தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளையா அல்லது புதிய ஏற்பாட்டின் கட்டளையா?

தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளையா அல்லது புதிய ஏற்பாட்டின் கட்டளையா?

ஒரு சிலர் என்னோடு தனிப்பட்ட முறையில் தசமபாகம் என்பது நியாயப்பிரமாணத்தின் கட்டளை இல்லை ஆபிரகாமும் யாக்கோபும் கொடுத்து இருக்கிறார்கள் என்று வாக்குவாதம் செய்கிறார்கள்
அது உண்மை தான்

1) ஆபிரகாமும் யாக்கோபும் தசமபாகம் கொடுத்தார்கள்
Gen 14:20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
Gen 28:22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

2) இந்த தசமபாக காணிக்கையை தான் தேவன் நியாயப்பிரமாணத்தில் ஒரு கட்டளையாக கொடுத்தார்
Lev 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Heb 7:5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

3) இந்த கட்டளை மாத்திரம் அல்ல முற்பிதாக்களுக்கு இரத்தத்தை புசிக்க கூடாது என்கிற கட்டளையும் கொடுத்தார்
Gen 9:4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

4) இதே கட்டளையை தேவன் நியாயப்பிரமாணத்தில் ஒரு கட்டளையாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார்
Lev 17:14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

5) இஸ்ரவேலர்கள் தசமபாகமாக என்ன கொடுத்தார்கள்?
Deu 12:17 உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
Deu 14:22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Deu 14:23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.
2Ch 31:5 இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.

6) இயேசு கிறிஸ்துவும் கூட இஸ்ரவேலர்கள் இதை தான் தசமபாகம் கொடுத்தார்கள் என்று சாட்சி கொடுக்கிறார்
Mat 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, ,,,,,,

தேவனுடைய வார்த்தையின் படி தான் தசமபாக கொடுக்க வேண்டும் வலியுறுத்துகிறவர்கள் ஏன் இதையெல்லாம் தசமபாகமாக கேட்பது இல்லை

இந்த வேத வாக்கியங்களை பாருங்கள் இஸ்ரவேலர்கள் தசமபாகம் என்று பணத்தை கொடுக்கவில்லை

7) இன்றைக்கு தசமபாகம் என்று அநேகர் எதை கேட்கிறார்கள்?
பணம்
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1Ti 6:11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

8) தேவன் இன்றைக்கு புதிய உடன்படிக்கையில் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிற காணிக்கை இது தான்
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு கிறிஸ்தவர்கள் தசமபாகம் கொடுத்தார்கள் என்று ஒரு வசனத்தை எனக்கு ஆதாரமாக காண்பியுங்கள்

புதிய ஏற்பாட்டில் ஒரு கிறிஸ்தவன் தசமபாகம் கொடுத்தான் என்ற வசனம் இருந்தால் (அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்திற்கு மேல்) எனக்கு தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் இந்த தசமபாக விசயத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள்

1 comments:

  1. விடுங்க ப்ரோ ....இவங்க இப்படித்தான்

    ReplyDelete