கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் எப்படிப்பட்ட நடக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்?

கிறிஸ்தவ குடும்பம்: புருஷன்(கணவன்) எப்படிப்பட்ட நடக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்?

புருஷன் தன் மனைவியினிடத்தில் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்றும் அவளுக்கு செய்ய வேண்டிய கடமையை எப்படி செய்ய வேண்டும் எனபதைக் குறித்துக் கற்றுக் கொண்டு இருக்கிறோம்

இப்போது புருஷன் எப்படிப்பட்ட நடக்கையுள்ளவான இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

1) புருஷன் தன் மனைவியினிடத்தில் எந்த சூழ்நிலையிலும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
யோபு தன் மனைவியினிடத்தில் உண்மையுள்ளவராக இருந்தார்
Job 31:9 என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,
Job 31:10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

2) யோபு தன் மனைவியினிடத்தில் எப்படி உண்மையுள்ளவராக இருக்க முடிந்தது?
Job 31:1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?

தன் மனைவி தவிர வேறு எந்த ஸ்திரீயையும் இச்சையோடு பார்ப்பதில்லை என்று யோபு தன் கண்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார்

நாம் நம் கண்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறோமா?

3) பிறனுடைய மனைவியினிடத்தில் பிரவேசிப்பனும் தொடுகிறவனும் ஆக்கினைக்கு தப்பான்
Pro 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிக்கவும் கூடாது அவளை தொடக்கூடாது
ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் தன் ஆத்துமாவை கொடுத்துப்போடுகிறான்
Pro 6:32 ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

4) அநேக கள்ள உறவுகளினால் இன்றைக்கு அநேக கொலைகள் நடக்கிறது.
Pro 6:34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
Pro 6:35 அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

5) புருஷன் தன் மனைவியை நேசிக்கப்படத்தக்க பெண்மானும் அழகான வரையாடுகளைப் போல நினைக்க வேண்டும்.
Pro 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

6) புருஷனுக்கு மனைவியின் ஸ்தனங்களே திருப்தி செய்ய வேண்டும், மனைவியின் நேசத்தால் மட்டும் எப்பொழுதும் மயங்கி இருக்க வேண்டும்
Pro 5:15 உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
Pro 5:16 உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.(பாயலாமா என்று தான் எபிரெய வேதாகமம் சொல்லுகிறது)
Pro 5:17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
Pro 5:18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

7) மனைவியின் நேசத்தால் மட்டும் மயங்கி இருக்கக்கூடிய புருஷன் அந்நிய ஸ்திரீயின் மேல் மயங்கி அவளுடைய மார்பை தழுவுவானா?
Pro 5:20 என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
நிச்சயம் அப்படிப்பட்ட துன்மார்க்கான காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டான்
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

8) புருஷர்களோ வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.
1Co 6:18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

9) புருஷன் சொந்த குடும்பத்தை நன்றாக நடத்தக் கூடியவனாக இருக்க வேண்டும்
1Ti 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
1Ti 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
ஒருவன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருக்கும் போது தேவனுடைய சபையையும் அவனால் வழி நடத்த முடியாது

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கிறிஸ்தவக் குடும்பம் (கணவன் மனைவி, பிள்ளைகள்) எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்