமா?

A) நம்முடைய விசுவாமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது
1Jo 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

நாம் உலகத்தை ஜெயிக்க வேண்டுமானால் யாரை விசுவாசிக்க வேண்டும்?
1Jo 5:5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
நாம் தேவனால் உண்டாயிருந்தோமானல் உலகத்தை ஜெயிப்போம்
1Jo 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; …

B) இயேசு உலகத்தை எப்படி ஜெயித்தார்?
Joh 16:33 ... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்து இருக்கிறார் என்றால் எந்த இரத்தத்தை கொண்டு ஜெயித்து இருக்கிறார்

இயேசு கிறிஸ்து தேவனுடைய கட்டளைகளை விசுவாசித்து முழுவதும் அதற்கு கீழ்ப்படிந்தபடியினால் தான் உலகத்தை அவர் ஜெயித்தார்

C) பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை உலகத்தை எப்படி ஜெயித்தார்கள்?
Heb 11:33 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,

அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்ன செய்கிறது?
1) கிறிஸ்துவின் இரத்ததினால் நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இருக்கிறது
Eph 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
Col 1:14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
1Pe 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1Jo 1:7 ,,, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

2) கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டு பண்ணி இருக்கிறார்
Col 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

3) கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே நித்திய மீட்பை உண்டு பண்ணியிருக்கிறார்
Heb 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

4) கிறிஸ்துவின் இரத்தம் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நம்முடைய மனச்சாட்சியை சுத்திகரிக்கிறது
Heb 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

5) கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது
Heb 10:20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

6) கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்
Rev 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

இப்படி அநேக வேத வாக்கியங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது

ஆனால் வேத வசனத்தின்படி நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது
1Jo 5:4 ... நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

வேத வாக்கியம் அல்லாத எந்த ஒரு வசனத்தையும் அங்கிகரிக்காதீர்கள்

ஞானஸ்நானத்தைப் பற்றிய சத்தியங்கள்

ஞானஸ்நானத்தைப் பற்றிய சத்தியங்கள்

Message: Br. Barnabas

எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்?

இன்றைக்கு அநேகர் யாருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதை குறித்து சில குழப்பமான விளக்கங்களை கொடுக்கிறார்கள்

1) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்
2) இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம்
இந்த இரண்டு வகையான ஞானஸ்நானத்தில் எந்த நாமத்தில் ஞானஸ்நானத்தை நாம் பெற வேண்டும்

முதலில் நாமம் என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்

நாமம் என்ற வார்த்தைக்கு கிரேக்க வேதாகம எண் 3686 அதற்கான அர்த்தம் கிரேக்க வேதாகமத்தில் பெயர் என்றும் அதிகாரம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது

ஒருவருடைய நாமம் என்று நாம் சொல்லும் போது அது அவருடைய பெயராகவும் அதிகாரமாகவும் இருக்கிறது
உதாரணம் ஒன்றை பாருங்கள்
Est 8:8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

1) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி போகும் போது சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார் என்று பாருங்கள்
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

2) இந்த வசனத்தில் கிறிஸ்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுங்கள் என்று சொல்லுவதற்கு அவருக்கு என்ன கொடுக்கப்பட்டது என்று பாருங்கள்

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

3) நாமம் என்றால் பெயர் மாத்திரம் இல்லை அதில் அதிகாரமும் அடங்கி இருக்கிறது
Act 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

4) அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் ஞானஸ்நான விசயத்தில் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் இயேசுவின் நாமத்தினாலே(அதிகாரத்தினாலே) ஞானஸ்நானங் கொடுத்தார்கள்
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.....
Act 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
Act 10:48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். ,,,,
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

5) அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் ஒருபோதும் ஞானஸ்நான விசயத்தில் கிறிஸ்துவினுடைய கட்டளையை அவர்கள் மீறவும் இல்லை சுயமாய் போதிக்கவும் இல்லை
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

அப்படி அவர்கள் சுயமாய் போதிக்கவில்லை என்றால் இயேசுவின் நாமத்தினாலே அவர்கள் எப்படி ஞாஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள்?
Col 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

ஆவிக்குரிய காரியத்தில் எதை செய்தாலும் கிறிஸ்துவின் நாமத்தில்(அதிகாரத்தில்) தான் செய்ய வேண்டும்

6) ஞானஸ்நான விசயத்தில் கிறிஸ்துவின் அதிகாரம் என்ன?
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இயேசுவின் நாமத்தில் என்று சொல்லும் போது ஞானஸ்நான விசயத்தில் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் என்ன சொல்லுகிறதோ அதை தான் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் செய்தார்கள்

இன்றைக்கும் சபைக்கு மூலைக்கல்லாக இயேசு கிறிஸ்து இருக்கிறார் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரமாக இருக்கிறார்கள் அதின் மீது தான் நாம் ஆவிக்குரிய கற்களாக கட்டப்பட்டு வருகிறோம்
Eph 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

ஞானஸ்நான விசயத்தில் கிறிஸ்துவின்(அதிகாரம்) நாமம் என்ன?
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது தான் சரியானது

அப்படி இல்லை இயேசுவின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறுகிறார்கள்
Gal 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Gal 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Gal 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.